Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தினமும் இருமுறை காணாமல் போகும் சிவன் கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாம் ஆத்திகர்களாக இருக்கலாம், அல்லது நாத்திகர்களாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் பக்தி மட்டும் நம்மைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதில்லை. ஒரு கோவிலின் சில சிறப்பு நிகழ்வுகள் அல்லது அம்சங்கள்
அது நம்மை ஈர்த்து அங்கு அழைத்து செல்லும். அப்படிப்பட்ட அரிய அம்சம் கொண்ட கோயிலைப் பற்றி இன்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். இந்த கோவில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மறைந்துவிடும். மீண்டும் தோன்றும். அது எப்படி இந்த அதிசயம் நடக்கிறது? எங்கு நடக்கிறது?
குஜராத்தின் வதோதராவில் இருந்து 40 மைல் தொலைவில் ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இந்த கோவில் தினமும் காணாமல் போகும். இது ஒரு கடல் விரிகுடாவில் அமைந்துள்ளது. குஜராத்தில் உள்ள காவி கம்போய் என்ற சிறிய நகரத்தில் அரபிக்கடலின் நடுவில் உள்ளது. அது சிவனுடைய கோயில். இந்த கோயிலில் உள்ள லிங்கம் தினமும் கடலில் மூழ்கி பின்னர் மீண்டும் தோன்றும்.

அலை குறையும் போது லிங்கம் தோன்றும். இந்த அற்புதமான காட்சியைக் காண நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். ஆம், ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோயில் இந்தியாவில் காணாமல் போன சிவன் கோயிலாகப் புகழ் பெற்றது.
புராணக்கதை
இந்த அதீத இயற்கையான அதிசய கோயிலை பார்க்க, இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். இந்த சிவன் கோவில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்கந்த புராணத்தின் படி, இந்த கோவில் தாரகாசுரனை கொன்ற பிறகு கார்த்திகேயனால் நிறுவப்பட்டது. ஒருமுறை கார்த்திகேயன் (சிவனின் மகன்) தாரகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றான். கார்த்திகேயர் சிவபக்தன் என்பதால் மிகவும் குற்ற உணர்வுடன் உணர்கிறார்.
இருப்பினும், சாதாரண மக்களை தொந்தரவு செய்த ஒரு அரக்கனைக் கொன்றது தவறில்லை என்று விஷ்ணு அவருக்கு ஆறுதல் கூறினார். இருப்பினும், ஒரு சிறந்த சிவ பக்தரைக் கொன்ற பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ய கார்த்திகேயா விரும்புகிறார். எனவே, விஷ்ணு பகவான் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து மன்னிப்புக்காக பிரார்த்தனை செய்ய அறிவுறுத்துகிறார். அதன்படி கார்த்திகேயர் இங்கு சிவலிங்கத்தை நிறுவினார் என்று புராணம் கதை சொல்லுகிறது.
கவி கம்போய்க்கு எப்படி செல்வது?
கவி கம்போய் குஜராத்தின் வதோதராவில் இருந்து 75 கி.மீ. கவி கம்போய் வதோதரா, பருச் மற்றும் பாவ்நகர் போன்ற இடங்களிலிருந்து சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வதோதராவில் இருந்து ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் வரை பயணிக்க தனியார் வண்டிகள் அல்லது வாகனங்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
ரயில் மூலம்: வதோதரா ரயில் நிலையம் கவி கம்போய்க்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும்.
கோவில் இணையதளம் www.stambeshwarmahadev.com ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் கோவில் திறக்கும் நேரத்தைக் குறிப்பிடுகிறது. இருப்பினும், கோயில் கடலில் மூழ்கி பின்னர் அதை மீட்டெடுக்க ஒரு நாள் முழுவதும் ஆகிவிடும். அதனால் அங்கேயே சற்று தாமதித்து மீண்டும் லிங்கம் வருவதை பார்த்தால் நல்லது. குஜராத்திற்குச் செல்லும் போது இந்த சுவாரஸ்யமான இடத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.
ஸ்தம்பஹேஸ்வரர் கோயில்
இந்த சிவன் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயிலில் சிவலிங்க தரிசனம் ஒரு நாளைக்கு 1 முறை மட்டுமே நடைபெறும். மீதமுள்ள நேரங்களில் இந்த கோவில் கடலில் மூழ்கியிருக்கும். கடற்கரையில் தினமும் இரண்டு முறை அலைகள் எழும்புகின்றன. இதனால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இப்படி தினமும் இரண்டு முறை ஜலபிஷேகம் முடிந்து கடல் நீர் திரும்பி வருகிறது. இது தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கும். அப்போது சிவலிங்கம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிவிடும். அந்த நேரத்தில் யாரும் அங்கு செல்ல அனுமதி இல்லை. இங்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கோயிலின் இணைய பக்கத்தில் பார்த்தால் முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











