குட்டீஸ் தூங்காம அடம் பிடிக்கிறாங்களா? ஈஸியா தூங்க வைக்கலாம்!

By Maha

Baby Sleep
குழந்தைகளுக்கு ஓய்வும், உறக்கமும் போதுமான அளவு இருக்க வேண்டும். இல்லையெனில் ஓய்வின்றி அழுது சோர்வடைந்துவிடும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு 16 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பது நிபுணர்களது கருத்து. குழந்தைகள் பெரும்பாலும் அழுவதற்குக் காரணம் போதுமான தூக்கம் இல்லாததே ஆகும். அந்த தூக்கமின்மையே குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி அழ வைக்கிறது. அதற்கு குழந்தைகள் அழாமல் நிம்மதியாக தூங்க வேண்டும். இதற்கு குழந்தை நல நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.

செல்லங்களைத் தூங்க வைக்க வழி

குழந்தைகளை பகலில் ஏதேனும் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுத்தி அதன் தூக்க நேரத்தை குறைக்கலாம். இதனால் செல்லங்கள் களைப்படைந்து இரவில் தூங்கிவிடுவர்.

தாய்க்கு தன் குழந்தை எப்போது படுக்கும்,விளையாடும்,பசிக்கும் என்று நன்கு தெரியும். அதை நன்கு புரிந்து தூங்கும் நேரத்தை குறைத்து விளையாடும் நேரத்தை அதிகபடுத்தவும். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடித்தால், குழந்தையும் அந்த பழக்கத்திற்கு வந்துவிடும்.

மேலும் முக்கியமான ஒன்று குழந்தைகள் படுப்பதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தர வேண்டும். அது குழந்தை படுப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவு கூட முக்கியமான ஒன்று. நல்ல ஊட்டச் சத்துமிக்க உணவு பொருட்களைக் கொடுப்பதாலும் குழந்தைகள் நன்றாக உறங்கும்.

இனி உங்க வீட்டு பட்டுக் குட்டிகளை ஈஸியா தூங்க வச்சிருவீங்கதானே ?

Story first published: Monday, May 7, 2012, 16:57 [IST]
Desktop Bottom Promotion