Latest Updates
-
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
புது ரூல்ஸ்.. பிப்.15 முதல் அமல்.. இனி ரூ.25000 லிமிட்.. வங்கி கணக்கு இருப்பவர்களுக்கு இதுதான் புது லிமிட்!
வங்கி கணக்கு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதியில் புதிய விதிகள் அமல் செய்யப்பட இருக்கின்றன. பணத்தை அனுப்பும் போது கூடுதல் கட்டணம் முதல் பணத்தை டெபாசிட் செய்யும்போது பான் கார்டு கட்டாயம் வரையில் விதிகள் அமலுக்கு வர உள்ளன. இந்த விதிகளால் என்னென்ன மாறப்போகிறது?
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் விதிகள் எஸ்பிஐ (SBI) வங்கி கஸ்டமர்களுக்கு மட்டுமே அமல் செய்யப்பட உள்ளது. இதில் ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. அதாவது, ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் வழியாக ரூ.25,000 மேல் பணத்தை அனுப்பினால் கூடுதல் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

ஆகவே, ரூ.25,000 மேல் ரூ.1,00,000 வரையில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும். இதே தொகையை கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.4 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ரூ.1,00,000 மேல் ரூ.2,00,000 வரையிலும் கட்டணம் இருக்கிறது.
ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.6 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் இருக்கிறது. அதேபோல கிளை சேனல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 கட்டணம் மற்றும் ஜிஎஸ்எடி கட்டணம் இருக்கிறது. ரூ.2,00,000 மேல் ரூ.5,00,000 வரையில் ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், கிளை சேனல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஒருவேளை ரூ.25,000 தொகைக்கும் கீழான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. ஆகவே, ரூ.1,000 வரையில் செய்யப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. இதில் ஆன்லைன் மற்றும் கிளை சேனலுக்கு பொருந்தும்.
அதேபோல ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது. அதுவே கிளை சேனல் வழியாக ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளை செய்தால் ரூ.2 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய பான் கார்டு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் ஒட்டுமொத்த வங்கி கஸ்டமர்களுக்கும் பொருந்தும். அசையா சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டிய லிமிட்டானது ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 ஆக அதிகரிப்பட்டுள்ளது. அதேபோல பணத்தை டெபாசிட் செய்யும் லிமிட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் பணத்தை டெபாசிட் செய்யும்போது ஒரு நிதியாண்டில் ஒரு நாளைக்கு ரூ.50,000 மேல் சென்றால் பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த லிமிட் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.10 லட்சம் மேல் பணத்தை டெபாசிட் செய்தால் மட்டுமே பான் கார்டு விவரங்கள் கேட்கப்பட இருக்கிறது.
மேலும், நிதிாண்டில் ரூ.10 லட்சம் தொகைக்குள் ரொக்கமாக எடுத்தால் பான் கார்டு விவரங்கள் கேட்கப்படாது. ஆனால், ரூ.10 லட்சம் மேல் பணத்தை எடுத்தால் பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த விதிகளை ஆர்பிஐ என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்திய அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வர உள்ளன.
Credit: Gizbot



Click it and Unblock the Notifications
