12 நாட்கள் 100 கிலோமீட்டர் வரை நீடித்த உலகின் கொடூரமான ட்ராபிக் ஜாம்... இப்படி நடக்க காரணம் என்ன தெரியுமா?

மனிதர்கள் அடிமனதில் இருந்து வெறுக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று ட்ராபிக் ஜாம். சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். பெங்களூரின் ட்ராபிக் பற்றி சொல்லவே வேண்டாம், சாலையில் நிற்பவர்களுக்கு மூச்சுத்திணறலையே ஏற்படுத்திவிடும்.

மும்பை, டெல்லி போன்ற நகரங்களின் போக்குவரத்து நெரிசலும் இதற்கு சளைத்தது அல்ல. வேலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை வதைக்கும் ட்ராபிக் ஜாம் மிகவும் கொடூரமானது என்று நீங்கள் நினைத்தால், உங்களின் கற்பனைக்கும் எட்டாத வகையில் வரலாற்றில் நடந்த இரு மிகப்பெரிய ட்ராபிக் ஜாம் பற்றி நீங்கள் அறியவில்லை என்று அர்த்தம்.

The Longest Traffic Jam in History Which Lasted 12 Days in Tamil

ஏனெனில் வரலாற்றில் 2010 இல் சீனாவில் 12 நாட்கள் நீடித்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் ஏன் ஏற்பட்டது. அதற்கு பின் என்ன நடந்தது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வரலாற்றில் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்

ஆகஸ்ட் 14, 2010 அன்று, சீனாவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்தது. பெய்ஜிங் வரலாற்றில் மிக நீளமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இந்த ட்ராபிக் ஜாம் 100 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீட்டிக்கப்பட்டு 12 நாட்கள் நீடித்தது. சீனா அப்போது "போக்குவரத்து நெரிசல்களின் ராணி" என்று அழைக்கப்பட்டது.

ட்ராபிக் ஜாம் ஆயிரக்கணக்கான கார்களின் இயக்கத்தை மெதுவாக்கத் தொடங்கியது, இது 100 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டு 12 நாட்களுக்கு தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் 1 கிமீ தூரம் வரைதான் ஓட்டுநர்கள் தங்கள் கார்களை நகர்த்த முடிந்தது, மேலும் சில ஓட்டுநர்கள் தொடர்ந்து 5 மற்றும் 6 நாட்களுக்கும் மேலாக இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

சீனாவின் இந்த மிக நீண்ட போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்ன?

தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகில் பெய்ஜிங் மற்றும் திபெத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில் சில சாலைப் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், சாலையில் கனரக லாரிகள் அதிகளவில் வந்ததால், நெடுஞ்சாலையின் 50% பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டது. மேலும் இங்கு நடந்த சில விபத்துக்கள் பிரச்சனையை அதிகப்படுத்தியது.

மங்கோலியாவில் இருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு நிலக்கரியை ஏற்றிச் செல்லும் டிரக்குகளின் எண்ணிக்கையில் 2009 ஆம் ஆண்டில் 602 மில்லியன் டன் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது, இது 2010 இல் 730 மில்லியன் டன்னாக உயர்ந்தது.

போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க சீன அதிகாரிகள் என்ன செய்தார்கள்?

சீன அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றனர் மற்றும் நிலக்கரி நிறுவனங்களை போக்குவரத்து நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர் மற்றும் தற்போதைய நிலைமை நீங்கும் வரை இரவில் தலைநகருக்குள் அதிக லாரிகளை கொண்டு வர முயன்றனர். ஆகஸ்ட் 2010 இறுதிக்குள் போக்குவரத்து நெரிசலை முற்றிலுமாக அகற்றியதால், அதிகாரிகள் வெற்றி பெற்றனர்.

இந்த போக்குவரத்தை நெரிசலால் சில நன்மைகளும் நடந்தது

கூட்ட நெரிசல் உள்ள பகுதிக்கு அருகில் உள்ள சில உள்ளூர்வாசிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிக்கித் தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை இரட்டிப்பு விலையில் விற்கத் தொடங்கினர். சில ஓட்டுநர்கள் இந்த விலை அதிகரிக்கப்பட பொருட்களை வாங்குவதை விட பசியுடனேயே இருப்பது சிறந்தது என்று நினைத்தனர்.

Desktop Bottom Promotion