Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
931 பேரை கொன்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இந்தியாவின் மிக ஆபத்தான சீரியல் கில்லர் யார் தெரியுமா?
தொடர் கொலையாளிகளின் பல விசித்திர மற்றும் பயமுறுத்தும் கதைகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித வரலாற்றில் பல தொடர் கொலைகாரர்கள் உள்ளனர், அவர்கள் இரக்கமின்றி மக்களை திட்டமிட்டு கொன்றனர்.
சீரியல் கில்லர்கள் கொலை செய்வதற்கு பல ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தியதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரே கைக்குட்டையால் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்ற ஒரு இந்திய தொடர் கொலைகாரனை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த கொலையாளியின் பெயர் 'தக்' பெஹ்ராம்.

தக் என்றால் என்ன?
பலருக்கு இது தெரியாது, ஆனால் 'தக்' என்ற வார்த்தை உண்மையில் வட இந்தியாவின் அவுத்/அவாத் பகுதியில் உள்ள கொள்ளையர்களின் வழிபாட்டு முறையான 'தாக்' என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து வந்தது. இது அதன் உண்மையான சமஸ்கிருத வார்த்தையான "சாகா" என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் மறைவானது அல்லது கண்ணுக்குத் தெரியாதது என்பதாகும்.
யார் இந்த 'தக்' பெஹ்ராம்?
18 ஆம் நூற்றாண்டில், இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் 900 பேரைக் கொன்றதற்காக தக் பெஹ்ராம் மற்றும் அவரது கும்பலால் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். பெஹ்ராம் சிறுவயதில் ஒரு கூச்ச சுபாவமுள்ள குழந்தையாக இருந்தார், அவர் தன்னை விட 25 வயது மூத்த ஒரு தக்ஸை சந்திக்கும் வரை மற்றவர்களுடன் கலக்க விரும்பவில்லை. 10 வயதிற்குள், பெஹ்ராம் மக்களைக் கொல்லவும் பயமுறுத்தவும் தொடங்கினார்.
மேலும் அடுத்த 25 ஆண்டுகளில், அவர் கொள்ளை மற்றும் கொலைகளின் உலகில் தீவிரமாக இறங்கினார். பெஹ்ராம் எப்பொழுதும் கொலை செய்வதற்கு ஒரு மஞ்சள் கைக்குட்டையையும் ஒரு நாணயத்தையும் எடுத்துச் சென்றதாக வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
கொலைகளுக்கான நோக்கம்
பெஹ்ராம் செய்த இந்த நூற்றுக்கணக்கான கொலைகளுக்கு அடிப்படையாக இருந்தது அவரின் மூடநம்பிக்கை. மரணத்தின் தெய்வமான காளியை வழிபடும் தக்ஸ் அப்பாவிகளைக் கொல்வதை தங்கள் மதக் கடமையாகக் கருதினர். தங்கள் கொலைகளை காளியைத் திருப்திப்படுத்துவதாக அவர்கள் நம்பினர். உண்மையில் அவர்கள் செய்த எந்த கொலையும் பணத்துக்காகவோ அல்லது சுகபோகத்திற்காகவோ அல்ல, மாறாக மதத்தின் பெயரால் செய்யப்பட்டவை.
மஞ்சள் கைக்குட்டை
உயிருக்கு பயந்து டெல்லி, ஜபல்பூர் மற்றும் குவாலியரில் இருந்து வணிகர்கள் பெஹ்ராம் மற்றும் அவரது குழுவினர் மறைந்திருக்கும் வழிகளைத் தவிர்ப்பார்கள். அவரது கொலை செய்யும் செயல்பாடு முறை எளிமையானது, ஆனால் மிகவும் ஆபத்தானது.
அவர் எப்போதும் ஒரு மஞ்சள் நிறக் கைக்குட்டையைப் பயன்படுத்துவார், அதில் ஒரு பதக்கம் தைக்கப்பட்டிருக்கும். கொள்ளையடிக்கும் முன், அந்தத் துணியால் பாதிக்கப்பட்டவர்களை கழுத்தை நெறிப்பார். கைக்குட்டையில் இருக்கும் பதக்கம் பாதிக்கப்பட்டவரின் கழுத்தின் நடுப்பகுதியை அழுத்தி, சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி மரணமடைய வைக்கும்.
மர்மமாக காணாமல் போனவர்கள்
1800 களின் முற்பகுதியில், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள், வீரர்கள், ஒரு முழு வேன் கூட மர்மமான முறையில் காணாமல் போயினர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொது மக்களும், போலீசாரும் திணறினர்.
1809 ஆம் ஆண்டில், கேப்டன் வில்லியம் ஸ்லீமன் மர்மத்தைக் கண்டறியும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். கேப்டன் ஸ்லீமனின் விசாரணையில் பெஹ்ராம் மற்றும் அவரது 200 பேர் கொண்ட குழு இந்தத் தாக்குதல்களை நடத்தியது தெரியவந்தது. பெஹ்ராம் மற்றும் அவரது குழுவினரைப் பிடிக்க அவர்கள் டெல்லி-ஜபல்பூர் வழித்தடத்தில் பல பொறிகளை வைத்தனர்.
திடுக்கிடும் மர்மங்கள்
ஸ்லீமன் பெஹ்ராமைக் கைதுசெய்த பிறகே, தக்ஸ் வியாபாரிகள் போல் மாறுவேடமிட்டுப் பயணம் செய்வார்கள் என்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சுற்றி 'ராமோசி' எனப்படும் ஒரு குறிப்பிட்ட சைகை மொழியில் உரையாடுவார்கள்.
இது குள்ளநரியின் அழுகை போல இருக்கும், இந்த அழுகையைக் கேட்டவுடன், பெஹ்ராம் மற்றும் அவரது கும்பல் மஞ்சள் கைக்குட்டையுடன் வருவார்கள். இரக்கமின்றி அவர்களைக் கொன்ற பிறகு, அவர்களின் உடல்களை அருகிலுள்ள கிணற்றில் போட்டுவிட்டு சென்று விடுவார்கள்.
எப்படி கைதுசெய்யப்பட்டார்?
அவர்கள் ஒருபோதும் பெண்கள், முஸ்லிம் சூஃபிகள் மற்றும் தொழுநோயாளிகளைத் தாக்கவில்லை. பெஹ்ராமின் புகழ் இங்கிலாந்திலும் பரவியதால், ஐந்து புலனாய்வுக் குழுக்கள் இந்தியாவிற்கு வந்தன, ஆனால் பெஹ்ராமைப் பற்றி அதிகம் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சையத் அமீர் அலி 1832 இல் தனது குடும்பத்திற்காக ஆங்கிலேயரிடம் சரணடைந்தார், இறுதியாக, 1838 இல், பெஹ்ராம் கைது செய்யப்பட்டார்.
பெஹ்ராமின் மரணம்
75 வயதான பெஹ்ராம் இறுதியாக 1838-இல் பிடிபட்டார். அந்த நேரத்தில் அவர் சுமார் 931 பேரைக் கொன்றதாக அறியப்படுகிறது, இருப்பினும் அவர் சுமார் 125 பேரைக் கொன்றதாகவும் மேலும் 150 பேரை கொலை செய்ய உடந்தையாக இருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
1840-ல் பெஹ்ராம் மற்றும் அவரது குழுவில் இருந்தவர்கள் ஜபல்பூரில் இருக்கும் ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டனர். குறைந்தது 65 கொலைகளில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படும் அவரது பதக்கம் இன்றும் ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 931 கொலைகளில் ஈடுபட்டதால் அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications
