Latest Updates
-
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
தினமும் இருமுறை காணாமல் போகும் சிவன் கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாம் ஆத்திகர்களாக இருக்கலாம், அல்லது நாத்திகர்களாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் பக்தி மட்டும் நம்மைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதில்லை. ஒரு கோவிலின் சில சிறப்பு நிகழ்வுகள் அல்லது அம்சங்கள்
அது நம்மை ஈர்த்து அங்கு அழைத்து செல்லும். அப்படிப்பட்ட அரிய அம்சம் கொண்ட கோயிலைப் பற்றி இன்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். இந்த கோவில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மறைந்துவிடும். மீண்டும் தோன்றும். அது எப்படி இந்த அதிசயம் நடக்கிறது? எங்கு நடக்கிறது?
குஜராத்தின் வதோதராவில் இருந்து 40 மைல் தொலைவில் ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இந்த கோவில் தினமும் காணாமல் போகும். இது ஒரு கடல் விரிகுடாவில் அமைந்துள்ளது. குஜராத்தில் உள்ள காவி கம்போய் என்ற சிறிய நகரத்தில் அரபிக்கடலின் நடுவில் உள்ளது. அது சிவனுடைய கோயில். இந்த கோயிலில் உள்ள லிங்கம் தினமும் கடலில் மூழ்கி பின்னர் மீண்டும் தோன்றும்.

அலை குறையும் போது லிங்கம் தோன்றும். இந்த அற்புதமான காட்சியைக் காண நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். ஆம், ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் கோயில் இந்தியாவில் காணாமல் போன சிவன் கோயிலாகப் புகழ் பெற்றது.
புராணக்கதை
இந்த அதீத இயற்கையான அதிசய கோயிலை பார்க்க, இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். இந்த சிவன் கோவில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்கந்த புராணத்தின் படி, இந்த கோவில் தாரகாசுரனை கொன்ற பிறகு கார்த்திகேயனால் நிறுவப்பட்டது. ஒருமுறை கார்த்திகேயன் (சிவனின் மகன்) தாரகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றான். கார்த்திகேயர் சிவபக்தன் என்பதால் மிகவும் குற்ற உணர்வுடன் உணர்கிறார்.
இருப்பினும், சாதாரண மக்களை தொந்தரவு செய்த ஒரு அரக்கனைக் கொன்றது தவறில்லை என்று விஷ்ணு அவருக்கு ஆறுதல் கூறினார். இருப்பினும், ஒரு சிறந்த சிவ பக்தரைக் கொன்ற பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்ய கார்த்திகேயா விரும்புகிறார். எனவே, விஷ்ணு பகவான் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து மன்னிப்புக்காக பிரார்த்தனை செய்ய அறிவுறுத்துகிறார். அதன்படி கார்த்திகேயர் இங்கு சிவலிங்கத்தை நிறுவினார் என்று புராணம் கதை சொல்லுகிறது.
கவி கம்போய்க்கு எப்படி செல்வது?
கவி கம்போய் குஜராத்தின் வதோதராவில் இருந்து 75 கி.மீ. கவி கம்போய் வதோதரா, பருச் மற்றும் பாவ்நகர் போன்ற இடங்களிலிருந்து சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வதோதராவில் இருந்து ஸ்தம்பேஷ்வர் மகாதேவ் வரை பயணிக்க தனியார் வண்டிகள் அல்லது வாகனங்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
ரயில் மூலம்: வதோதரா ரயில் நிலையம் கவி கம்போய்க்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும்.
கோவில் இணையதளம் www.stambeshwarmahadev.com ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் கோவில் திறக்கும் நேரத்தைக் குறிப்பிடுகிறது. இருப்பினும், கோயில் கடலில் மூழ்கி பின்னர் அதை மீட்டெடுக்க ஒரு நாள் முழுவதும் ஆகிவிடும். அதனால் அங்கேயே சற்று தாமதித்து மீண்டும் லிங்கம் வருவதை பார்த்தால் நல்லது. குஜராத்திற்குச் செல்லும் போது இந்த சுவாரஸ்யமான இடத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.
ஸ்தம்பஹேஸ்வரர் கோயில்
இந்த சிவன் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயிலில் சிவலிங்க தரிசனம் ஒரு நாளைக்கு 1 முறை மட்டுமே நடைபெறும். மீதமுள்ள நேரங்களில் இந்த கோவில் கடலில் மூழ்கியிருக்கும். கடற்கரையில் தினமும் இரண்டு முறை அலைகள் எழும்புகின்றன. இதனால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இப்படி தினமும் இரண்டு முறை ஜலபிஷேகம் முடிந்து கடல் நீர் திரும்பி வருகிறது. இது தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கும். அப்போது சிவலிங்கம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிவிடும். அந்த நேரத்தில் யாரும் அங்கு செல்ல அனுமதி இல்லை. இங்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கோயிலின் இணைய பக்கத்தில் பார்த்தால் முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications