Just In
- 17 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 54 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 1 hr ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 5 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Movies தளபதி 69 படத்தை இயக்குகிறேனா?.. வெற்றிமாறனே சொன்ன பதிலை பாருங்க.. வந்தது முற்றுப்புள்ளி
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புட்டிப்பால் வேண்டாம்! தாய்ப்பால்தான் செல்லங்களுக்கு ஏற்றது!
பெரும்பாலான பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. மாறாக புட்டிப்பால் கொடுத்து பழக்கப்படுத்திவிடுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அழகு கெட்டுவிடும் என்பதே. தாய்ப்பால் கொடுப்பதால் மார்பின் அழகு கெட்டுப்போவதில்லை மாறாக மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தாய்மார்களை பாதுகாக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
விஞ்ஞான ரீதியான பார்த்தால் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாயின் மனநலம் பாதுகாக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது. கருப்பைப் புற்று நோய், மார்பகப் புற்று நோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.
தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில்98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. எனவே தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் தாயும் ஆரோக்கியமாக வாழலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.