Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
திருப்பதியில் பக்தர்கள் நாளை முதல் சீக்கிரமாக தரிசனம் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சராசரியாக நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் இலவச டிக்கெட்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.. இதனை மாற்றவே தேவஸ்தானம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது.. அதாவது இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் விரைவாக சாமியை பார்க்க ஏதுவாக தேவஸ்வதான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் டிக்கெட்களின் எண்ணிகையை குறைத்துள்ளது..

ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீடு 500 ஆக உள்ளது, அதே நேரத்தில் ஆஃப்லைனில் 1000 டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீட்டில், 100 திருப்பதி விமான நிலையத்திலும், 900 திருமலையில் உள்ள கோகுலம் ரெஸ்ட் ஹவுஸிலும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது..
எனவே பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன காரணமாக இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இனிமேல் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை அவசியமில்லை.. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு இந்தியாவில் பலரும் வரவேற்றுள்ளனர். அதோடு அறக்கட்டளைக்கு வரும் வருமானத்தை பார்க்காமல் ஏழை எளிய பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக தேவஸ்தானம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஜீலை 22 ஆம் தேதி முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் டிக்கெட்டின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.. மேலும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதாரம், அன்னதானம் போன்ற சேவைகளை கண்காணிப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் உதவி நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்..
அத்துடன் சில ஏஜெண்டுகள் ஒரே ஐடி மற்றும் மொபைல் எண்ணில் நூற்றுக்கணக்கான முறை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகின்றனர். அதனை தவிர்க்க , விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஆதார் அட்டையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட் விரைவில் பெரிய அளவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications











