இன்று நாம் கொண்டாடி மகிழும் IPL இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியால் தொடங்கப்பட்டதாம் தெரியுமா?

இந்தியாவில் கிரிக்கெட் மோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட் மோகம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் IPL மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. 2007-ல் IPL ஆரம்பிக்கப்பட்ட போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இது இவ்வளவு பெரிய பொழுதுபோக்காக மாறும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

100 மில்லியன் இந்தியர்கள் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து மகிழ்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டு டீமை உற்சாகப்படுத்த ஆண்டுதோறும் மைதானத்தில் கூடுகிறார்கள்.

Unknown History of IPL in Tamil

இந்த வருடமும் IPL புயல் அடிக்கத் தொடங்கிவிட்டது. மக்கள் பெருமளவில் மைதானங்களிலும், வீட்டில் நேரடி ஒளிப்பரப்பிலும் IPL-யை ரசித்து வருகின்றனர்.

இந்தியர்களிடையே இருந்த வெறித்தனமான கிரிக்கெட் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கிரிக்கெட்டை புதிய வடிவத்துடன் அறிமுகப்படுத்த முடிவு செய்தது. அதன்விளைவாக அவர்கள் 20 ஓவர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் வடிவத்தை அறிமுகப்படுத்தினர்.

ஐபிஎல் அறிமுகம்
இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் கட்டமைப்பை உருவாக்கும் யோசனை முதலில் பிசிசிஐயின் துணைத் தலைவரான லலித் மோடியால் கொண்டு வரப்பட்டது. இளம் கிரிக்கெட் பிரியர்கள் உட்பட அனைத்து தலைமுறை மக்களையும் கவரும் வகையில் ஒரு லீக்கை உருவாக்க லலித் மோடி தயாராக இருந்தார்.

5 நாள் விளையாடக்கூடிய டெஸ்ட் போட்டி போன்ற மெதுவான ஆட்டங்களை பார்வையாளர்கள் மறக்கச் செய்யும் உயர்தர போட்டிகளை இந்த டி20 வடிவப் போட்டி வழங்கும் என்று அவர் நம்பினார். ஆனால் இப்போது அவர் பொருளாதார குற்றத்திற்காக இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுண்ட்-ராபின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது, ஐபிஎல் குழு நிலை விளையாட்டுகள் மற்றும் கடைசி நான்கு பிளேஆஃப்களை உள்ளடக்கியது. இந்த வடிவம் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் குறைந்தது ஒரு முறை விளையாட அனுமதிக்கிறது. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் முந்தைய பிளேஆஃப் நிலைக்குச் செல்கின்றன.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனை இந்தியா நடத்தியது, இதில் எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. விளையாட்டுகள் வேகமாகவும் உற்சாகமாகவும் இருந்தன. அதோடு ஒரு சில நாட்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு விரைவாக முடிக்கப்பட்டது.

ஐபிஎல் சிறப்புகள்
ஐபிஎல் அமைப்பு புதியதாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. இதனால் இந்திய மற்றும் சர்வதேச ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தங்களுக்குப் பிடித்த இந்திய மற்றும் பன்னாட்டு கிரிக்கெட் வீரர்கள் கூட்டாக விளையாடுவதை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க இருக்கும் மக்கள் விரும்புகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகளின் நேரம்தான் அதனை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. பெரும்பாலான நபர்களால் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க முடியவில்லை. டெஸ்ட் போட்டிகள் சில சமயங்களில் அலுப்பாக மாறியது, ஆனால் ஐபிஎல் போட்டிகள் மூன்று மணிநேரம் மட்டுமே இருக்கும், இது பெரும்பாலான மக்களுக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

IPL வெற்றி வரலாறு
2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்
2009 - டெக்கான் சார்ஜர்ஸ்
2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013 - மும்பை இந்தியன்ஸ்
2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2015 - மும்பை இந்தியன்ஸ்
2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2017 - மும்பை இந்தியன்ஸ்
2018 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2019 - மும்பை இந்தியன்ஸ்
2020 - மும்பை இந்தியன்ஸ்
2021 - சென்னை சூப்பர் கிங்ஸ்
2022 - குஜராத் டைட்டன்ஸ்
2023 - ?

நேரடி ஒளிபரப்பு மாற்றப்பட்டுள்ளது?
கடந்த ஐபிஎல் சீசன்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இந்த வருடம் இந்தியாவில் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பும் உரிமையை Viacom 18 நிறுவனம் பிசிசிஐக்கு மொத்தம் 20,500 கோடி செலுத்தி கைப்பற்றியுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்தியாவில் போட்டிகளை டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 14, 2023, 18:15 [IST]
Desktop Bottom Promotion