Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்த மரங்களை வீட்டில் வளர்ப்பது துரதிர்ஷ்டம் மட்டுமின்றி உங்கள் பாவத்தையும் அதிகரிக்குமாம்... உஷார்!
அனைத்து வீடுகளிலும் செடிகள் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது உங்கள் வீட்டிற்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதுடன் காற்றை சுத்திகரிக்கும் வேலையையும் செய்கின்றன. இவை மட்டுமின்றி மரங்களும், செடிகளும் உங்கள் வீட்டின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கவும் உதவும்.
மரங்களும் செடிகளும் வாஸ்துவுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஆனால் வீட்டில் சில செடிகளை நடுவது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை அழைத்துவரும். இந்த செடிகளை நடுவதால் ஏற்படும் வாஸ்து தோஷத்தால் உங்கள் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலும் புல்வெளி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வீட்டின் அழகை அதிகரிக்க புல்வெளியில் பல அழகான மரங்கள் மற்றும் செடிகள் இருக்க வேண்டும். ஆனால் சில மரங்கள் வீட்டின் வாஸ்துவை கெடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த செடிகளை வீட்டில் நடுவது பல இன்னல்களை ஏற்படுத்தும். அவை என்னென்ன மரங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
புளியமரம்
நமது சமூகத்தில் பல காலமாக கட்டமைக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளின்படி, புளிய மரங்கள் எதிர்மறை ஆற்றலை மிக விரைவாக ஈர்க்கின்றன. அதனால் தான் வீட்டில் புளியமரம் நடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் விரும்பினால், கோயில் போன்ற ஏதாவது வழிபாட்டு தலத்தில் அல்லது பொது இடத்தில் இதனை.நடலாம்.
அகாசியா அல்லது வேல மரம்
ஆயுர்வேதம் மற்றும் பல்வேறு மத நூல்களின் படி, வேல மரம் மிகவும் புனிதமான மரம். சில இடங்களில் இது ஷமி மரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் முட்கள் இருப்பதால் அதை வீட்டில் நடக்கூடாது. அகாசியா மட்டுமின்றி அனைத்து வகையான முள் செடிகளையும் வீடுகளில் இருந்து தள்ளி நட வேண்டும். ஏனெனில் இவை எதிர்மறை ஆற்றலை ஈர்த்து உங்கள் வீட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
அரச மரம்
இந்திய மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளின் படி அரச மரம் மிகவும் புனிதமான மரமாக கருதப்படுகிறது. பத்து அசுவமேத யாகங்கள் நடத்துவதால் கிடைக்கும் பலன்களை ஒரு அரச மரம் வளர்ப்பது கொடுக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த மரத்தை வீட்டில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, அரச மரத்தை நடுவதால் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் அது வளர்ந்து வீட்டின் அடித்தளத்தை சேதப்படுத்தும். அந்த சூழலில் அதனை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும், அரச மரத்தை வெட்டுவது மிகப்பெரிய பாவமாகும். அதை வெட்டி பாவத்தைச் சேர்ப்பதை விட நடாமலே இருப்பது நல்லது.
வாழை மரம்
வாழை மரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது, எனவே அதை கோவிலில் நடுவது மிகவும் பொருத்தமானது. இந்த மரத்தை வீட்டில் நட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இம்மரத்தின் புனிதம் கருதி கோவில் இருக்கும் இடத்தில் நடுவது பொருத்தமாக கருதப்படுகிறது.
போன்சாய் மரம்
துரதிர்ஷ்டவசமாக, வாஸ்து சாஸ்திரத்தின் படி, போன்சாய் செடி உங்கள் வீட்டு அலங்காரத்திற்கு ஒரு மோசமான செடியாக இருக்கும். இவை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இந்த செடிகள் மங்களகரமானவை அல்ல. இந்த செடியை வீட்டில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. இது மெதுவான அல்லது வளர்ச்சியின்மையைக் குறிக்கிறது மற்றும் மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடும்.



Click it and Unblock the Notifications












