Latest Updates
-
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம்
இந்த இந்திய கோடீஸ்வரர் ஆங்கிலேயர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்டாராம்... ஏன் தெரியுமா?
இந்திய சுதந்திர போர் பற்றி நாம் பரவலாக அறிந்திருந்தாலும், அதில் பல மாவீரர்கள் பற்றி நாம் அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பல வரலாற்றுக் கதைகள் நம்முடைய சுதந்திர போர் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும், சேத் ராம்ஜிதாஸ் குர்வாலாவின் கதை பலருக்குத் தெரியாததாக இருக்கலாம். இந்தியா சுதந்திர போராட்ட வரலாற்றில் பல உண்மையான ஹீரோக்களின் பெயர்கள் மறக்கப்பட்டது அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அப்படி மறைக்கப்பட்ட ஒரு தியாகி மற்றும் வீரர்தான் சேத் ராம்ஜிதாஸ் குர்வாலா.
துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலர் இந்த பெயரை கேள்விப்படுவது இதுதான் முதல் முறையாக இருக்கும். டெல்லியைச் சேர்ந்த கோடீஸ்வரரும் வங்கியாளருமான சேத் ராம்ஜிதாஸ் குர்வாலா ஒரு புரட்சியாளர் மற்றும் பரோபகாரர் ஆவார், அவர் நாட்டின் விடுதலைக்காக தனது கோடிக்கணக்கான செல்வத்தை தியாகம் செய்ய தயாராக இருந்தார்.

அவர் டெல்லியில் ஒரு அகர்வால் குடும்பத்தில் பிறந்தார், ஆனால் அவரது குடும்பம் முதலில் ராஜஸ்தானின் நாகூரில் இருந்து வந்தது. கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் நெருங்கிய நண்பரான ராம்ஜிதாஸ், மீரட் புரட்சிக்குப் பிறகு டெல்லியில் சுதந்திர புரட்சியை வழிநடத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் வஞ்சகமாக ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட விதம் ஆங்கிலேயர்களின் கொடூர புத்திக்கு மிகக் கொடூரமான ஒரு உதாரணமாகும்.
1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் போது, இந்தியாவின் முக்கிய பணக்கார தொழிலதிபரான ராம்ஜிதாஸ், புரட்சியை ஆதரிப்பதற்காகவும், உதவுவதற்காகவும் முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபரிடம் கோடிக்கணக்கான மதிப்புள்ள தனது சொத்துக்களை ஒப்படைத்தார். அவர் வீரர்களுக்கு உணவு, தானியங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்பாடு செய்தார் மற்றும் ஒரு சக்திவாய்ந்த இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பை உருவாக்கினார்.
இருப்பினும், அவரது புரட்சிகர நடவடிக்கைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றது, அதனால் அவர்கள் டெல்லியை மீண்டும் கைப்பற்றும் வேலையைத் தொடங்கினார்கள். ராம்ஜிதாஸ் பிடிபட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய துணிப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பதற்காக அவர் கொடூரமாக துன்புறுத்தப்பட்டார்.
முதலில், அவர் மீது வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதன்பிறகு, சாந்தினி சௌக் காவல் நிலையம் முன்பு அதே காயமடைந்த நிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். ராம்ஜிதாஸ் அவரது காலத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தபோதிலும், சுதந்திரப் போராட்டத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்த ஒரு தேசபக்தராக நினைவுகூரப்படுகிறார்.
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாராசந்த் அவரது ஒப்பற்ற செல்வத்தைப் பற்றி எழுதியுள்ளார். அவர் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த போதிலும் அவரது தியாகமே அவருக்கு இந்திய வரலாற்றில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.



Click it and Unblock the Notifications
