Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் ஸ்பெஷலான அந்த பொருள் என்ன? அது எப்படி செய்யப்படுகிறது தெரியுமா?
கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் என்பது பக்தர்களால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். கோவில் பிரசாதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது திருப்பதி லட்டுதான். அதற்குப்பின் மிகவும் பிரபலமான பிரசாதம் என்றால் அது பழனி பஞ்சாமிர்தம்தான்.
தமிழகத்தின் பழனி மலை நகரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோவிலின் புனித பிரசாதம் 'பழனி பஞ்சாமிர்தம்'. இது பழ கலவையின் பழமையான வடிவங்களில் ஒன்றாக மிகவும் புகழ்பெற்றது, இந்த இனிமையான பிரசாதம் புவியியல் குறியீடுகளை (ஜிஐ) வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்போது GI பதிவு செய்யப்பட்டது?
பழனி பஞ்சாமிர்தம் 2016 ஆம் ஆண்டு GI அங்கீகாரத்தைப் பெற்றது. GI பயன்பாட்டின் படி, பஞ்சாமிர்தம் உணவுப் பொருட்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன் மற்றும் ஏலக்காய் ஆகியவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
கூடுதல் சுவைக்காக டைமண்ட் சர்க்கரை மற்றும் பேரிட்சை பழம் சேர்க்கப்படுகின்றன. மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஃப்டிஆர்ஐ) வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் இந்த புனித பிரசாதத்திற்கு GI அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
பழங்கால பிரசாதம்
சுவாரஸ்யமாக, பண்டைய தமிழ் நூல்களில் பஞ்சாமிர்தம் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இந்த பிரசாதம் கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. தமிழில் 'பஞ்ச' என்றால் ஐந்து என்றும் 'அமிர்தம்' என்பது தெய்வீக அமிர்தத்தைக் குறிக்கிறது.
எப்படி செய்யப்படுகிறது?
பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் முழு செயல்முறையும் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப தானியங்கு முறையில் தயாரிக்கப்படும் அதே வேளையில், சுகாதார அம்சங்கள் பராமரிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது.
பழனி பஞ்சாமிர்தம் அதிக அளவில் தயாரிக்கப்பட்டாலும், எந்தவித செயற்கைப் பொருட்களும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது.
பழனி பஞ்சாமிர்தம் முதலில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி தண்டாயுதபாணியின் சிலைக்கு அபிஷேகம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது. இது பின்னர் பெரிய பகுதியுடன் கலக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
எப்படி தயாரிக்கப்படுகிறது?
பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் போது ஒரு சொட்டு தண்ணீர் கூட சேர்க்கப்படுவதில்லை. இது பழனி பஞ்சாமிர்தத்திற்கு திட நிலையை அளிக்கிறது மற்றும் அதனை ருசிப்பவர் அதில் பயன்படுத்தியுள்ள மூலப்பொருட்களின் உண்மையான சுவையைப் பெறுவதை சாத்தியமாக்குகிறது.
வரலாற்றுக் குறிப்புகளின்படி, பஞ்சாமிர்தத்தின் அபிஷேகம் செய்யப்படும் தண்டாயுதபாணியின் சிலை, உயர் மருத்துவ மதிப்புள்ள மூலிகைகளின் 'நவபாஷாண' அமைப்பு ஆகும். பழனி பஞ்சாமிர்தத்தை மருந்து சிலைக்கு அபிஷேகம் செய்யும்போது, அது குணப்படுத்தும் பொருளாக மாறும். இதனை உட்கொண்டால் பக்தர்களின் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
பழனி பஞ்சாமிர்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
பழனி பஞ்சாமிர்தம் என்பது பழமையான பழ கலவையாகும், இது பல மாதங்கள் கூட கெட்டுப்போகாமல் இருக்கும். இதன் அடிப்படை மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் பழத்தின் தரத்தைப் போலவே அதைத் தயாரிக்கும் கலையிலும் ரகசியம் உள்ளது.
சிறிய அளவிலான விருப்பாச்சி வாழைப்பழங்களே இதற்குக் காரணம், அவற்றில் நீர்ச்சத்து மிகக் குறைவு. விருப்பாச்சி என்பது ஒரு கிராமத்தின் பெயர் (பழனி மலையில்) இந்த குறிப்பிட்ட வகை வாழைப்பழம் வளர்க்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.
நன்கு பிசையப்பட்ட வாழைப்பழங்களைத் தவிர, பஞ்சாமிர்தம் என்பது காங்கேயம் பகுதியில் உள்ள கந்தசரி சர்க்கரை, பேரீச்சம்பழம், உலர் திராட்சை, கல்கண்டு, ஏலக்காய் மற்றும் நெய் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலக்கப்படுகிறது.
தேவையானபொருட்கள்:
- விருப்பாச்சி வாழைப்பழம்
- கந்தசரி சர்க்கரை
- பேரிச்சம்பழம்
- கல்கண்டு
- திராட்சை
- நெய்
- ஏலக்காய்
வாழைப்பழம் முழுவதுமாக நசுக்கப்பட்ட பின்னர், அதனுடன் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதன்பின் கொட்டையில்லாத பேரீச்சம்பழம், கல்கண்டு மற்றும் திராட்சை சேர்க்கப்படுகிறது. ஏலக்காய் மற்றும் நெய் ஆகியவை கடைசியாக சேர்க்க வேண்டிய பொருட்களாகும்.



Click it and Unblock the Notifications












