Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
திருப்பதியில் பக்தர்கள் நாளை முதல் சீக்கிரமாக தரிசனம் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் சராசரியாக நாள்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் இலவச டிக்கெட்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.. இதனை மாற்றவே தேவஸ்தானம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது.. அதாவது இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் விரைவாக சாமியை பார்க்க ஏதுவாக தேவஸ்வதான நிர்வாகம் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் டிக்கெட்களின் எண்ணிகையை குறைத்துள்ளது..

ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீடு 500 ஆக உள்ளது, அதே நேரத்தில் ஆஃப்லைனில் 1000 டிக்கெட்டுகளின் தினசரி ஒதுக்கீட்டில், 100 திருப்பதி விமான நிலையத்திலும், 900 திருமலையில் உள்ள கோகுலம் ரெஸ்ட் ஹவுஸிலும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது..
எனவே பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன காரணமாக இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் இனிமேல் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை அவசியமில்லை.. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு இந்தியாவில் பலரும் வரவேற்றுள்ளனர். அதோடு அறக்கட்டளைக்கு வரும் வருமானத்தை பார்க்காமல் ஏழை எளிய பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக தேவஸ்தானம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஜீலை 22 ஆம் தேதி முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் டிக்கெட்டின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.. மேலும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதாரம், அன்னதானம் போன்ற சேவைகளை கண்காணிப்பதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் உதவி நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை தேவஸ்தான அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்..
அத்துடன் சில ஏஜெண்டுகள் ஒரே ஐடி மற்றும் மொபைல் எண்ணில் நூற்றுக்கணக்கான முறை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகின்றனர். அதனை தவிர்க்க , விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஆதார் அட்டையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட் விரைவில் பெரிய அளவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications