உலகிலேயே மிகவும் ஆபத்தான இடம் இதுதான்... இங்கு யார் போனாலும் திரும்ப உயிரோட வரமுடியாது...!

நாம் வாழும் பூமியானது மற்ற கிரகங்களை விட மிகவும் வித்தியாசமானது மற்றும் தனித்துவமானது. ஏனெனில் உயிரினங்கள் வாழ இங்குதான் பொருத்தமான மற்றும் வசதியான சூழல் நிலவுகிறது. பூமியைப் பற்றி தெரிந்து கொள்ள உலகம் தோன்றிய முதலே தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. பூமியில் சில இடங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதற்கு காரணமே தெரியாது.

அப்படி உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் வினோதமான ஒரு இடம்தான் இல்ஹா டா குயிமாடா கிராண்டே, இது பாம்புத் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. பிரேசிலின் சாவோ பாலோவுக்கு அருகில் அமைந்துள்ள இது உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த தீவு ஆயிரக்கணக்கான விஷ பாம்புகளுக்குத் தாயகமாக இருக்கிறது.

Snake Island The World s Most Dangerous Place Which Is Home to Venomous Snakes

இங்கு வாழ்ந்து வரும் பாம்பு இனங்கள் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால், மக்களின் பாதுகாப்பு மற்றும் பாம்புகளின் பாதுகாப்பிற்காக இங்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகளைக் கண்டறிவதற்காக, விஞ்ஞானிகள் குழு இந்த பாம்புகளையும் அவற்றின் விஷத்தையும் ஆய்வு செய்கிறது. உலகின் ஆபத்தான இந்த இடத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாம்புகள் தீவு

இந்த பாம்பு தீவு அட்லாண்டிக் பெருங்கடலில், சாவ் பாலோ கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 2,000-4,000 கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர் பாம்புகள் வசிக்கும் இடமாகும். இந்த பாம்புகள் உலகின் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகும். அதனால்தான் இந்த இடம் மிகவும் ஆபத்தானது, எனவே பிரேசில் அரசாங்கம் இங்கு அனைத்து விதமான அணுகலையும் தடை செய்துள்ளது. கடற்படை கூட வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது, அதுவும் ஒரு மருத்துவர் மற்றும் விஷ எதிர்ப்பு மருந்தோடு செல்ல வேண்டும்.

Snake Island The World s Most Dangerous Place Which Is Home to Venomous Snakes

பாம்புகள் ஏன் இந்த இடத்தை ஆள்கின்றன?

11,000 ஆண்டுகளுக்கு முன்பு, பிரேசிலின் மலைப்பகுதி கடல் மட்டம் உயர்ந்ததால் துண்டிக்கப்பட்டது. அந்த இடம் வேட்டையாடுபவர்கள் இல்லாத தீவாகவும், சிறிய பாலூட்டிகள் நிறைந்ததாகவும் மாறியது. அதன்பின் பாம்புகள் இங்கு பரிணமித்து பறவைகளை, குறிப்பாக புலம்பெயர்ந்த உயிரினங்களை வேட்டையாடக் கற்றுக்கொண்டன.

வேகமாக நகரும் இரையை வேட்டையாட, Golden Lancehead போன்ற பாம்புகள் அதன் விஷத்தை பயன்படுத்தின. இந்த பாம்பின் விஷம், பிரதான நிலப்பகுதியில் உள்ள அதே இன பாம்புகளை விட ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது.

கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர்

போத்ராப்ஸ் இன்சுலாரிஸ் என்றும் அழைக்கப்படும் இந்த பாம்பின் நீளம் 70-90 செ.மீ. இருக்கும். இதன் விஷம் போத்ராப்ஸ் ஜராராகாவை விட ஐந்து மடங்கு வலிமையானது. இந்த பாம்பு அதன் முக்கிய இரையான சிலி எலேனியா போன்ற புலம்பெயர்ந்த பறவைகளை வேட்டையாடுவதில் திறமை வாய்ந்தது.

இந்த தீவின் பாம்பு விஷம் உயர் இரத்த அழுத்த சிகிச்சை மற்றும் சில முக்கியமான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. எனவே இந்த தீவின் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பது மனித ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும்.

Desktop Bottom Promotion