Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
திருப்பதி ஏழுமலையான் குபேரரிடம் வாங்கிய கடன் எவ்வளவு மற்றும் அந்த கடன் எப்போது முடிவடையும் தெரியுமா?
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடேஷ்வர் பாலாஜி கோயில், உலகின் மிகவும் பணக்கார கோவில்களில் ஒன்றாகும். திருப்பதி கோவிலுக்கு பக்தர்களால் அளிக்கப்படும் நன்கொடைகள் எப்போதுமே ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. பக்தர்கள் திருப்பதிக்கு நிறைய நன்கொடை அளிப்பதற்கான ஒரு காரணம், தனது திருமணத்துக்காக வெங்கடேஸ்வர பெருமான் வாங்கிய திருமணக் கடனை அடைக்கத்தான் என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதுமே பொதுவாக திருமணங்கள் என்பது நண்பர்களையும், குடும்பத்தினரையும் அழைத்து ஒரு தம்பதியை உருவாக்கும் ஒரு அழகிய சந்தர்ப்பமாகும். இந்த நிகழ்வை மறக்கமுடியாததாக மாற்ற எண்ணற்ற சடங்குகள் மற்றும் செலவுகள் செய்யப்படுகின்றன. கடவுளாக இருந்தாலும் இந்த விதியை மீற முடியாது என்பதற்கு உதாரணமாக வெங்கடேச பெருமான் தனது திருமணத்திற்காக குபேரரிடம் கடன் வாங்கிய நிகழ்வு புராணங்களில் கூறப்படுகிறது.

கடவுளாகவே இருந்தாலும் கடன் வாங்கினால் வட்டி கட்டித்தான் ஆக வேண்டும். குபேரனிடம் கடன் வாங்கிய மிகப்பெரிய தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக பக்தர்கள் பாலாஜிக்கு பணத்தை நன்கொடையாக வழங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இன்றுவரை, பக்தர்கள் தங்கம், நிலம், பணம் மற்றும் அவர்களின் தலைமுடி வரை அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறார்கள். கடவுள் விஷ்ணு ஏன் வெங்கிடேஸ்வரராக அவதாரம் எடுத்தார், எதற்காக இவ்வளவு கடன் வாங்கினார், இந்த கடன் எப்போது முடிவடையும் என பல கேள்விகளுக்கு இந்த பதிவில் பதிலை தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி பாலாஜி அவதாரம்
பாலாஜி அவதாரத்தின் கதை வைகுண்டத்தில் தொடங்குகிறது. அங்கு, விஷ்ணுபகவான் லட்சுமி தேவியுடன் வசித்து வந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட தெய்வீக மோதலால், லட்சுமி தேவி வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூமிக்குச் சென்றார். விஷ்ணு பகவானால் தனது மனைவியின் பிரிவைத் தாங்க முடியவில்லை. எனவே, அவர் ஸ்ரீனிவாசராக மாறி பூமிக்கு வந்து திருமலை மலைகளில் தஞ்சம் புகுந்தார். ஸ்ரீனிவாச பகவான் தனது வாழ்க்கையை தவத்திலும், தியானத்திலும் கழித்தார். லட்சுமி தேவியுடன் மீண்டும் இணைவதற்காக அவர் நீண்ட காலம் காத்திருந்தார். இறுதியில், அவர் திருமலை திருப்பதியின் முக்கிய கடவுளான வெங்கடேஸ்வரராக மாறினார்.
ஸ்ரீனிவாசர் மற்றும் பத்மாவதியின் காதல் கதை
பூமியில், ஸ்ரீனிவாசர் இளவரசி பத்மாவதியைச் சந்தித்தார். அவர் லட்சுமி தேவியின் அவதாரமாவார். அவர்களின் காதல் கதை தெய்வீக மறு இணைப்பு மற்றும் தெய்வீக நோக்கத்திற்கானது. இந்த அவதாரத்தில் ஸ்ரீனிவாசர் ஒரு சாதாரண மனிதராக இருந்தார், ஆனால் பத்மாவதி தேவி மன்னர் ஆகாச ராஜாவின் மகளாக இருந்தார். எனவே, மன்னர் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மிகப்பெரிய வரதட்சணையைக் கோரினார். அந்தத் தொகையை அவரால் ஏற்பாடு செய்ய முடியாததால், ஸ்ரீனிவாசர் செல்வத்தின் கடவுளான குபேரரை அணுகினார். குபேரர் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்க நாணயங்களை அவருக்குக் கடனாகக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
கலியுகம் முடிவதற்குள் ஸ்ரீனிவாசர் அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர் விஷ்ணுவின் சொர்க்க வாசஸ்தலமான வைகுண்டத்திற்குத் திரும்ப செல்ல அனுமதிக்கப்பட மாட்டார் என்ற நிபந்தனையுடன் இந்த தெய்வீகக் கடன் கொடுக்கப்பட்டது.
தெய்வீக கடனுக்குப் பின்னால் உள்ள ஆன்மீக அர்த்தம்
இந்த தெய்வீகக் கடன் ஒரு ஆழமான செய்தியைக் கொண்டுள்ளது. கடவுளாக இருந்தாலும் கூட கடமைகளை மதிக்க வேண்டும் மற்றும் கர்ம கடமைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்தக் கதை பக்தர்களுக்கு தர்மம், நேர்மை மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. இன்றும் கூட, திருமலையில் நன்கொடைகள் வழங்குவதன் மூலமோ அல்லது தலைமுடியை மொட்டையடிப்பதன் மூலமோ, வெங்கடேஸ்வரரின் கடனை அடைப்பதில் அவர்களும் பங்கேற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அதற்கு ஈடாக, அவர்கள் வெங்ககேஸ்வரரின் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.
ஸ்ரீனிவாச கல்யாணம்
ஸ்ரீனிவாசர் மற்றும் பத்மாவதி தேவியின் திருமணம் ஸ்ரீனிவாச கல்யாணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு நாள் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் சங்கமத்தைக் குறிக்கிறது. இது கோவில்களிலும், கலாச்சார நிகழ்வுகளிலும் காணப்படும் ஒரு போற்றத்தக்க பாரம்பரியமாகும். ஸ்ரீனிவாசர் மற்றும் பத்மாவதியின் திருமணம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நிகழ்வாகும். இந்த நிகழ்வில் தேவர்கள், முனிவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். திருமலை மலைகள் மலர்களாலும், ஒளியூட்டங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ஒரு தெய்வீக சூழ்நிலையை உருவாக்கியது. புராணங்களில் நடைபெற்ற மிகப்பெரிய பிரமாண்ட திருமணமாக இது இருந்தது.
ஆன்மீக முக்கியத்துவம்
திருகல்யாணம் என்பது வெறும் கலாச்சார நிகழ்வு மட்டுமல்ல. இது ஒரு ஆன்மீக பயணத்தை குறிக்கிறது. இது நம்பிக்கையின் வலிமை, தெய்வீக அன்பின் மதிப்பு மற்றும் வெங்கடேஸ்வரரை நம்புவதன் நன்மைகளை விளக்குகிறது. இந்த புனித நிகழ்வில் இணைவது செழிப்பு, சமநிலை மற்றும் ஆன்மீக ஆசீர்வாதங்களைத் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஸ்ரீனிவாச கல்யாணத்தின் கதை தெய்வீகத்திற்கும், பக்தருக்கும் நீடித்த பிணைப்பைக் காட்டுகிறது.
ஸ்ரீனிவாசர் எப்படி வெங்கடேஸ்வரராக எப்படி மாறினார்?
ஸ்ரீனிவாசர் வெங்கடேஸ்வரராக மாறியது ஒரு தெய்வீக நிகழ்வாகும். அவர் திருமணமான பிறகு, வெங்கட மலைகளை தனது நித்திய வீடாகத் தேர்ந்தெடுத்தார். அங்கு, மக்கள் அவரை வெங்கடேஸ்வரர் என்று வணங்கினர், அதன் அர்த்தம் "வெங்கட மலைகளின் இறைவன்" என்பதாகும். பின்னர் திருப்பதி பாலாஜி கோயிலை அவரது நினைவாகக் கட்டினார்கள், காலப்போக்கில், மக்கள் அவரை விஷ்ணுபகவானின் அவதாரம் என்று அறிந்து கொண்டனர்.
வெங்கடேஸ்வரருக்கு வழங்கப்படும் நன்கொடைகள்
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் திருப்பதி பாலாஜி கோவிலுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் வெற்றி, ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்காக பாலாஜியின் ஆசிர்வாதங்களை நாடுகிறார்கள். அப்படி வருகைதரும் போது தங்களால் இயன்ற காணிக்கைகளை திருப்பதி உண்டியலில் செலுத்துகிறார்கள்.
திருப்பதி கோவிலில் மொட்டையடிப்பது நன்றியையும், பணிவையும் வெளிப்படுத்துவதாகும். அதேசமயம் பணம், தங்கம், வைரம், நிலம் போன்றவற்றை காணிக்கையாகக் கொடுப்பது பக்தர்கள் குபேரனுக்கு தங்கள் தெய்வீக கடனை செலுத்துவதில் பங்கேற்பதை குறிக்கிறது.



Click it and Unblock the Notifications












