Latest Updates
-
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது..
YouTube பார்த்து வெடிகுண்டு செய்ய கற்றுக்கொண்டு மாணவர்கள் செய்த காரியம்..அடுத்து நடந்த விபரீதம் என்ன தெரியுமா?
தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்வளவு நன்மைகள் விளைகிறதோ அதேபோல அதனால் பல ஆபத்துகளும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹரியானா மாநிலம் பிவானியில், மாணவர்கள் குழு ஒன்று விவகாரமான மற்றும் மிகவும் ஆபத்தான குறும்புத்தனத்தை செய்துள்ளது. இது அவர்களின் ஆசிரியருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
ஊடக அறிக்கைகளின் படி, மாணவர்கள் வீட்டில் செய்த வெடிகுண்டை அவரது நாற்காலிக்கு அடியில் வைத்தனர், அது குறிப்பிட்ட தூரத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டபோது வெடித்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த ஆசிரியர் இதனால் காயமடையவில்லை, ஆனால் இந்த சம்பவம் 13 மாணவர்களின் இடைநீக்கத்திற்கு வழிவகுத்தது, அதே நேரத்தில் குழந்தைகள் ஆன்லைனில் எந்த வகையான உள்ளடக்கத்தை பார்க்கிறார்கள் என்பது பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

விபரீதமான குறும்புத்தனம்
பபோரா கிராமத்தில் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 13 மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் அவர்களைத் திட்டியதையடுத்து அந்த பெண் அறிவியல் ஆசிரியரைப் பழிவாங்கத் திட்டமிட்டனர். மாணவர்கள் ஆசிரியரின் நாற்காலியின் கீழ் வெடிகுண்டை வைத்து பழிவாங்க முடிவு செய்தனர். ஒரு மாணவர் வெடிகுண்டை அங்கே வைத்தார், மற்றொருவர் தூரத்தில் இருந்து அதை வெடிக்க வைத்தார். வெடிகுண்டு வெடித்ததும், அது பலத்த சத்தம் எழுப்பியது மற்றும் தரையில் ஒரு துளை ஏற்படுத்தியது, ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த ஆசிரியருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
YouTube -யை பார்த்து வெடிகுண்டு செய்ய கற்றுக்கொண்டனர்
ஊடக அறிக்கையின் படி, யூடியூப் வீடியோ மூலம் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை மாணவர்கள் கற்றுக்கொண்டதாகக் கூறினர். ஆன்லைனில் ஆபத்தான வீடியோக்கள் கிடைப்பது எவ்வளவு எளிது என்பதை இது காட்டுகிறது. இன்டர்நெட் பயனுள்ளதாக இருந்தாலும், அது குறிப்பிட்ட அளவு தீங்கு விளைவிப்பதாக மாறலாம் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
பள்ளியின் நடவடிக்கை
வெடிவிபத்தை அடுத்து பள்ளி விரைந்து நடவடிக்கை எடுத்து என்ன நடந்தது என்று ஆய்வு செய்தனர். இதில் 13 மாணவர்கள் ஈடுபட்டதை கண்டறிந்து அவர்களை ஒரு வார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்தனர். கல்வித்துறை மாணவர்களை நிரந்தரமாக வெளியேற்ற பரிசீலித்தது, ஆனால் பெற்றோர்கள் மன்னிப்பு கேட்டு தங்கள் குழந்தைகள் இனி இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பின்விளைவுகள்
இந்த மோசமான செயலுக்குப் பிறகு, இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க உள்ளூர் கூட்டம் நடைபெற்றது. உள்ளூர் மக்கள் இதை கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தனர். குறிப்பாக வகுப்பில் பெரும்பாலோர் இந்த குறும்புத்தனத்தை அறிந்திருந்தும் யாரும் இதைப்பற்றி வெளியே சொல்லவில்லை. பெற்றோர்களும் கிராமப் பெரியவர்களும் மரியாதை மற்றும் பொறுப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
தெரிந்து கொள்ள வேண்டியது
இணையம் இளைஞர்களை எப்படி தவறாக வழிநடத்துகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும். ஆன்லைனில் பல பயனுள்ள வீடியோக்கள் இருந்தாலும், வெடிகுண்டுகளை எவ்வாறு தயாரிப்பது போன்ற வீடியோக்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் வீடியோக்களை பார்ப்பதாலும், அதனை நிஜ வாழ்க்கையில் பின்பற்றுவதாலும் ஏற்படும் அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.



Click it and Unblock the Notifications
