Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
தமிழ்நாட்டில் மொய் வைக்கும்போது ஏன் 1 ரூபாய் சேர்த்து வைக்கப்படுகிறது? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மொய் வைப்பது என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பாரம்பரியமாகும். திருமணம், காது குத்து, சடங்கு, வளைகாப்பு முதல் கிரகப் பிரவேசம் வரை வீட்டில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் உறவினர்கள் மொய் வைப்பது என்பது தமிழ்நாட்டில் தவிக்க முடியாத நடைமுறையாகும்.
அப்படி மொய் வைக்கப்படும் தொகைகள் எப்போதும் 51, 101, 501, 1001 முதல் 1000001 வரை நீண்டு கொண்டே இருக்கும். முன்னால் இருக்கும் எண்கள் மாறலாம் ஆனால் பின்னால் இருக்கும் எண் எப்போதும் 1 ஆகத்தான் இருக்கும். இந்த நடைமுறை நம் முன்னோர்களால் நீண்ட காலமாக மதரீதியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வெறும் பழக்கமா, அல்லது மொய்க்கு பின்னால் ஒரு ரூபாயைச் சேர்ப்பதற்குப் பின்னால் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? இந்த பதிவில் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.

மொய் பணத்துடன் ஏன் ஒரு ரூபாய் சேர்க்கப்படுகிறது?
பணத்தை பரிசாகவோ அல்லது மொய்யாகவோ கொடுக்கும்போது, மக்கள் பெரும்பாலும் 1 என முடியும் ஒற்றைப்படைத் தொகைகளைத் தேர்வு செய்கிறார்கள், இதனால் அந்த தொகையை சமபங்காக பிரிக்க முடியாது. கடந்த காலங்களில் புதுமணத் தம்பதிகளுக்கு மொய் வைக்கும் பொது இந்த நடைமுறை பரவலாக பின்பற்றப்பட்டது, ஏனெனில் இது அவர்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது. அந்த கூடுதல் ரூபாயைச் சேர்ப்பது என்பது தம்பதியினரின் பிணைப்பைப் போலவே, அந்தத் தொகையை இரண்டு இரட்டைப் பகுதிகளாகப் பிரிக்க முடியாது என்பதை வலியுறுத்துகிறது.
மொய் பணத்துடன் ஒரு ரூபாயைச் சேர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது மற்றும் உறவை பலப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. பிரிக்க முடியாத தொகை தம்பதியினரின் ஒற்றுமையைக் குறிக்கிறது, அவர்களின் உறவு வலுவாக இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பாரம்பரியத்தின் பின்னணியில் உள்ள கருத்து என்னவென்றால், மகிழ்ச்சியான திருமணத்திற்கு தம்பதிகளிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது.
புதிய தொடக்கம்
ஒரு ரூபாயைச் சேர்ப்பது என்பது ஒரு குறியீட்டு மதிப்பையும் கொண்டுள்ளது. '0' என்ற எண் ஒரு முடிவைக் குறிக்கும், ஆனால் '1' என்பது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. அந்த ரூபாயைச் சேர்ப்பதன் மூலம், மெய்யாக வைக்கும் தொகை பூஜ்ஜியத்தில் முடிவடையாது, அதற்குப் பதிலாக அது புதிய ஒன்றைத் தொடங்குகிறது. இது மொய் வைப்பவரின் நல்வாழ்த்துக்களை வெளிப்படுத்துகிறது, இது மொய்யை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. 101 அல்லது 501 போன்ற தொகைகளைப் பிரிக்க முடியாது, அதாவது கொடுக்கப்பட்ட நல்வாழ்த்துக்களும் பிரிக்க இயலாதவை. இந்த பாரம்பரியம் நமது உறவுகளில் ஒற்றுமை மற்றும் புதிய தொடக்கங்களின் பங்கைக் காட்டுகிறது.
உறவுகளின் நெருக்கும்
மொய் பணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் என்பது குறியீட்டை விட அதிகம், இது உறவுகளின் நெருக்கத்தைக் குறிக்கிறது. இந்த சிறிய தொகை பெறுபவரின் மீது ஒரு கடமையை சுமத்துவதாக நம்பப்படுகிறது, அவர்கள் தங்கள் பிணைப்பை வலுப்படுத்த மீண்டும் மொய் வைப்பவரை சந்திக்க வேண்டும். இது உறவுகளின் தொடர்ச்சியைக் காட்டுகிறது, மீண்டும் சந்திப்பதற்கான வாக்குறுதியைக் குறிக்கிறது.
மொய்யுடன் சேர்க்கப்படும் ஒரு ரூபாய் நாணயம் முதலீடு மற்றும் வளர்ச்சியையும் குறிக்கிறது. லட்சுமியின் பிரதிநிதித்துவமாக, உலோகம் செல்வத்தைக் குறிக்கிறது. இந்த சிறிய தொகையை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும் அல்லது நன்கொடையாக வழங்க வேண்டும், இதன்மூலம் அது வளர்ச்சியடையும். ஒரு நிலையான தொகையில் ஒரு ரூபாயைச் சேர்ப்பதன் மூலம், அதை பெறுபவர்கள் நல்வாழ்வை அடைவார்கள் என்று நம்புகிறார்கள். இந்த செயல் கருணை மற்றும் அரவணைப்பின் செயலாக நம்பப்படுகிறது, பரிசு பெறுபவருக்கு அதிக மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரும் என்று நம்புகிறார்கள். இந்தியாவில் மொய்யுடன் கூடுதலாக ஒரு ரூபாயைச் சேர்ப்பது உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.



Click it and Unblock the Notifications
