Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
ஜவஹர்லால் நேரு ஏன் பரோடா மகாராணிக்கு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக கொடுத்தார் தெரியுமா?
இந்தியாவின் வரலாறு என்பது பல சுவாரஸ்யங்களாலும், நம்ப முடியாத நிகழ்வுகளாலும் நிறைந்தது. சுதந்திரத்திற்கு முன் மட்டுமல்ல சுதந்திரத்திற்கு பிறகும் கூட பல வரலாற்று நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேறியது. சுதந்திரத்திற்கு பிறகு நம் இந்தியா முழுமையான இந்தியாவாக உருவாகுவதற்கே பல முயற்சிகள் தேவைப்பட்டது.
இந்தியாவை முழுமையாக உருவாக்குவதில் சர்தார் வல்லபாய் படேல் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். அதேபோல இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் முக்கியப்பங்கு வகித்தார். 1951 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பரோடாவின் ராணியான, இரண்டாம் சிம்னாபாய்க்கு ஒரு தனித்துவமான ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கினார்.

இது ஒரு சிறப்புவாய்ந்த காராக இருந்தது. இந்த கார் அன்றைய இந்திய பிரதமர் நேருவால் சிறப்பு உத்தரவின் பேரில் வாங்கப்பட்டு ராணிக்கு பரிசாக வழங்கப்பட்டது. நேரு மன்னராட்சி முறையின் எதிர்ப்பாளராகக் கருதப்பட்டார், பிறகு ஏன் இவ்வளவு விலையுயர்ந்த காரை சமஸ்தானத்திற்கு பரிசளித்தார்?
உண்மையில், இந்திய மன்னர்கள் ரோல்ஸ் ராய்ஸ் பிராண்ட் கார்கள் மீது வெறித்தனமான காதல் கொண்டிருந்தனர். 1920 களில், நாடு முழுவதும் பல சமஸ்தானங்களை சேர்ந்த இந்திய மகாராஜாக்கள் நூற்றுக்கணக்கான ரோல்ஸ் ராய்ஸை வாங்கி தங்கள் கான்வாய்களில் சேர்த்துக் கொண்டனர். காலப்போக்கில் அனைத்து மகாராஜாக்களிடமும் அத்தகைய கார் இருப்பதை உணர்ந்தவுடன், அவர்கள் சிறப்பு ஆர்டர்கள் மூலம் தங்கள் காரைத் வடிவமைக்கத் தொடங்கினர். பல மகாராஜாக்கள் இத்தகைய கார்களை மொத்தமாக வாங்கினர். உதாரணமாக, மைசூர் மகாராஜா முதல் முறையாக 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினார், இரண்டாவது முறையாக 14 கார்களை வாங்கினார்.
இந்திய மன்னர்கள் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை விரும்பினார்கள் என்பதை நேரு நன்கு அறிந்திருந்தார். நாடு முழுவதும் உள்ள அனைத்து சமஸ்தானங்களும் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்ட நேரம் இது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் மன்னர்களின் செல்வாக்கு அப்போதும் நிலைத்திருந்தது. நேரு சமஸ்தானங்களிலும் மிகவும் பிரபலமாக இருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய சமஸ்தானங்களுடன் சிறந்த உறவைப் பேண நேரு விரும்பினார்.
1951 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, பரோடாவின் மகாராணி சிம்னா பாய் சாஹிப் கெய்க்வாட் என்பவருக்கு இந்த சிறப்புப் பரிசை வழங்கினார். நேரு இந்திய அரசுக்கும் அரச குடும்பங்களுக்கும் இடையே சிறந்த உறவை ஏற்படுத்த விரும்பினார். எச்.ஜே.முல்லினர் அண்ட் கோ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் மதிப்பு தற்போதைய மதிப்பு ரூ.2.5 கோடிக்கு மேல் இருக்கும்.
இத்தகைய பரிசுகள் இந்திய அரச குடும்பங்களிடையே பொதுவாக இருந்தன, இது அவர்களின் செல்வத்தையும் செல்வாக்கையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. நேருவின் பரிசு சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் சமஸ்தானங்களுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. சில முக்கிய அரச குடும்பங்களுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம், இந்திய அரசாங்கம் பழைய அரச குடும்பங்களுடனான உறவை வலுப்படுத்த விரும்புவதை நேரு வெளிப்படுத்தினார்.
உண்மையில், ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தியாவில் மன்னர்கள் மற்றும் பேரரசர்களின் காராக கருதப்பட்டது. இது ஆடம்பரத்திற்கும் தனித்துவத்திற்க்கும் பெயர் பெற்றதாக இருந்தது. அது பெருமையின் அடையாளமாக இருந்தது. அதனால்தான் நேரு அரச குடும்பங்களுக்கு பரிசளிக்க அந்த காரைத் தேர்ந்தெடுத்தார்.
நேரு பல சமஸ்தானங்களுக்கு இதே போன்ற கார்களை பரிசாக அளித்துள்ளார். மைசூர் மகாராஜாவுக்கு அரசு சார்பில் ஒரு சொகுசு ரோல்ஸ்ராய்ஸ் காரை வழங்கினார். 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 562 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் நாட்டை ஒருங்கிணைப்பது சவாலாக இருந்தது. இந்த சமஸ்தானங்களில் பலர் தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழக்க தயாராக இல்லை. இந்த அரச குடும்பங்களுக்கு சிறப்பு மரியாதை அளித்து இந்திய குடியரசில் அவர்களை திருப்திப்படுத்த நேரு முயன்றார்.



Click it and Unblock the Notifications












