Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைக்கால சிறப்பு தொகை! அமைச்சர் கீதாஜீவன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். இந்த ஆண்டு ஏற்கெனவே கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்பட்ட நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இனி ஒவ்வொரு ஆண்டும் மகளிருக்கு ரூ.2000 கோடைக்கால சிறப்பு தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மகளிர் உரிமைத் தொகை குறித்தும், கோடைக்கால சிறப்பு நிதி குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கோடைக்கால சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருப்பது, தோல்வி பயத்தை வெளிக்காட்டுவதாக விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்து பேசினார்.
அவர் பேசுகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைக்கால நிதியாக ரூ.2000 மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக எதிர்க்கட்சிகள் இந்த கோடைக்கால சிறப்பு தொகை குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தன. இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக்காலம் வருகிறதா? இதற்கு முன்னர் கோடைக்காலம் வரவில்லையா? ஏன் இந்த ஆண்டு மட்டும் கொடுக்கிறார்கள்? தேர்தல் அறிவிப்பை முன்னிட்டுதான் கொடுக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இப்படி இருக்கையில், இனி ஆண்டு தோறும் கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











