Latest Updates
-
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,!
திருப்பதி செல்லும் இந்த பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்... என்ன தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சராசரியாக நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் இலவச டிக்கெட்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்..இதில் மூத்த குடிமக்களும் அடங்குவர்.. அதனால் திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்காக சில வசதிகளை அறிவித்துள்ளது.. அவர்கள் மணி கணக்கில் காத்திருக்காமல் உடனே கோவில் உள்ளே சென்று ஏழுமலையானை தரிசித்து விட்டு 30 நிமிடத்தில் வெளியில் வந்துவிடலாம்..

1. அதில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்ய வசதியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
2. மூத்த குடிமக்கள் இலவச தரிசனத்திற்காக தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணிக்கு 2 இடங்களை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. அங்கு சென்றால் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் இந்த வசதிக்கு தகுதியுடையவர்களாக அங்கிகரிக்கப்படுவார்கள்..
3. இதனால் மூத்த குடிமக்கள் 30 நிமிடங்களுக்குள் சாமி தரிசனம் செய்ய முடியும். மூத்த குடிமக்கள் தரிசனம் செய்யும் போது மற்ற அனைத்து வரிசைகளும் நிறுத்தப்படும், இதனால் குடிமக்கள் அமைதியான முறையில் மற்றும் எந்தவித தொந்தரவும் இல்லாத தரிசனத்தை செய்ய முடியும்..
4. அதற்கு மூத்த குடிமக்கள் கவுண்டரை அடைய பார்க்கிங் பகுதியில் இருந்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை வசதியையும் தேவஸ்தானம் செய்துள்ளது..
5. இந்த தரிசனத்திற்குத் தகுதிபெற,ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் வயது சான்றிதழை சமர்ப்பித்து, அதை எஸ்-1 கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தரிசனத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுடன் தட்சிண மட தெருவில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு அருகில் உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, மூத்த குடிமக்களுக்கான இருக்கை வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது மேலும் அவர்கள் படிக்கட்டுகளில் ஏற தேவையில்லை.
6. தரிசனத்தின் போது அவர்களுக்கு சாம்பார், தயிர் சாதம் மற்றும் சூடான பால் இலவசமாக வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. இலவச டிக்கெட்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.. இதனை மாற்றவே தேவஸ்தானம் ஒரு அதிரடியான முடிவை கடந்த வாரம் அறிவித்திருந்தது.... அதாவது இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் விரைவாக சாமியை பார்க்க ஏதுவாக தேவஸ்வதான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் டிக்கெட்களின் எண்ணிகையை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..



Click it and Unblock the Notifications











