Latest Updates
-
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
பாகிஸ்தானிலிருந்து ஆண்டுக்கு 2,00,000 கழுதைகளை இறக்குமதி செய்யும் சீனா... காரணம் என்ன தெரியுமா?
இன்று உலகளவில் பதட்டமான சூழல்தான் நிலவுகிறது,எல்லைகள் மிகவும் கடுமையானதாகி வருகிறது. பல வளங்கள் மற்றும் பொருட்களின் உலகளாவிய விநியோகம் ஒரு சில நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படுவதால், இன்றைய உலகில் மற்ற நாடுகளுடன் கூட்டணி வைப்பது மிகவும் முக்கியமானதாகி வகிக்கின்றன.
இத்தகைய உறவுகள் வளக் கட்டுப்பாடுகளை கடக்கவும், பொருளாதார வலிமையை அதிகரிக்கவும், உலக அரங்கில் செல்வாக்கு பெறவும் நாடுகளுக்கு உதவுகின்றன. இந்தச் சூழலில், சீனாவுக்கு ஆண்டுதோறும் 200,000 கழுதைகளிலிருந்து இறைச்சி மற்றும் தோல்களை ஏற்றுமதி செய்வதற்கான பாகிஸ்தானின் சமீபத்திய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உருவாகியுள்ள ஒப்பந்தம் ஒரு புதிய மைல்கல்லைக் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் அதிகாரி அளித்த பேட்டியில் இந்த புதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுதோறும் 216,000 கழுதை தோல்கள் மற்றும் இறைச்சியை வழங்க பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது. இருப்பினும், கராச்சி துறைமுகத்திற்கு அருகில் அதிக இறைச்சிக் கூடங்களை நிறுவுவதற்கு முன்மொழிவதன் மூலம் சீனா இந்த ஏற்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஏற்றுமதியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, குவாதரில் புதிய இறைச்சிக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, பாகிஸ்தானில் தற்போது 5.2 மில்லியன் கழுதைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகின் மூன்றாவது பெரிய எண்ணிக்கையாகும். 2022 ஆம் ஆண்டு முதல் நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இந்த வர்த்தகத்தில் இருந்து பாகிஸ்தான் மில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் எஜியாவோ போன்ற பாரம்பரிய மருந்துகள் தயாரிக்க கழுதைத் தோல்களுக்கான அதிக தேவை உள்ளது. இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு கால்நடைத்துறை மற்றும் பொருளாதாரம் இரண்டிலுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளிக்கும்.
சீனா ஏன் கழுதை தோல் மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்கிறது?
கழுதை தோலின் ஜெலட்டின் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருத்துவமான எஜியாவோவின் தேவையை பூர்த்தி செய்வதற்காக சீனா முதன்மையாக பாகிஸ்தானில் இருந்து கழுதைகளை இறக்குமதி செய்கிறது. எஜியாவோ, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், தோலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பது போன்றவற்றை உள்ளடக்கிய சுகாதார நலன்களுக்காக சீன பாரம்பரிய மருத்துவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இருப்பினும், சீனாவின் சொந்த கழுதைகளின் எண்ணிக்கை அதிகரித்த தேவை மற்றும் நிலையான இனப்பெருக்க நடைமுறைகள் இல்லாததால் கடுமையான சரிவைக் கண்டுள்ளது.
உணவுத்தேவை
கூடுதலாக, சீனாவின் ஹெபே மாகாணத்தில், கழுதை இறைச்சி ஒரு பிரபலமான உணவாக இருக்கிறது. கழுதை இறைச்சி பர்கர்கள், சீன மொழியில் 'lǘròu huǒshāo', ஒரு பிரபலமான தெரு உணவு மற்றும் Baoding மற்றும் Hejian நகரங்களில் சிறப்பாக்க இருக்கிறது. இந்த இடைவெளியை சமாளிக்க, சீனா உதவிக்காக மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. கணிசமான கழுதைகள் நிறைந்த பாகிஸ்தான், சீனாவின் முக்கிய ஆதரவாக மாறியது. பாகிஸ்தானுக்கு கணிசமான அளவு கடனுதவி அளித்து அதன் நெருக்கடியை சமாளிக்க சீனா 'உதவி' செய்து வருகிறது. 2022 இன் தரவுகளின்படி, பாகிஸ்தான் $26.6 பில்லியன் சீனாவிடம் கடன் உள்ளது, இது உலகின் மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாகும்.



Click it and Unblock the Notifications
