Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!

வியர்வை கவனம்
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு அதிகம் வியர்த்துக் கொட்டும். இதனால் உடைகள் நனைந்து அவர்களுக்கு சளி பிடிக்கும். அடிக்கடி தும்மல் போடுவார்கள். வியர்வை பற்றி அவர்களால் கூற முடியாது. அழுகையினால் மட்டுமே ஈரத்தை உணர்த்த முடியும் எனவே குழந்தைகளின் உடம்பில் வியர்வையினால் ஈரம் படிந்திருக்கிறதா என்று அவ்வப்போது சோதனை செய்யவேண்டும்.
ஒரே இடத்தில் படுத்துக்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இடம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.
லேசான உடை
கோடையில் மெல்லிய பருத்தி உடைகளை அணிவிக்கலாம். இதனால் குழந்தையின் உடல் காற்றோட்டத்தை உணரும். எளிதில் மூச்சு விட முடியும்.
சூரிய ஒளியில் பாதுகாப்பு
குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடை பிடித்துக்கொண்டு நிழலியே அழைத்துச் செல்லவேண்டும். பார்க், கடற்கரை பகுதிகளில் நிழலான இடங்களில் காற்றாட அழைத்துச் செல்வது பாதுகாப்பானது.
நீர் சத்து
கோடையில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே அவ்வப்போது கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை குடிக்கத் தரவேண்டும். இது வியர்வை மூலம் வெளியேறும் தண்ணீரை ஈடு செய்யும். தாய்ப் பால் ஊட்டும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்திற்கு பால் ஊட்டவேண்டும். நீர்ம ஆகாரங்களை அடிக்கடி குழந்தைகளுக்கு தருவது அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
தூக்கம் விழிக்கும்
கோடையில் குழந்தைகளை உறங்க வைப்பது எளிதான காரியமல்ல. அதுவும் மின்சாரம் இல்லையென்றால் அன்றைக்கு முழுக்க சிவராத்திரிதான். எனவே குழந்தைகளை உறங்கவைக்கும் அறையை குளுமை நிறைந்ததாக, காற்றோட்டமானதாக வைத்திருக்கவேண்டும். காற்றோட்டம் நிறைந்த ஜன்னல்கள் இருந்தால் அவற்றை நன்றாக திறந்து வெளிக்காற்று அறையினுள் வருமாறு அமைக்கவேண்டும். மஸ்லின் துணியினால் ஆன திரைச் சீலைகளை ஜன்னலுக்கு போடுவது குளுமையான காற்றினை அறைக்குள் தக்கவைக்கும்.
மிதமான காற்று
வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.
குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான மின்விசிறிக் காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது.



Click it and Unblock the Notifications