97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம்

இன்று இந்தியா உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக முதலிடத்தில் உள்ளது. ஒரு நாளுக்கு இந்தியாவில் கிட்டதட்ட 67,000 குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவின் இந்த மாபெரும் எண்ணிக்கைக்கு பின்னால் அதன் மருத்துவ கட்டமைப்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. தற்போது இந்தியாவில் கிட்டதட்ட 70,000 பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.

Which Country Has No Hospitals No Births Registered Over 97 Years

இந்தியாவின் மக்கள் தொகையும், மருத்துவ கட்டமைப்பும் இவ்வளவு வலிமையானதாக இருக்கும் அதே நேரத்தில் உலகில் ஒரு நாட்டில் ஒரு மருத்துவமனை கூட இல்லாத சூழல் நிலவுகிறது, அதைவிட இந்த நாட்டில் குழந்தைகள் பிறந்தே 97 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 21-ஆம் நூற்றாண்டிலும் ஒரு நாட்டில் மருத்துவமனை இல்லை என்று கேட்பது ஆச்சரியமாக இருக்கலாம். உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், உண்மையில் அத்தகைய நாடு ஒன்று உள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் வசிக்கும் இடமும் இந்த நாடுதான்.

வாடிகன் நகரம்

வாடிகன் நகரம் உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டைப் பற்றிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இன்றுவரை இங்கு ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லை. இந்நாடு 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி உருவாக்கப்பட்டது; ஆனால், அப்போதிருந்து இன்றுவரை இங்கு எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் இதனைத் தங்கள் தலைமையிடமாகக் கருதுகின்றனர். கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் உலகளாவிய முக்கிய மதத் தலைவர்கள் அனைவரும் இங்கிருந்தே வழிநடத்தப்படுகின்றனர்.

மருத்துவமனை ஏன் இல்லை?

இந்த நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து, இங்கு எந்த மருத்துவமனையும் கட்டப்படவில்லை. இங்கு வசிக்கும் மக்களால் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், ஒரு மருத்துவமனை கூட இதுவரை அமைக்கப்படவில்லை. இதன் விளைவாக, தீவிர உடல்நலக்குறைவு உள்ளவர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள ரோம் நகருக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நாடு ரோம் நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருந்தாலும் இத்தகைய நிலை நிலவுகிறது.

வாடிகன் நகருக்குள் மருத்துவமனை ஒன்றை அமைக்காததற்கான முடிவுக்கு, அதன் மிகச்சிறிய பரப்பளவும், அருகிலுள்ள ரோம் நகரில் உயர்தர மருத்துவ வசதிகள் இருப்பதும் காரணமாக இருக்கலாம். வாடிகன் நகரம் வெறும் 118 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருப்பதால், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைத்து நோயாளிகளையும் ரோம் நகரில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி வாடிகன் நகருக்குள் மகப்பேறு பிரிவு இல்லாததால், அதன் எல்லைக்குள் குழந்தைப் பிறப்பு இதுவரை நடக்காத காரியமாக உள்ளது. கடந்த 97 ஆண்டுகளாக இந்நாட்டில் எந்தவொரு குழந்தைப் பிறப்பும் பதிவு செய்யப்படாததற்கான காரணத்தை இந்தச் சூழல் விளக்குகிறது.

குற்ற சம்பவங்கள்

1000-க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வாடிகன் நகரில் குற்ற விகிதம் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு பெருமளவில் வருகை தருவதே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. கடைகளில் பொருட்களைத் திருடுதல், கைப்பையை பறித்தல் மற்றும் பிக்பாக்கெட் அடித்தல் போன்றவை இங்கு நடைபெறும் பொதுவான குற்றங்களாகும்.

குழந்தைகளே பிறக்காத மற்ற இடங்கள்

பிரிட்டனின் அருகேயுள்ள மற்றொரு பிரதேசமான பிட்கெய்ர்ன் தீவுகளின் மக்கள் தொகை 50-க்கும் குறைவு. இதன் விளைவாக, அங்கு கடந்த சில ஆண்டுகளாக இந்த தீவிலும் எந்தப் பிறப்பும் பதிவு செய்யப்படவில்லை. இவ்விரு இடங்களைத் தவிர, அண்டார்டிகாவிலும் வேறு யாரும் பிறந்ததில்லை.

Story first published: Thursday, September 10, 2026, 18:11 [IST]
Desktop Bottom Promotion