உலக வரலாற்றிலேயே பணக்கார பெண் இவர்தானாம்... இவங்ககிட்ட இருந்த பணம் இப்பகூட யாருகிட்டேயும் இல்லையாம்...!

உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று சொன்னாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பில் கேட்ஸ், எலான் மஸ்க் மற்றும் முகேஷ் அம்பானி போன்றவர்கள்தான். ஆனால் அவர்கள் அனைவரின் செல்வத்தையும் ஒன்று சேர்த்தாலும் ஈடாகாத ஒரு பெண் வரலாற்றில் வாழ்ந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவர் சக்திவாய்ந்த சீனப் பேரரசியான டாங் வம்சத்தின் வு ஜெடியன் ஆவார், சுமார் 16 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செல்வத்தை அவர் கொண்டிருந்தார், இது உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட அதிகமாகும்.

Richest Women in the History Who Is Richer Than Mukesh Ambani Ratan Tata

பேரரசி வூ என்று பிரபலமாக அறியப்படும், இந்த கொடுங்கோல் ஆட்சியாளர், தன் நுணுக்கமான பார்வை, புத்திசாலித்தனமான நுட்பங்கள் மற்றும் மிருகத்தனமான முடிவுகள் மூலம் பெரும் செல்வத்தைக் குவித்தார், அவரது சொந்த குழந்தைகளை கொன்றது அதில் முக்கியமான செயலாகும். விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், மாநில வருவாயை அதிகரிக்கவும் விவசாயிகள் மீதான வரிகளைக் குறைப்பது போன்ற சில முடிவுகளுக்காக அவர் பாராட்டப்பட்டாலும், அவர் சில சர்ச்சைக்குரிய முடிவுகளையும் எடுத்தார்.

வரலாற்றுக் குறிப்புகளின் படி, அவருடைய அதிகார வெறி அவர்களின் சொந்த மகளை கொல்ல வழிவகுத்தது மற்றும் அவருக்கு முன் அரசர்களாக இருந்த மகன்களை பதவி நீக்கம் செய்தது. வரலாற்றாசிரியர்கள் பேரரசி வூவை ஒரு புத்திசாலி மற்றும் சக்திவாய்ந்த ஆட்சியாளர் என்று விவரிக்கிறார்கள், அவர் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாண்டார். ஏறக்குறைய 15 ஆண்டுகள் நீடித்த அவரது ஆட்சியால், சீனப் பேரரசு மத்திய ஆசியாவில் கணிசமாக விரிவடைந்தது.

எப்படி பதவிக்கு வந்தார்?

வு ஸெடியன், ஷாங்க்சி மாகாணத்தில் கி.பி 624 இல் ஒரு பணக்கார மர வியாபாரி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை லி யுவானுடன் நெருக்கமாக இருந்தார், அவர் இறுதியில் டாங்கின் பேரரசராக உயர்ந்தார், இது அரச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்க அவளுக்கு வாய்ப்பளித்தது.

பேரரசி வூ சிறுவயதிலிருந்தே இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார், மேலும் 14 வயதில், டாங் அரண்மனையில் செயலாளராக நியமிக்கப்பட்டார், பேரரசர் டைசோங்கின் கீழ் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார்.

பின்னர், பேரரசரின் மரணம் அவரை ஒரு புத்த மடாலயத்திற்கு அழைத்துச் சென்றது, இது அந்த நேரத்தில் பேரரசருடன் தொடர்புடைய அனைத்து பெண்களுக்கும் பொதுவான நடைமுறையாக இருந்தது. இருப்பினும்ம், இறந்த பேரரசரின் மகனும் இராஜ்ஜியத்தின் வாரிசுமான பேரரசர் காசோங்குடனான அவரது உறவு, அவரது பயணத்தில் எதிர்பாராத திருப்பத்தைக் கொண்டுவந்தது, அவர் மீண்டும் ஒரு துணைவியாக அரண்மனைக்குத் திரும்பினார்.

அவர் தனது புத்திக்கூர்மை மற்றும் தந்திரத்தால், விரைவில் பேரரசி வாங்கை வெளியேற்றி, 655 ஆம் ஆண்டில் பேரரசியாக அரியணை ஏறினார். இது சீனப் பேரரசில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது, பேரரசர் காசோங் பேரரசின் ஆட்சியை வூ-விடம் ஒப்படைத்தார், ஏனெனில் அவரது உடல்நலம் நலிவடைந்தது மற்றும் அவரது பார்வையும் மங்கத் தொடங்கியது.

இதன் பிறகு, ஒரு வரலாற்று ஆட்சித் தொடங்கியது, அது சீனாவை ஆட்சி செய்த முதல் மற்றும் ஒரே பெண்ணாக அவரை மாற்றியது. நன்கு படித்த, தொலைநோக்கு சிந்தனை கொண்ட மற்றும் சிறந்த பொதுப் பேச்சாளராக அவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக அவர் புகழப்படுகிறார், இது வரிவிதிப்பைக் குறைத்து வர்த்தகத்திற்கு பட்டுப் பாதையை மீண்டும் திறப்பன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்தியது.

தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சியுடன் சீனப் பொருளாதாரம் அவரது தலைமையின் கீழ் செழித்தது. அவரது ஆட்சியின் போது இந்த பொருளாதார ஏற்றம் வரலாற்று ஆசிரியர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, இது சீனாவின் செழிப்பில் அவரது தாக்கத்தின் ஆதாரமாக நிற்கிறது.

Story first published: Monday, July 29, 2024, 11:10 [IST]
Desktop Bottom Promotion