Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
உலகில் அதிக தற்கொலைகள் நடக்கும் டாப் 10 நாடுகள்... இந்தியாவில் எவ்வளவு தற்கொலைகள் நடக்குது தெரியுமா?
தற்போதைய வேகமான உலகத்தில் மோசமான வாழ்க்கை முறையால் தற்கொலை விகிதங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரித்து வரும் தற்கொலை விகிதங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் முதல் சமூகக் காரணங்கள் என பல காரணங்கள் இருக்கலாம். தற்கொலை என்பது தனிநபரை மட்டுமல்ல, உலகளவில் குடும்பங்கள் மற்றும் சமூகங்களையும் பாதிக்கும் ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது. மக்களின் உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன நலனுக்கும் முன்னுரிமை அளித்து வந்தால் இந்த பிரச்சினையைத் தடுக்கலாம்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 15-29 வயதுடையவர்கள் அதிகம் மரணிப்பதற்கு மூன்றாவது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது. உலகம் முழுவதும் 720,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை காரணமாக இறக்கின்றனர். சில நாடுகளில் தற்கொலை விகிதங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் உலகளவில் அதிக தற்கொலை விகிதங்களை கொண்ட டாப் 10 நாடுகள் என்னென்ன மற்றும் இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

லெசோதோ
தென்னாப்பிரிக்காவில் உள்ள லெசோதோ, உலகிலேயே அதிக தற்கொலை விகிதத்தைக் கொண்டுள்ளது, இது 100,000 பேருக்கு சுமார் 36.7 பேர் தற்கொலை செய்கின்றனர். இங்கு நிலவும் அதிக வறுமை, வேலையின்மை மற்றும் எச்.ஐ.வி விகிதங்கள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. கூடுதலாக, போதுமான சுகாதார விழிப்புணர்வு இல்லாததது இங்கு மனநலப் பிரச்சினைகளை அதிகரிக்கிறது.
எஸ்வதினி
உலகிலேயே இரண்டாவது பெரிய தற்கொலை விகிதத்தை எஸ்வதினி கொண்டுள்ளது, இங்கு 100,000 பேருக்கு சுமார் 31.8 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வறுமை, நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சுகாதார அமைப்பு மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மனநல வசதிகள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
கயானா
தென் அமெரிக்காவில் உள்ள கயானா, உலகின் அதிக தற்கொலை விகிதம் கொண்ட மூன்றாவது நாடாகும், இங்கு 100,000 பேரில் சுமார் 26.3 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மனநோய் தொடர்பான பிரச்சினைகள், குடிப்பழக்கம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் போன்ற ஏராளமான காரணங்களால் இங்கு தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.
ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது, இங்கு 100,000 பேருக்கு சுமார் 25.4 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இங்கு பல தசாப்தங்களாக நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, வேலையின்மை மற்றும் சுகாதார வசதிகளின் பற்றாக்குறை போன்றவை இதற்கு காரணமாக உள்ளது.
சாலமன் தீவுகள்
பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றாந சாலமன் தீவுகள், வேலையின்மை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனநோய் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளால் இந்த பட்டியலில் உள்ளது, இது 100,000 பேருக்கு 22.5 என்ற விகிதத்தில் அதிக தற்கொலை விகிதம் உள்ளது.
சுரினாம்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சுரினாம், உலகிலேயே அதிக தற்கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஆறாவது இடத்தில உள்ளது, இது சாலமன் தீவுகளைப் போலவே 100,000 பேருக்கு 22.5 ஆகும். மோசமான மனநல சுகாதார அமைப்பு, குறைந்த விழிப்புணர்வு மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் ஆகியவை தற்கொலை வழக்குகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் காரணிகளாகும்.
உருகுவே
உருகுவே இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது, 100,000 பேருக்கு 22.0 அதிக தற்கொலை விகிதங்களுடன் இந்த நாடு மோசமான நிலையில் உள்ளது. நகர்ப்புற மன அழுத்தம், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் தனிமை போன்றவை இதற்கு காரணமாக உள்ளது.
தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் வறுமை, வன்முறை மற்றும் மனநலம் பிரச்சினைகள் போன்றவை நாட்டின் தற்கொலை விகிதம் 100,000 பேருக்கு 21.1 ஆக இருப்பதற்கு காரணிகளாக உள்ளன. இங்கு, அதிகளவு இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மைக்ரோனேஷியா
மைக்ரோனேஷியா என்பது ஒரு பசிபிக் தீவு நாடாகும், அங்கு 100,000 பேருக்கு 20.8 என்ற அதிக இளைஞர் தற்கொலை விகிதங்கள் பதிவாகியுள்ளன. மன அழுத்தம், மோசமான வேலை வாய்ப்புகள் மற்றும் மோசமான சுகாதார வசதிகள் ஆகியவை இந்த மோசமான விளைவுக்கு காரணமாக இருக்கின்றன.
தென் கொரியா
இந்த பட்டியலில் உள்ள நாடுகளிலேயே தென் கொரியா மட்டுமே வளர்ந்த நாடாகும். கல்வி அழுத்தம், வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் சமூக தனிமை ஆகியவை 20.6 என்ற அதிக தற்கொலை விகிதங்களுக்கு பங்களிக்கும் குறிப்பிடத்தக்க காரணங்களாகும். மேம்பட்ட சுகாதார அமைப்பு இருந்தபோதிலும், வேலை மற்றும் மனரீதியான பிரச்சினைகள் மக்களை தற்கொலை நோக்கி தள்ளுகிறது.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
உலகில் அதிக தற்கொலை விகிதங்களைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. 140 கோடிக்கும் அதிக மக்களைக் கொண்ட இந்தியாவில் 100,000 பேருக்கு 12.6 என்ற தற்கொலை விகிதம் உள்ளது. சமூக அழுத்தம் , நிதி நெருக்கடி, தேர்வு மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற சவால்கள் நாடு தழுவிய மன ஆரோக்கியத்தை பாதிக்கும் மிகவும் பரவலான காரணிகளாக உள்ளன.



Click it and Unblock the Notifications












