Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த நாட்டில் மக்களுக்கு வீடு, மின்சாரம், கல்வி மற்றும் மருத்துவம் அனைத்தும் இலவசம்... ஆனால் ஒரேயொரு நிபந்தனை!
உலகில் அனைத்து நாடுகளும் மக்களுக்கு சேவை வழங்குவதற்கு குறிப்பிடத்தக்க வரியை வசூலிக்கிறது. சில நாடுகள் அளவிற்கு அதிகமாகவே வரி வசூலித்து மக்களை வதைக்கிறது. ஆனால் சில நாடுகள் மக்களுக்கு அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது. கேட்பதற்கு நம்ப முடியாததாக தோன்றினாலும் இது உண்மைதான்.
இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் பெரும்பாலும் பொதுமக்களுக்கு சொர்க்கமாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு நீங்கள் வீடு கட்ட விரும்பினால், அரசர் இலவசமாக நிலம் வழங்குகிறார். உணவு, மின்சாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அனைத்திற்கும் மேலாக அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை முற்றிலும் இலவசம். அதனால்தான் இந்த நாடு சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இன்றைய வரி சூழ் உலகில் இத்தகைய அரசு இருப்பது மிகவும் அரிதானது, ஆனால் பொதுமக்கள் இதற்கு ஒரே ஒரு நிபந்தனையை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.
பூட்டானில் பிச்சைக்காரர்களோ வீடற்ற நபர்களோ இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வீடு உள்ளது, மக்கள் பொதுவாக மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார்கள். அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்குகின்றன. கடுமையான மருத்துவ பிரச்சினைகளுக்கு, வெளிநாட்டில் சிகிச்சைக்கான செலவைக் கூட அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.
பூட்டானில் இப்போது தொலைக்காட்சி மற்றும் இணைய அணுகல் இருந்தாலும், அந்நாட்டின் வாழ்க்கை முறைகளில் வெளிநாட்டு கலாச்சாரங்களின் எதிர்மறையான தாக்கத்தைத் தடுக்க இந்த சேவைகள் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டன. இந்த தடை 1999 இல் மன்னரால் நீக்கப்பட்டது. தொலைக்காட்சியை கடைசியாக ஏற்றுக்கொண்ட நாடாக மாறியது.
2008 இல், பூட்டான் மக்களின் உள்அமைதி மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க Gross National Happiness(GNH) குழுவை நிறுவியது. தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கூட தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்தியடைகிறார்களா என்பதைக் குறிக்கும் ஒரு கேள்வியை உள்ளடக்கியது.Gross National Happiness-யை அளவிடும் மகிழ்ச்சிக்கான அமைச்சகமும் நாட்டில் உள்ளது. பூட்டானின் வாழ்க்கைத் தரம் நிதிநிலை மற்றும் மன நலனுக்கு இடையிலான சமநிலையால் தீர்மானிக்கப்படுகிறது.

பூட்டானில் வீடற்றவர்கள் யாரும் இல்லை
பூட்டானில் வீடற்றவர்கள் என்று யாரும் இல்லை. யாராவது தங்கள் வீட்டை இழந்தால், அவர்கள் உடனடியாக ராஜாவை அணுக வேண்டும், அவர் அவர்களுக்கு வீடு கட்டவும், காய்கறிகளை வளர்க்கவும் ஒரு நிலத்தை வழங்குகிறார். பூட்டான் மக்கள் பொதுவாக தங்களை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்கின்றனர். தொடக்க நிலை முதல் உயர்நிலை வரை கல்வி இலவசம். அரசுப் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை, சில சிறப்பு சந்தர்ப்பங்களில், வெளிநாடுகளில் உயர்கல்வி பெற அரசு உதவித்தொகை வழங்குகிறது.
பூட்டானின் கிராமப்புறங்களில் வீட்டு உபயோகத்திற்காக ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது, இதன்மூலம் குறிப்பாக சிறிய குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடைகின்றன. விவசாயிகள் விதைகள், உரங்கள் மற்றும் கருவிகளுக்கு அரசிடமிருந்து மானியம் பெறுகிறார்கள்.
பூட்டான் மக்களின் ஆடைகள்
பூட்டான் மக்கள் பாரம்பரியமாக தனித்துவமான ஆடைகளை அணிவார்கள். ஆண்கள் கோஸ் எனப்படும் முழங்கால் வரையிலான ஆடைகளை அணிவார்கள், பெண்கள் கிராஸ் எனப்படும் நீளமான ஆடைகளை அணிவார்கள். ஒருவரின் நிலை மற்றும் சமூக அந்தஸ்து அவரது இடது தோளில் போர்த்தப்பட்ட கழுத்துத் துண்டுகளின் நிறத்தால் அடையாளம் காணப்படலாம். சாமானியர்கள் வெள்ளை நிற துண்டை அணிவார்கள், பிரபுக்கள் மற்றும் துறவிகள் மஞ்சள் நிற துண்டை அணிவார்கள்.
நீண்ட காலமாக, பூட்டான் உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. 1970 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அந்த நாட்டை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இப்போதும் கூட, வெளிநாட்டு மக்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.
பூட்டானின் முன்னேற்றம்
இருப்பினும், பூட்டான் வேகமாக நவீனமயமாகி வருகிறது. தலைநகர் திம்புவில் ஸ்மார்ட்போன்களும் கரோக்கி பார்களும் சர்வசாதாரணமாகிவிட்டன. பெரும்பான்மையான இளைஞர்களால், சமூக ஊடகங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இது அரசியல் பற்றிய வெளிப்படையான விவாதங்களுக்கு வழிவகுத்தது.
பூடான் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகளவில் முன்னணியில் உள்ளது. 1999 ஆம் ஆண்டிலேயே பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டன, மேலும் புகையிலை பயன்படுத்துவது சட்டவிரோதமானது. சட்டப்படி, நாட்டில் 60% காடுகள் இருக்க வேண்டும். மேலும் பூட்டானின் மக்கள் மரம் நடுவதில் தொடர்ந்து ஆர்வமாக உள்ளனர்.
அற்புதமான இயற்கை அழகு மற்றும் வளமான கலாச்சாரம் இருந்தபோதிலும், பூட்டான் அதிகளவு சுற்றுலாப் பயணிகளைவேண்டுமென்றே தவிர்த்து வருகிறது. நாடு அதன் சுற்றுச்சூழலையும் கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
பூட்டான்-இந்தியா தொடர்பு
பூட்டானின் முதன்மை ஏற்றுமதி மின்சாரம், அது நீர்மின் மூலம் இந்தியாவிற்கு விற்கிறது. அது மட்டுமின்றி மரம், சிமெண்ட், விவசாய பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றையும் ஏற்றுமதி செய்கிறது. பூட்டான் இராணுவத்தைக் கொண்டிருந்தாலும், அதற்கு கடற்படையோ அல்லது விமானப்படையோ இல்லை. பூடானின் வான் பாதுகாப்பு தேவைகளை நிர்வகிப்பதில் இந்தியா உதவுகிறது.
வெளிநாட்டினரை திருமணம் செய்ய அனுமதி இல்லை
பூட்டானில் திருமணம் என்பது தனித்துவமான மரபுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அதனுடன் நெருங்கிய தொடர்புடையவர்களைத் தவிர, குடிமக்கள் வெளிநாட்டினரை திருமணம் செய்வது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. திருமண சடங்குகள் கலாச்சார பழக்கவழக்கங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன, தேவையான சடங்குகளை முடித்த பிறகே, ஒரு ஜோடி ஒரு குடும்பமாக அங்கீகரிக்கப்படுகிறது. பொதுவாக, கணவர் மனைவியின் வீட்டிற்குச் செல்கிறார், அவர் போதுமான அளவு சம்பாதித்தவுடன், அவர்கள் ஒரு தனி வீட்டிற்குச் செல்லலாம்.



Click it and Unblock the Notifications











