நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மனைவி யார்? நேதாஜியின் அழகிய காதல் கதை உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...!

The Untold Love Story of Subhas Chandra Bose: இந்திய சுதந்திர போராட்டம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது மக்களால் 'நேதாஜி' என்று அன்போடு அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ்தான். ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி அவர் நடத்திய போராட்டங்கள் இந்தியாவில் பல மாற்றங்களுக்கும், புரட்சிகளுக்கும் வழிவகுத்தது.

சுபாஷ் சந்திர போஸின் மரணம் இன்றுவரை தீர்க்கப்படாத மர்மாகவே இருந்து வருகிறது. ஹிட்லருடனான நெருக்கம் மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உதவி என அவரின் வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகள் வெளிப்படையானதாக இருந்தாலும் அவரின் வாழ்க்கையின் பல பக்கங்கள் இன்றும் ரகசியமாகவே உள்ளது. அதில் முக்கியமானது அவரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை. அதனைப்பற்றி இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.

The Untold Love Story of Subhas Chandra Bose in Tamil

சுபாஷ் சந்திர போஸின் பிறப்பு

சுபாஷ் சந்திரபோஸ் 1897 ஜனவரி 23 அன்று கல்கத்தாவின் ஒரு பகுதியாக இருந்த கட்டாக்கில் பிறந்தார். இவர் பிரபாவதி தத் மற்றும் ஜானகிநாத் போஸின் பதினான்கு குழந்தைகளில் ஒன்பதாவது குழந்தையாக பிறந்தார். அவர் சிறந்த மாணவராக இருந்தார், சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்கள் அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றைச் சாதிக்கத் தூண்டியது.

சுபாஷ் சந்திர போஸின் கல்வி

சுபாஷ் சந்திர போஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் தனது உயர் படிப்பைத் தொடர்ந்தார், ஆனால் பிரிட்டிஷ் ஆசிரியர்களின் போதனைகள் அவருக்கு பிடிக்கவில்லை. மாணவர்களின் உதவியுடன், சுபாஷ் சந்திர போஸ் சில போராட்டங்களை நடத்தி மாணவர்களிடம் ஆசிரியர்கள் மன்னிப்பு கேட்கும்படி செய்தார். பின்னர், அவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தனது இராணுவப் பயிற்சியை முடித்தார். சுபாஷ் சந்திர போஸ் 22 வயதில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

மகாத்மா காந்தியுடனான சந்திப்பு

சுபாஷ் சந்திர போஸின் தந்தை தனது மகன் இந்திய சிவில் சர்வீசஸில் நல்ல பதவியில் சேர வேண்டும் என்று விரும்பினார். 1939 இல், அவர் மகாத்மா காந்தியைச் சந்தித்தார், ஆனால் அவர்களின் இலட்சியங்கள் அல்லது முடிவை அடைவதற்கான வழிமுறைகள் வேறுபட்டவையாக இருந்தன. சுபாஷ் சந்திர போஸ் கல்கத்தாவில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸை சந்தித்தார். அதன் பிறகு சுபாஷ் சந்திர போஸ் ஆறு மாத சிறை தண்டனையை அனுபவித்தார்.

எமிலியுடனான சந்திப்பு

1933ல் ஒரு காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்த பிறகு ஆஸ்திரியாவில் தங்கியிருந்தார் நேதாஜி. அங்குதான் அவர் தனது காதல் துணையான எமிலியைக் கண்டார் நேதாஜி. எமிலியின் ஆங்கிலப்புலமை மற்றும் டைபிங் திறன் சிறப்பாக இருந்தது. எனவே, தனது தி இந்தியன் ஸ்ட்ரகில் எனும் புத்தகத்தை எழுத எமிலியை வேலைக்கு அமர்த்தினார் நேதாஜி.

நேதாஜியின் திருமணம்

நட்பாக தொடங்கிய எமிலி மற்றும் நேதாஜியின் உறவு பின்னர் காதலாக மாறியது. 1937-ல் எமிலி மற்றும் நேதாஜி திருமணம் செய்துக் கொண்டனர். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, அவருக்கு அனிதா போஸ் என்று பெயரிடப்பட்டது.

ஆனால் நேதாஜிக்கு திருமணம் நடந்தது அவருடைய குடும்பம் உட்பட யாருக்குமே தெரியாமல் பார்த்துக் கொண்டார். ஏனெனில் அப்போதைய சூழலில் அவருக்கு பல முனைகளில் ஆபத்து சூழ்ந்திருந்தது. அதனால் தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தார்.

நேதாஜியின் இந்திய வருகை

தன்னுடைய சிவில் சர்வீஸ் படிப்பு முடிந்தவுடன் அவர் இந்தியா திரும்பினார். 1941-1943 வரை அவர்கள் ஜெர்மனியில் ஒன்றாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலில் சென்று சுமத்ரா தீவில் இறங்கினார்.

எமிலி தனது மகளை ஸ்டெனோகிராஃபராகப் பணிபுரிந்து வளர்த்தார், மேலும் அவரது மகள் அனிதா போஸ் தனது தாயைப் பற்றிக் கூறுகையில், " அவர் எப்போதும் கவனமாக இருப்பார் என்றும் தனது தந்தையுடனான உறவு பற்றி எப்போதும் எதுவும் பேசமாட்டார் என்றும்" அவர் கூறினார்.

நேதாஜியின் காதல் கடிதங்கள்

1993 ஆம் ஆண்டில், எமிலியிடம் 165 கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த கடிதங்கள் சாதாரண கடிதங்கள் அல்ல, நேதாஜி தனது காதல் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள். அந்த கடிதங்கள் அவர் தனது மனைவி எமிலியையும், தனது தாய்நாட்டையும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தின.

Story first published: Monday, October 16, 2023, 14:57 [IST]
Desktop Bottom Promotion