Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்த ஒன்றை பாத்ரூமில் வையுங்கள்.. தொல்லைகள் அனைத்தும் நீங்கும்..!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பிரதான நுழைவாயிலிலிருந்து படுக்கையறை, வாழ்க்கை அறை, படிக்கும் அறை, சமையலறை, குளியலறை வரை சரியான திசையில் அமையப்பெறுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் வீட்டில் இருக்கும் இந்த பொருள்களில் ஏதேனும் தவறான திசையில் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்படும். அது அந்த வீட்டில் வசிப்பவருக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
போபாலைச் சேர்ந்த ஜோதிடர் வாஸ்து ஆலோசகர் பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா விரிவாக விளக்கியபடி, குளியலறையை பயன்பாட்டிற்குப் பிறகு ஈரமாக வைத்திருப்பது தொடர்பான சில வாஸ்து குறிப்புகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்லலாம் வாங்க...

குளியலறையைப் பயன்படுத்திய பிறகு ஈரமாக வைத்திருக்கும் பழக்கம் இருந்தால், இது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக நீங்கள் நிதி நெருக்கடியையும் சந்திக்க நேரிடும். வாஸ்து தோஷத்தைக் குறைக்க, குளியலறையைப் பயன்படுத்திய பிறகு அது முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாஸ்து தோஷம் ஏற்படாது.
உங்கள் வீட்டில் இடத்தை மிச்சப்படுத்த ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டினால், அதுவும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும். இது உங்கள் வாழ்க்கையில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை இருக்க வேண்டும் என்றால், இரண்டிற்கும் இடையே திரை போட வேண்டும்.
குளியலறையில் படிகாரம் வைக்கவும். குளியலறை தொடர்பான வாஸ்து தோஷத்தை நீக்க இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும். மேலும், பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க குளியலறையில் படிகாரத்தை வைக்கவும். படிகாரத்தை யாரும் பார்க்காத இடத்தில் வைக்க வேண்டும்.
இந்த படிகாரத்தை வீட்டில் வைப்பதினால் வாஸ்து தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறைவதுடன் மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் செல்வமும் பெருகும். இது தவிர தூங்கும் முன் கறுப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது, தெரியாத பயத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் வாஸ்து தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை நீக்க, 50 கிராம் படிகாரத்தை எடுத்து, வீட்டின் அல்லது அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் அல்லது மூலையிலும் வைக்கவும். படிகாரத்தின் பயன்பாடு பண ஆதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் துடைக்கும் போது படிகாரத்தை பயன்படுத்தலாம். சில சமயங்களில் குளிக்கும் நீரிலும் படிகாரத்தை சேர்க்கலாம்" என்று அவர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications