Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு
இந்தியாவில் இலட்சக்கணக்கான கோவில்கள் இருப்பதாலும், அங்கு தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் செல்வதாலும் இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில், பல நடைமுறைகளும் மரபுகளும் அவற்றின் பின்னணியில் உள்ள காரணங்களைப் பற்றி தெரியாமலே தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அத்தகைய நடைமுறைகளில் ஒன்றுதான் கோயிலுக்குள் செருப்பை கழட்டிவிட்டு வெறும் கால்களுடன் செல்வது.

பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, புனிதமான அந்த இடத்திற்கு வெளியே தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு, வெறும் கால்களுடன் கோவிலுக்குள் நடந்து கடவுளை வழிபடுகிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது தூய்மையைப் பேணுவதற்கும், கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கமாகத் தோன்றலாம்; ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை மிகவும் ஆழமானது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்மீக முக்கியத்துவம்
கோயிலுக்குள் நுழைவதற்கு முன் காலணிகளைக் கழற்றி வைக்கும் வழக்கம் இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி, இறைவனை அணுகுவதற்கு முன் ஒரு பக்தர் முழுமையான தூய்மையையும் மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்து மத நம்பிக்கைகளின்படி, கோயிலுக்கு வெளியே காலணிகளை விட்டுச் செல்வது என்பது, தெய்வங்களை வணங்குவதற்கு முன் அகங்காரம் மற்றும் உலகியல் சார்ந்த கவலைகள் ஆகியவற்றைத் துறப்பதைக் குறிக்கிறது. கோயிலுக்கு வெளியே காலணிகளைக் கழற்றுவதற்கான பிற காரணங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.
தடையாக செயல்படுகிறது
காலணிகள் பக்தருக்கும், இறைவனுக்கும் இடையே ஒரு தடையாகச் செயல்படுவதாகக் கருதப்படுகிறது. கோயிலுக்குச் செல்வதற்கு முன் அவற்றை கழட்டுவது பணிவையும், அந்தப் புனிதமான இடத்தின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துவதோடு, தெய்வங்களின் அருளைப் பெறுவதற்கான ஒரு வழியாகவும் அமைகிறது.
ஆன்மீக ஆற்றல்
காலணிகள் இன்றி ஒரு கோவிலுக்குள் நுழையும்போது, 'மூலாதாரச் சக்கரம்' தூண்டப்படுவதாகக் நம்பப்படுகிறது. நிலைத்தன்மை மற்றும் சமநிலையை நிர்வகிக்கும் பூமியின் ஆற்றலோடு இந்தச் சக்கரம் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. வெறும் பாதங்களுடன் நடக்கும்போது, பூமியின் அதிர்வுகள் உடலுக்குள் எளிதாக ஊடுருவி, நம்மை ஆன்மீகரீதியாக உறுதியாகவும், அமைதியாகவும் உணர வைக்கின்றன.
பரிசுத்த தூய்மையைக் குறிக்கிறது
காலணிகள் பெரும்பாலும் தோலால் செய்யப்படுகின்றன. இறந்த விலங்கின் தோலிலிருந்து பெறப்படுவதால், இந்து மதத்தில் இது அசுத்தமானதாகக் கருதப்படுகிறது. காலணிகளை அணிந்துகொண்டு புனிதமான இடத்திற்குள் நுழைவது தெய்வங்களை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், கோவிலுக்கு வெளியே காலணிகளைக் கழற்றுவது, பக்தர்கள் அகிம்சை அல்லது வன்முறையற்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிப்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பொதுவாக கோயிலின் தரைப்பகுதி சலவைக்கல், கிரானைட் அல்லது மணற்கல்லால் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இக்கற்கள் உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் மற்றும் நோயைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவை எப்போதும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. இப்பொருட்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்பதோடு, மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை என்றும் நம்பப்படுகிறது. கோயிலுக்குள் வெறும் காலால் நடப்பது இந்த நன்மைகளைப் பெற உதவும்.



Click it and Unblock the Notifications

