அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்

By Halley Karthik

சென்னை: அமைச்சர் துரைமுருகன் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்திருக்கிறார்.

வீட்டில் தவறி விழுந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷயம் அறிந்தவுடன் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்திருக்கிறார்.


Minister Duraimurugan

துரைமுருகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை விடுத்திருக்கும் அறிக்கையில், கால் வலிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், சில நாட்கள் மருத்துவமனையில் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Credit: Oneindia

Desktop Bottom Promotion