Latest Updates
-
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
500 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 2 ராஜயோகம்: மார்ச் முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது...
Two Rajyoga Made After 500 Years: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் இரண்டு ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகவுள்ளன.
அதுவும் நீதிமான் சனி பகவான் மற்றும் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனால் உருவாகவுள்ளன. அதில் சனி ஏற்கனவே சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனார். அதே வேளையில், சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்கவும் உள்ளார். இப்படி இரண்டு மங்களகரமான ராஜயோகங்கள் மார்ச் மாதத்தில் உருவாகவுள்ளன.

இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கப் போகிறது. எதிர்பாராத வகையில் நிதி நன்மைகளுடன், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மாளவ்ய மற்றும் சச ராஜயோகமானது நற்பலன்களை வழங்கும். முக்கியமாக குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். எந்த ஒருவேலையிலும் முழு கவனத்தை செலுத்த முடியும். புத்திசாலித்தனமாக அனைத்து முடிவுகளையும் எடுப்பீர்கள். உங்களின் ஆளுமை மேம்படும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் இனிமையாக இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த திருமண பேச்சுகள், இக்காலத்தில் வெற்றிகரகமாக முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம் சாதகமான பலன்களை வழங்கும். முக்கியமாக ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கூட்டு தொழில் செய்ய நீண்ட காலமாக திட்டமிட்டிருந்தால், இந்த யோக காலத்தில் அதைத் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் நிதி நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்
மாளவ்ய மற்றும் சச ராஜயோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும். புத்திசாலித்தனத்தால் பல காரியங்களில் வெற்றி காண்பீர்கள் மற்றும் நினைவாற்றல் மேம்படும். ஆனால் உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைத்தால், அந்த கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் உடனே கிடைக்கும். இந்த யோகத்தால் வாழ்க்கையில் புதிய உயரத்தை அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications