Latest Updates
-
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது!
பூட்டிய காரில் குழந்தைகளை விடாதீங்க: உயிருக்கு உலைவைக்கும்!

பூட்டிய காருக்குள் குழந்தைகள் இருப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ராப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மூளை பாதிக்கும்
காரில் பயணம் செய்யும் போது வெளிப்புறத்தில் 29 டிகிரி வெப்பம் நிலவும் நாளில் காருக்குள் ஏர் கண்டிஷன் மூலம் 20 டிகிரி வெப்ப நிலையாக குறையும். அதேசமயம் கார் நின்ற அடுத்த 10வது நிமிடம் வெப்பநிலை 3 மடங்காக அதிகரிக்கும். இந்த திடீர் வெப்ப நிலை அதிகரிப்பால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படலாம் என்று குழுவின் பேராசிரியர் பீட்டர் ஓ மெரா தெரிவித்துள்ளார்.
வெப்பமான காருக்குள் சிக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக உடலில் நீர் வற்றி போய் மூளை பாதிக்கப்படும். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு விரைவாக சோர்வு ஏற்பட்டு உடல்நிலை சீர்கெடும். நீண்ட நேரம் காருக்குள் வெப்பத்தில் இருக்கும் குழந்தைகள் சுயநினைவிழந்து பிறகு மீள முடியாத கோமா நிலைக்கு செல்லும் ஆபத்தும் இருக்கிறது.
இதை தவிர்க்க சூடேறிய காருக்குள் இருந்து வண்டி நின்றதும் குழந்தைகளை உடனடியாக வெளியே கொண்டு வர வேண்டியது அவசியம். நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்படும் கார் கதவுகளை பூட்டி குழந்தைகள் ஏறி அமராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மைக்ரோவேவ் ஓவனுக்குள் இருப்பதுபோல் குழந்தைகள் வெந்துவிடும் என்றம் பீட்டர் ஓ மெரா தெரிவித்துள்ளார்.
செல்லப் பிராணிகளுக்கு ஆபத்து
நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்பட்ட காருக்குள் குழந்தை, செல்ல பிராணிகள் அதிக நேரம் இருக்க நேர்ந்தால் உயிரிழக்கும் அபாயம் உண்டு என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் காருக்குள் வெப்பத்தில் சிக்கிய 1,500 குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











