Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது!
திருப்பதியில் மீண்டும் பழைய நடைமுறை அமலுக்கு வந்தது.. காரணம் என்ன தெரியுமா?
திருப்பதி திருமலை கோவில் பல அற்புதங்களுக்கு பெயர் பெற்றது. இந்த கோவில் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரசிதி பெற்ற புனித யாத்திரைகளில் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படும் வெங்கடேசப் பெருமானுக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் உலகிலேயே பணக்கார கடவுள். தங்கம், வைரம், பட்டு, பீதாம்பரம் என செல்வ செழிப்பில் செழுமையாக இருக்கும் கடவுள். கடன் தீர்க்கவும், பாவம் போக்கவும் அருள்பாலிக்கும் கடவுள் என்பதால் உலகமெங்கும் இருந்து இவரை தரிசிக்க எண்ணற்ற அளவில் வருடம் முழுவதும் பக்தர் கூட்டம், கூட்டமாக வருகிறார்கள்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் பக்தர்கள் செல்லும் இரு நடைபாதைகளிலும் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யும் பணியை மீண்டும் தொடங்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். கீழ் திருப்பதியில் இருந்து திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலுக்கும் நடந்து செல்லும் பக்தர்களின் திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்ய நாராயணகிரி தோட்டத்தில் மின்னணு பலகைகள் அமைப்பதன் அவசியத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக ஷியாமளா ராவ் பதவியேற்ற பிறகு, ஜூன் 18-ம் தேதி பல்வேறு துறைகளின் தலைவர்களுடன் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். தொடர்ந்து மூன்றாவது நாளாக பல்வேறு துறைகளிலும் ஆய்வு செய்தார். பல்வேறு அரசுத் துறைகளுக்கு வழங்கப்படும் தரிசன ஒதுக்கீட்டு டிக்கெட்டுகள் முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்புப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இந்த ஆய்வின் போது நாராயணகிரி தோட்டத்தில் மின்னணு பலகைகள் அமைப்பதன் அவசியத்தை தேவஸ்தான செயல் அதிகாரி அடிக்கோடிட்டுக் காட்டினார், தெய்வத்தின் தரிசனத்திற்கான தோராயமான காத்திருப்பு நேரம் தொடர்பான தகவல்களைக் காட்டினார். அடிக்கடி தங்கும் வசதிகளைப் பெற்று, தவறாகப் பயன்படுத்துபவர்களின் விரிவான பட்டியலைக் கொண்டு வந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதாரம், அன்னதானம் மற்றும் ஸ்ரீவாரி சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவின் உதவியால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் உதவி நிர்வாக அதிகாரி (AEO) தரவரிசையில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை திரு. ஷியாமளா ராவ் வலியுறுத்தினார். பஞ்சாயத்து மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், நிலம் ஒதுக்கீடு, கொடையாளர் குடிசைகள், ஓட்டல்கள், கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கு பொருள் அனுமதி வழங்குவது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரியிடம் விளக்கமளித்தனர்.
இதற்கிடையில், பொறியியல் அதிகாரிகள் 4 மாட வீதிகள், சன்னதி, பிரகாரம், பேடி ஆஞ்சநேய சுவாமி கோவில், வாகன மண்டபம் மற்றும் ரம்பகைச்சா விருந்தினர் மாளிகை வரையிலான பாதையை போர்க்கால அடிப்படையில் வர்ணம் பூசியுள்ளனர்.



Click it and Unblock the Notifications