இந்தியாவில் அதிகம் கெட்ட வார்த்தைகள் பேசும் டாப் 10 மாநிலங்கள்...எந்த மாநிலம் முதல் இடத்தில் இருக்கு தெரியுமா?

Top 10 Indian States With The Highest Use of Bad Words: உலகம் முழுவதும் கோபத்தை வெளிப்படுத்த அனைவரும் தேர்ந்தெடுக்கும் முதல் வழி மோசமான வார்தைகளை பேசுவது. தங்களை கோபப்படுத்தியவர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டுவது அனைவருக்குமே இயல்பாக இருக்கும் பழக்கமாகும். ஆனால் இந்தியாவில் எந்த மாநில மக்கள் அதிகம் கெட்ட வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

பேராசிரியர் டாக்டர் சுனில் ஜக்லான் தலைமையில் "காலி பந்த் கர் அபியான்" என்ற தலைப்பில் ஒரு தனித்துவமான நாடு தழுவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்தியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு பொதுவாக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த பிரச்சாரம் உருவாக்கப்பட்டது.

Top 10 Indian States With The Highest Use of Bad Words

பல்வேறு தொழில்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 70,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு ஒரு நாளில் இந்தியர்கள் எவ்வளவு தவறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் அதிகம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்தது. தினசரி உரையாடலின் ஒரு பகுதியாக தவறான வார்த்தைகளை பயன்படுத்தும் டாப் 10 இந்திய மாநிலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

டெல்லி

இந்தியாவின் தலைநகரம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு கிட்டதட்ட 80% மக்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். வேகமான வாழ்க்கை முறையில் உள்ள டெல்லியில், டெல்லிவாசிகள் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல்கள், நகர்ப்புற மன அழுத்தம் மற்றும் இடைவிடாத போட்டி ஆகியவற்றால் போராடுகிறார்கள். கோபம் வெடிக்கும்போது, ​​தவறான மொழி ஒரு பொதுவான வெளியீடாக மாறுகிறது. அதிர்ச்சியூட்டும் விதமாக, இதில் அதிக சதவீதம் பாலினத்தை இலக்காகக் கொண்ட வார்த்தைகளை உள்ளடக்கியது.

பஞ்சாப்

கலாச்சார பெருமைக்கு பெயர்பெற்ற பஞ்சாப் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, இங்கு 78% மக்கள் தவறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இங்கு கோபப்பட்டால் மட்டுமல்ல மகிழ்ச்சியான நேரத்தில் கூட தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. நெருக்கமான நண்பர்களிடையே, பயன்படுத்தும் இந்த வார்த்தைகள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

Top 10 Indian States With The Highest Use of Bad Words

உத்தரப் பிரதேசம்

74% மக்கள் இங்கு கெட்ட வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். சாலையோர சண்டைகள் முதல் அரசியல் பேச்சுகள் வரை, உத்தரப் பிரதேசத்தின் பேச்சு வழக்கில் தவறான வார்த்தைகள் ஆழமாகப் பதிந்துள்ளது. இது பெரும்பாலும் ஒருவரை அவமதிப்பது பற்றியதாக மட்டுமில்லாமல் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

பீகார்

பீகாரில் 74% மக்கள் அதிகளவு தவறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கருத்து வேறுபாடுகளின் போது, ​​அப்பட்டமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட மொழியைப் பயன்படுத்துவது பொதுவானதாக உள்ளது. இங்கு கிராமப்புற மக்கள் அதிகளவு கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களாக இருக்கிறார்கள்.

ராஜஸ்தான்

நீண்ட வரலாறும், வலிமையான கலாச்சாரமும் இருந்த போதிலும் ராஜஸ்தானில் 68% மக்கள் கடுமையான வார்த்தைகளை பேசுவதாக ஆய்வுகள் கூறுகிறது. குடும்ப தகராறுகளாக இருந்தாலும் சரி அல்லது சாதாரண வதந்திகளாக இருந்தாலும் சரி, அவர்கள் அவதூறான வார்த்தைகளை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

ஹரியானா

ஹரியானாவில் 62% மக்கள் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அதன் கிராமிய மற்றும் அச்சமற்ற அணுகுமுறைக்கு பிரபலமான ஹரியானா, நேரடியாக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறது. ஆண்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில், இத்தகைய மொழி ஆண்மை அல்லது உறுதிப்பாட்டின் அடையாளமாகக் காணப்படுகிறது.

மகாராஷ்டிரா

வளர்ந்த நகரங்களில் மக்கள் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையை மகாராஷ்டிரா பொய்யாக்கியுள்ளது, இங்கு கிட்டதட்ட 58% மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அவதூறான வார்த்தைகளை பேசுகிறார்கள். மும்பை மற்றும் புனேவில் உள்ள பெரிய நகரங்களில் நிலவும் மன அழுத்தம் பெரும்பாலும் அவதூறான வார்த்தைகள் மூலம் வெளிப்படுகிறது. நெரிசலான ரயில்கள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் சந்தை குழப்பம் ஆகியவை மக்களை கொச்சை வார்த்தைகளை பேசத் தூண்டுகின்றன.

குஜராத்

பொதுவாக கண்ணியமான நடத்தைக்கு பெயர் பெற்ற குஜராத்தில், குறிப்பாக இளைஞர்களிடையே அவதூறான வார்த்தைகள் வேகமாக அதிகரித்து வருகிறது. பாப் கலாச்சாரம், சமூக ஊடகங்கள் மற்றும் பிராந்திய தாக்கங்களால் இளைய தலைமுறையினர் தங்களை வெளிப்படுத்தும் விதத்தை மாற்றிக்கொண்டிருக்கலாம். இதனால் இங்கு 55% மக்கள் அதிகம் அவதூறான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்களில், அவ்வப்போது மக்கள் கொச்சையான சொற்களைப் பேசுகிறார்கள், இங்கு கிட்டதட்ட 48% மக்கள் அன்றாட வாழ்க்கையில் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இவை அன்றாட வாழ்க்கையில், குறிப்பாக சூடான பரிமாற்றங்கள் அல்லது கதை சொல்லும் போது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உத்தரகண்ட்

பாரம்பரியமாக அமைதியான மற்றும் மரியாதையான பேச்சுக்கு பெயர் பெற்ற உத்தரகண்டின் சில பகுதிகள் தற்போது வேகமான மாற்றத்தை கண்டு வருகிறது. அதிகரித்து வரும் நகரமயமாக்கலும், கடுமையான பேச்சுவழக்குகளைக் கொண்ட அண்டை மாநிலங்களின் செல்வாக்கும், தவறான மொழியின் மிதமான அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளன. தற்போது 45% மக்கள் இங்கு அன்றாட வாழ்க்கையில் அவதூறான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.

Story first published: Friday, August 22, 2025, 13:13 [IST]
Desktop Bottom Promotion