Latest Updates
-
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள்
திருப்பதியில் பக்தர்கள் நாளை முதல் சீக்கிரமாக தரிசனம் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சராசரியாக நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் இலவச டிக்கெட்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.. இதனை மாற்றவே தேவஸ்தானம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது.. அதாவது இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் விரைவாக சாமியை பார்க்க ஏதுவாக தேவஸ்வதான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் டிக்கெட்களின் எண்ணிகையை குறைத்துள்ளது..

ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீடு 500 ஆக உள்ளது, அதே நேரத்தில் ஆஃப்லைனில் 1000 டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீட்டில், 100 திருப்பதி விமான நிலையத்திலும், 900 திருமலையில் உள்ள கோகுலம் ரெஸ்ட் ஹவுஸிலும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது..
எனவே பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன காரணமாக இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இனிமேல் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை அவசியமில்லை.. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு இந்தியாவில் பலரும் வரவேற்றுள்ளனர். அதோடு அறக்கட்டளைக்கு வரும் வருமானத்தை பார்க்காமல் ஏழை எளிய பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக தேவஸ்தானம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஜீலை 22 ஆம் தேதி முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் டிக்கெட்டின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.. மேலும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதாரம், அன்னதானம் போன்ற சேவைகளை கண்காணிப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் உதவி நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்..
அத்துடன் சில ஏஜெண்டுகள் ஒரே ஐடி மற்றும் மொபைல் எண்ணில் நூற்றுக்கணக்கான முறை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகின்றனர். அதனை தவிர்க்க , விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஆதார் அட்டையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட் விரைவில் பெரிய அளவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications