Latest Updates
-
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
இந்தியாவில் தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக விஷம் போல வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை அதிகரிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் மக்களை அதிர்ச்சியடைய வைப்பது என்னவெனில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும் போட்டி போட்டுக்கொண்டு அதிகரிப்பதுதான்.
முதலீடுகள் மற்றும் தொழில்துறை கணிப்புகளில், நாணயங்கள் மற்றும் நகைகளாக ஒரு காலத்தில் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட உலோகம் இப்போது உலகம் முழுக்க அதிக கவனத்தைப் பெற்று வருகிறது. இந்திய நகர சந்தைகள் முதல் சர்வதேச வர்த்தக தளங்கள் வரை வர்த்தகர்களிடையே வெள்ளி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. வெள்ளியில் முதலீடு செய்பவர்கள், மின்னணு சாதனங்களுக்கு வெள்ளியை நம்பியிருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மற்றும் நகைகளை வாங்கும் பொதுமக்கள் என அனைவரும் வெள்ளியின் இந்த விபரீத வளர்ச்சியை நன்கு உணர்ந்துள்ளனர்.

வெள்ளியின் விலை அதிகரிப்பு
வெள்ளி விலையின் இந்த திடீர் அதிகரிப்பு சீரற்றதல்ல. இருப்பினும், இது விநியோகம் மற்றும் தேவையில் ஏற்படும் மாற்றங்கள், மாற்று விகித ஏற்ற இறக்கங்கள், முதலீட்டாளர்களின் ஆர்வம் மற்றும் பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. வெள்ளியின் தற்போதைய சந்தை விலைகளில் ஏற்பட்டுள்ள கூர்மையான அதிகரிப்பு, குறிப்பாக இந்தியாவில், அதன் கடந்த கால வரலாற்றுடன் ஒப்பிடும்போது முற்றிலும் எதிர்பாராதது. இந்த பதிவில் வெள்ளியின் கடந்த கால சந்தை வரலாறு மற்றும் இப்போது திடீரென அதன் விலை அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளி விலை வரலாறு
வெள்ளி பல வருடங்களாக ஒரு விலைமதிப்பற்ற உலோகமாகவே கருதப்பட்டது, இருப்பினும் அது இந்திய சந்தையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், வெள்ளி அதன் மிக உயர்ந்த விலையை எட்டியது, சர்வதேச சந்தைகளில் ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் US $49.51 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. சந்தை சகஜ நிலைக்கு திரும்பியபோது, அதன் தேவை குறைந்தபோது அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளில் பொருளாதாரம் மாறியதால் இந்த விலை நீண்ட காலம் நீடிக்கவில்லை.
இந்தியாவில் வெள்ளியின் விலை
இந்தியாவில், செப்டம்பர் 2024 இல், டெல்லி மற்றும் மும்பையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 85,100 ஆக இருந்தது, ஆனால் ஒரு வருடம் கழித்து அக்டோபர் 2025 இல், வெள்ளியின் தற்போதைய விலை ரூ. 1,60,000 ஆகும். ஒரு வருடத்தில் இது அசுரர் வளர்ச்சியாகும். உள்நாட்டு பொருளாதார ஏற்ற இறக்கங்களும் உலகளாவிய தேவையும் வெள்ளியின் விலையில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை இந்த ஏற்ற இறக்கங்கள் காட்டுகின்றன. தற்போது வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
தொழில்துறையில் தேவை அதிகரிப்பு
சூரிய மின்கலங்கள், மின்னணுவியல், மருத்துவ சாதனங்கள் மற்றும் சில தொழில்துறைகளில் வெள்ளி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகம் தூய்மையான ஆற்றலை நோக்கி முன்னேறுவதால் சூரிய மின்கலங்கள், பேட்டரிகள் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றில் வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில்துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரிப்பது அதன் விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளது.
விநியோகப் பற்றாக்குறை
உலகளாவிய வெள்ளி சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளியின் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருப்பதால் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுரங்கத்திலிருந்து போதுமான உற்பத்தி இல்லாததால் கிடைக்கும் குறைந்த வெள்ளியின் விலை வேகமாக உயர்கின்றன.
பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு
டாலரின் மதிப்பு குறைவாக இருக்கும்போது பிற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு வெள்ளி மலிவான விலையில் கிடைக்கும், இது தேவையை அதிகரிக்கிறது, ஆனால் தற்போது டாலரின் மதிப்பு மிகவும் வலுவாக உள்ளது. வெள்ளி பொதுவாக அமெரிக்க டாலர்களில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பான முதலீடாக மக்கள் உலோகங்களைப் பார்க்கும்போது அதன் தேவை அதிகரிக்கிறது.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை
வர்த்தகப் போர்கள், மோதல்கள், மந்தநிலை அச்சங்கள் அல்லது ஏற்ற இறக்கமான புவிசார் அரசியல் போக்குகள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனத்தை உலோகங்கள் மீது நகர்த்துகிறார்கள், இந்த உலோகங்களில் வெள்ளி மிகவும் முக்கியமானதாகும்.
இந்திய காரணிகள்
- இறக்குமதி மற்றும் வரிக் கொள்கைகள் - இந்தியாவில் வெள்ளியின் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படும் மாற்றங்கள், இறக்குமதி வரிகள் அல்லது இறக்குமதி வரிகளால் உள்நாட்டு விலை பாதிக்கப்படுகின்றன.
- மக்களின் தேவை அதிகரிப்பு - இந்தியாவில், வெள்ளி நகைகள், நாணயங்கள் மற்றும் கட்டிகள் தொடர்ந்து கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
- ரூபாய் பலவீனம் - ரூபாயின் மதிப்பு குறையும் போது இறக்குமதிகள் அதிக விலை கொண்டதாக மாறும், இது உள்நாட்டில் வெள்ளியின் விலையை அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications
