Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்தியாவின் டாப் 3 பணக்கார கோவில்கள் என்னென்ன தெரியுமா? 3-வது இடத்துல இருக்கிற கோவில பாத்தா ஷாக் ஆகிருவீங்க!
இந்தியா பல்வேறு மதங்களின் பிறப்பிடமாகவும், கலாச்சாரங்கள் நிறைந்த நாடாகவும் உள்ளது, குறிப்பாக ஆயிரக்கணக்கான கோவில்களின் தாயகமாக உள்ளது. ஒரு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 50,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு கோவிலும் தனித்துவமான ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
இந்த புனிதத் தலங்கள் நம்பிக்கையின் மையங்களாக மட்டுமல்லாமல், அவற்றின் கட்டிடக்கலை நமது வரலாற்றின் மகத்துவத்தையும், கலாச்சார செழுமையையும் போற்றும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்த கோவில்களுக்கு உள்நாட்டு பக்தர்கள் முதல் வெளிநாட்டு பக்தர்கள் வரை 1 ரூபாய் முதல் பல கோடி வரை நன்கொடைகளை வழங்குகிறாள்.

இந்த கோவில்கள் பல ஆண்டுகளாக நம்ப முடியாத அளவிற்கு செல்வத்தைக் குவித்துள்ளன. நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் அடையாளமாக வழங்கப்படும் இந்த நன்கொடைகள், கோவில்கள் தங்கம், வைரம் பதித்த ஆபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் உள்ளிட்ட மகத்தான பொக்கிஷங்களைக் குவிக்க வழிவகுத்தன.
ஒவ்வொரு நாளும், இந்த புனிதத் தலங்கள் மத விழாக்கள் மற்றும் சடங்குகளை நடத்துகின்றன, ஆசீர்வாதங்களையும் ஆன்மீக நிறைவையும் தேடும் எண்ணற்ற பக்தர்களை ஈர்க்கின்றன. இந்திய கோவில்களின் ஒருங்கிணைந்த செல்வம் ஆயிரக்கணக்கான கோடிகளைத் தாண்டுவதால், அவை பணக்கார ஆன்மீகத் தலங்களாக உள்ளன. இந்தியாவின் பணக்கார கோவில்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பத்மநாபசுவாமி கோவில்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோவில், இந்தியாவின் பணக்கார கோவில் மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய பணக்கார கோவில் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது. பகவான் விஷ்ணுவின் இந்த பழங்கால கோவில், அதன் நிலத்தடி அறைகளில் சுமார் ரூ. 1 டிரில்லியன் மதிப்புள்ள மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இங்கு பக்தர்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் பக்தியின் அடையாளமாக நகைகள், சிலைகள் மற்றும் தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். அதன் குறிப்பிடத்தக்க பொக்கிஷங்களில், மகாவிஷ்ணுவின் தங்க சிலை மட்டும் ரூ. 500 கோடி மதிப்புடையது என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் ரூ. 1,20,000 கோடி நிகர மதிப்புள்ள பத்மநாபசுவாமி கோயில் தெய்வீக பக்தி மற்றும் மகத்தான செல்வத்தின் அடையாளமாக நிற்கிறது.
பத்மநாபசுவாமி கோவில் வைணவ மதத்தின் 108 புனித வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். அதன் வரலாற்று முக்கியத்துவம் ஆரம்பகால இடைக்கால தமிழ் இலக்கியத்தில் (6-9 ஆம் நூற்றாண்டுகள்) இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக, கோவில் கட்டமைப்பு விரிவாக்கங்களுக்கு உட்பட்டது, 16 ஆம் நூற்றாண்டில் அதன் அற்புதமான அலங்கரிக்கப்பட்ட கோபுரம் உட்பட முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த கோவிலில் ஆறு அறைகள் உள்ளன, ஆனால் அதில் அறை B ஒரு தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மற்ற அறைகளைப் போலல்லாமல், இது கோவில் கருவூலத்தின் ஒரு பகுதியாக இல்லை. இந்த புனித அறை ஸ்ரீ பத்மநாபசுவாமியுடன் நெருங்கிய தொடர்புடையது, இங்கு தெய்வத்தின் சிலை மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன.
திருப்பதி பாலாஜி கோவில்
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படும் திருப்பதி பாலாஜி கோவில், இந்தியாவின் இரண்டாவது பணக்கார கோவிலாகும். 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, உலகிலேயே அதிக மக்கள் வருகைத்தரும் ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகும்.
அரசாங்க அறிக்கையின்படி, இந்த கோவிலுக்கு சுமார் 30,000 பக்தர்களிடமிருந்து தினசரி நன்கொடையாக சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருகிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி, அதன் மொத்த சொத்து மதிப்பு ரூ.900 கோடியைத் தாண்டியது, இதில் நம்ப முடியாத வகையில் 52 டன் தங்க நகைகள் அடங்கும்.
ஒவ்வொரு ஆண்டும், கோவில் நன்கொடையாக வழங்கப்படும் 3,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்கிறது.
மாதா வைஷ்ணோ தேவி கோவில்
இந்தியாவின் மூன்றாவது பணக்கார கோவில் மாதா வைஷ்ணோ தேவி ஆலயம். கத்ராவிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த புனிதத்தளம், ஜம்முவின் திரிகுடா மலைகளில் 5,200 அடி உயரத்தில் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான குகைக்குள் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள், திருப்பதி பாலாஜியைத் தொடர்ந்து இந்தியாவில் அதிக மக்களால் பார்வையிடப்படும் இரண்டாவது கோவிலாக இது உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பக்தர்கள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர், இது கோயிலின் தங்க இருப்பை 1.2 டன்களாக உயர்த்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், கோவிலுக்கு தோராயமாக ரூ.500 கோடி மதிப்புள்ள நன்கொடைகள் கிடைக்கின்றன, அதனால்தான் இந்தியாவின் பணக்கார கோவில்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.



Click it and Unblock the Notifications












