Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
டிசம்பர் 22 ஆம் தேதி பகல் நேரம் குறைவாகவும், இரவு நேரம் அதிகமாகவும் இருக்குமாம்.. ஏன் தெரியுமா?
Winter Solstice 2023: சங்கிராந்தி என்பது பெரும்பாலும் "ஆண்டின் குறுகிய நாள்" என்று அழைக்கப்படுகிறது. இது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் முதல் நாளைக் குறிக்கிறது. இந்த குளிர்கால சங்கிராந்தி பொதுவாக ஆண்டுதோறும் டிசம்பர் 20 அல்லது 21 ல் நடைபெறுகிறது. மிகவும் அரிதான காலங்களில் டிசம்பர் 23 ல் நடைபெறுகிறது. 1903 ஆம் ஆண்டு இந்த குளிர்கால சங்கிராந்தி டிசம்பர் 23ல் நடைபெற்றது.
இந்த காலத்தில் சூரியன் வானத்தில் குறுகிய பாதையில் பயணிக்குமாம். இந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி காலை 8:57 மணிக்கு குளிர்கால சங்கிராந்தி நடைபெறுகிறது. இந்த குளிர்கால சங்கிராந்தி நாளில் தெற்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும், குறுகிய இரவாகவும் இருக்கும்.

இதுவே வடக்கு அரைக்கோளத்தில் குறுகிய பகலாகவும், நீண்ட இரவாகவும் இருக்கும். இந்த சமயத்தில் தெற்கு அரைக்கோளம் நேரடி சூரிய ஒளியைப் பெறுகிறது. எனவே இது தெற்கு அரைக்கோளத்தில் கோடைக்கால ஆரம்பமாக அமைகிறது.
குளிர்கால சங்கிராந்தி பற்றி கூடுதல் சுவாரஸ்யமான விஷயங்கள்:
இந்த குளிர்கால சங்கிராந்தி நாளில் வடக்கு அரைக்கோளம் குளிர்ந்த வெப்பநிலையையும், அதே நேரத்தில் தெற்கு அரைக்கோளம் வெப்பமான வெப்பநிலையை பெற்று இருக்கும். இந்த சங்கிராந்தி என்ற சொல்லானது லத்தீன் மொழியில் உள்ள "சோல்ஸ்டிடியம்" என்பதிலிருந்து உருவாகியுள்ளது. இதற்கு "சூரியன் அசையாமல் நிற்கிறது" என்பது பொருள்.
வடக்கு அரைக்கோளத்தில் குளிர்கால சங்கிராந்தி நிகழும்போது, வட துருவமானது சூரியனிலிருந்து சில அச்சு தொலைவில் சாய்ந்திருக்கும். அதே நேரத்தில் சூரியனின் கதிர்கள் அதே அளவு பூமத்திய ரேகையிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதால், செங்குத்து நண்பகல் கதிர்கள் மகர டிராபிக் இல் நேரடியாக மேல்நோக்கிச் செல்கின்றன. அதாவது பூமியின் அச்சில் 23.4 டிகிரி சாய்வதால் வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் வெவ்வேறு அளவு சூரிய ஒளியைப் பெறுகின்றன. இதன் விளைவாக நமக்கு வெவ்வேறு பருவங்கள் உருவாகின்றன என்கிறார்கள் நிபுணர்கள்.
குளிர்கால சங்கிராந்திக்கு சில வாரங்களுக்கு பிறகு நம்முடைய பூமி சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகத்தின் சுற்றுப்பாதையில் உள்ள பெரிஹேலியனை அடைகிறது. எனவே டிசம்பர் சங்கிராந்தி என்பது வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிகக் குறுகிய நாளையும், தெற்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளையும் குறிக்கிறது. எனவே சூரியனின் நண்பகல் ஆனது சங்கிராந்தியில் வருவதை விட கடிகாரத்தால் சுமார் 10 நிமிடங்கள் முன்னதாக வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதனால் சூரிய நேரமும் நம்முடைய கடிகார நேரமும் வேறுபடுகிறது. எனவே வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் குளிர்கால சங்கிராந்திக்கு முன்னதாகவே சூரிய அஸ்தமனமும், சூரிய உதயமும் கணக்கிடப்படுகிறது.
இந்த மாதிரி ஏற்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதற்கு சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதை காரணம் ஆகும். டிசம்பர் சங்கிராந்தி நேரத்தில் பூமி சூரியனுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் நம்முடைய பூமி வேகமாகச் சுழல்கிறது. இதனால் சூரிய நேரத்திற்கும் கடிகார நேரத்திற்கும் இடையே வேறுபாடு ஏற்படுகிறது. இது ஆண்டின் மற்ற நேரங்களை விட நெருக்கமான நேரங்களாக உள்ளது.
குளிர்கால சங்கிராந்தியின் முக்கியத்துவம்:
குளிர்கால சங்கிராந்தி என்பது குளிர்காலத்தின் தொடக்கமாக பார்க்கப்பட்டு நம் முன்னோர்கள் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடி வந்துள்ளனர்.
யூல் நோர்ஸ் மக்களாலும், ஆங்கிலோ-சாக்சன் பேகன்களாலும் இந்த குளிர்கால சங்கிராந்தி கொண்டாடப்பட்டது. யூல் மரக்கட்டைகள் மற்றும் மரங்களை அலங்கரித்து தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
மகர சங்கராந்தி என்ற பெயரில் இது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இது குளிர்கால சங்கிராந்தி மற்றும் நீண்ட நாட்களின் தொடக்கத்துடன் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது.
ஈரானியர்கள் குளிர்கால சங்கிராந்தியை யால்டா இரவாகக் கொண்டாடுகிறார்கள். இது ஆண்டின் இருண்ட இரவாக அவர்கள் பார்க்கிறார்கள்.
குளிர்கால சங்கிராந்தி குறித்த கட்டுக்கதைகள்:
ஃபின்னிஷ் புராணத்தில் குளிர்கால சங்கிராந்தி குறித்த கட்டுக்கதை ஒன்று உள்ளது. அதாவது லூஹி சூரியனையும் சந்திரனையும் திருடி ஒரு மலைக்குள் சிறைபிடித்து வைப்பதால் குளிர்கால சங்கிராந்தி நடைபெறுகிறது என்ற கட்டுக்கதைகள் உள்ளன.
சில நாடுகளில் குளிர்கால சங்கிராந்தியை நினைவுச் சின்னங்களாகவும் பொரித்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் விலங்குகளை வதைத்தல், உணவுக்கு பஞ்சம் போன்றவை ஏற்பட்டது.



Click it and Unblock the Notifications











