Latest Updates
-
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! -
இந்தியாவில் இரண்டு தலைநகரங்கள் உள்ள தனித்துவமான மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான வாழைக்காய் புளி கூட்டு ரெசிபி: ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
அட்சய திருதியை நாளில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: சுக்கிரனால் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.! -
இதய ஆபத்தை துல்லியமாக கண்டறியும் புதிய இரத்த சோதனை: இந்த சோதனையின் பெயர் என்ன தெரியுமா? -
வெயிலுக்கு இதமான மோர் ரசமும், வெண்டைக்காய் சிப்ஸும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
அட்சய திருதியை அன்று உருவாகும் அக்ஷய யோகத்தால் ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் -
பொடுகு தொல்லைக்கு குட்-பை சொல்லும் நேச்சுரல் ஹேர் பேக்கை பகிர்ந்து கொண்ட டாக்டர்!
தமிழ்நாட்டின் டாப் 10 பெரிய மாவட்டங்கள் இதுதான்...முதலிடத்தில் உள்ள மாவட்டம் எதுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!
தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அதன் தனித்துவமான கலாச்சாரம், பொருளாதார வலிமை, பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்ற மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு 38 மாவட்டங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய மாநிலமாகும்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் மாறுபட்ட மக்கள்தொகை மற்றும் பல்வேறு புவியியல் நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் நிலப்பரப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டின் டாப் 10 பெரிய மாவட்டங்கள் எவை என்றும், அவற்றில் முதலிடத்தில் இருப்பது எது என்றும் நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? இந்த பதிவில் தமிழ்நாட்டின் டாப் 10 மாவட்டங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

திண்டுக்கல்
அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது திண்டுக்கல். இது 6,266 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாகுக உள்ளது. விவசாயம், ஜவுளித் தொழில்கள் மற்றும் வர்த்தகம் ஆகியவை இந்த மாவட்டத்தின் முக்கிய வருமான ஆதாரங்களாக உள்ளது. இது குறிப்பாக திராட்சை மற்றும் வாழை, மல்லி போன்ற தோட்டக்கலைப் பொருட்களுக்கும் பெயர் பெற்றது. இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் திண்டுக்கல் நகரம் கடந்த காலத்தில் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
திருநெல்வேலி
6,810 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாக உள்ளது. இதன் பொருளாதாரம் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களைச் சார்ந்துள்ளது. நெல்லையில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள குற்றால அருவிகளுக்காக இந்த மாவட்டம் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வா உலகப்புகழ் பெற்றதாகும்.
திருவண்ணாமலை
6,191 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் திருவண்ணாமலை மூன்றாவது இடத்தில் உள்ளது. விவசாயம், சுற்றுலா மற்றும் சிறுதொழில்கள் இதன் பொருளாதாரத்தை வளர்க்கும் அம்சங்களாக உள்ளது. இந்த மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் புனிதமான அண்ணாமலையார் கோயிலுக்கு ஈர்க்கிறது.
வேலூர்
6,050 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக் கொண்ட வேலூர் தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாவட்டமாக உள்ளது. இது அதன் தோல் தொழில்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக புகழ் பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் கோட்டை இந்த மாவட்டத்தின் முக்கிய ஈர்ப்பாகத் திகழ்கிறது.
ஈரோடு
5,722 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், ஈரோடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 'தமிழ்நாட்டின் ஜவுளி நகரம்' என்று அடிக்கடி அழைக்கப்படும் ஈரோடு, அதன் மஞ்சள் சாகுபடி மற்றும் ஏற்றுமதிக்கும் புகழ்பெற்றது, அதனால்தான் இது 'மஞ்சள் நகரம்' என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது.
சேலம்
சேலம் 5,237 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் ஆறாவது பெரிய மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் எஃகு உற்பத்தி, ஜவுளி மற்றும் விவசாயத்தை சார்ந்து உள்ளது. மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் காபி போன்ற பயிர்கள் இங்கு பெருமளவில் பயிரிடப்படுகின்றன.
திருப்பூர்
5,187 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட திருப்பூர் தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய மாவட்டமாக உள்ளது. 'இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம்' என்று அழைக்கப்படும் இது, ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலுக்கான ஒரு உலகளாவிய மையமாகத் திகழ்வதுடன், உலகெங்கிலும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. திருப்பூரின் பொருளாதா வளர்ச்சி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது.
கிருஷ்ணகிரி
5,129 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள தமிழ்நாட்டின் எட்டாவது பெரிய மாவட்டம் கிருஷ்ணகிரி. 'தமிழ்நாட்டின் மாம்பழத் தலைநகரம்' என்று பிரபலமாக அறியப்படும் இந்த மாவட்டம், தனது பரந்த மாம்பழ சாகுபடி மற்றும் ஏற்றுமதித் தொழிலுக்காகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.
கோயம்பத்தூர்
பெரும்பாலான மக்கள் கோயம்புத்தூர்தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் 4,850 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் கோயம்பத்தூர் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இது இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கிறது, மேலும் தானியங்கி வாகன உதிரிபாகங்கள், பம்புகள் மற்றும் மோட்டார்கள் தயாரிப்பதற்கான ஒரு முக்கிய மையமாகவும் திகழ்கிறது. கோயம்பத்தூர் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் 4,745 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. இது இந்தியாவின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றாகும் மற்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அளவில் உப்பு உற்பத்தி செய்யும் மாவட்டமாகவும் உள்ளது.



Click it and Unblock the Notifications













