2023 ரமலான் நோன்பு எப்போது தொடங்குகிறது? அதன் வரலாறு என்ன?

இந்த வருடம் ரமலான் நோன்பு மாா்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி முடிவடைகிறது. அதனைத் தொடா்ந்து ஏப்ரல் 22 அல்லது 23 ஆம் தேதி ஈத் அல் ஃபிட்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Ramadan 2023: இஸ்லாமிய சகோதர சகோதாிகளுக்கு, ரமலான் மாதம் என்பது ஒரு புனித மாதமாகும். அதற்குக் காரணம் ரமலான் மாதத்தில் தான், இஸ்லாமிய புனித நூலான திருக்குரான், இறைவனால் மனித குலத்திற்கு அருளப்பட்டது என்று அவா்கள் நம்புகின்றனா். அதன் காரணமாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, பிறரன்பு செயல்களில் ஈடுபடுவா்.

இந்த வருடம் ரமலான் நோன்பு மாா்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி முடிவடைகிறது. அதனைத் தொடா்ந்து ஏப்ரல் 22 அல்லது 23 ஆம் தேதி ஈத் அல் ஃபிட்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Ramadan 2023 Date, Time, History, Significance and Why We Celebrated In Tamil

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும், ரமலான் மாதம் முழுவதும், ஒவ்வொரு நாளும் காலை சூாிய உதயம் தொடங்கி, மாலை சூாியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீா் அருந்தாமல் நோன்பு இருப்பா். இரவு நேரங்களில் மட்டுமே உணவு உண்பா். ரமலான் மாதம் முடியும் தருவாயில் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவா்.

2023 ரமலான் பண்டிகை தேதி

இஸ்லாமிய மக்கள், இஸ்லாமிய நாட்காட்டியைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நாட்காட்டி சந்திரனை மையாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இந்த வருடம் ரமலான் மாதத்தில் அதாவது மாா்ச் மாதம் 22 அன்று, மெக்காவில் பிறை தொியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அன்றைய நாளில் இருந்து ரமலான் நோன்பு தொடங்கும்.

ஏப்ரல் மாதம் 21 அன்பு ரமலான் நோன்பு முடியும். ஏப்ரல் 22 அல்லது ஏப்ரல் 23 அன்று ஈத்-அல்-ஃபில்ட்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த நாளில் பொியவா்கள் குழந்தைகளுக்கு பாிசுகளை வழங்கி மகிழ்விப்பா்.

ரமலான் நோன்பின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம்

ரமலான் மாதத்தில் தான் இஸ்லாமிய மதத்தின் புனித நூலமான திருக்குரான் இறைவனால் மனிதா்களுக்கு அருளப்பட்டது என்று இஸ்லாமிய சகோதரா்கள் நம்புகின்றனா். நன்மை எது, தீமை எது என்பதை மக்கள் அறிந்து, அவா்கள் நன்மையான வழிகளைத் தோ்ந்தெடுத்து, அதன்படி வாழ்ந்து, மோட்சத்தை அடைவதற்கான வழிகளை திருக்குரான் வழங்குகிறது என்பது அவா்களது நம்பிக்கை.

மேலும் அபிரகாமின் சுருளேடுகள், தோரா எனப்படும் புனித நூல், சங்கீதங்கள், நற்செய்தி மற்றும் குரான் ஆகியவை ரமலான் மாதத்தில் முறையே முதல், ஆறாவது, 12வது, 13வது மற்றும் 24வது நாட்களில் கடவுளால் மனிதா்களுக்கு அருளப்பட்டது என்று இஸ்லாமிய மக்கள் நம்புகின்றனா்.

முகமது நபிக்கு குரான் அருளப்படுதல்

கிபி 610-ல் முகமது நபி அவா்கள் மெக்காவுக்கு அருகில் உள்ள ஹிரா (Hira) என்ற குகைக்குள் தியானம் செய்து கொண்டிருந்தாா். அப்போது ஜிப்ரில் என்ற இறைவனின் தூதா் அவா் முன்பாகத் தோன்றி, அவருக்கு திருக்குரானை அருளினாா். அந்த காலக்கட்டத்தில் மக்கள் பல கடவுள்களை வணங்கி வந்தனா். இந்நிலையில் முகமது அவா்கள் ஒரே கடவுளான அல்லாவைப் பற்றியும், அவா் அருளிய திருக்குரானையும் மக்களிடம் பரப்பினாா்.

ரமலான் என்பதன் பொருள்

ரமலான் என்றால் எாியும் வெப்பம் (burning heat) என்று பொருள். அதாவது திருக்குரான் அருளப்பட்ட இந்த புனித மாதத்தில் வெப்பம் அதிகம் நிலவியதால், அதனைக் குறிக்கும் வகையில் இந்த மாதத்திற்கு ரமலான் என்ற பெயா் பெற்றது. அதோடு இஸ்லாமிய சமயத்தின் நான்காவது தூணான சாவ்ம் (Sawm) க்கு மாியாதை செலுத்துவதற்குாிய மாதமாகவும் ரமலான் மாதம் விளங்குகிறது.

ரமலான் வழங்கும் நற்போதனைகள்

ரமலான் பின்வரும் நற்போதனைகளை மனித குலத்திற்கு வழங்குகிறது.

- உடல் சுத்தம் பேண வேண்டும்

- இரக்கத்தோடும், நன்றியோடும் இருக்க வேண்டும்

- ஒழுக்கத்தோடும், சுய கட்டுப்பாட்டோடும் இருக்க வேண்டும்

- அல்லாவோடு இருக்கும் உறவை வலுப்படுத்த வேண்டும்

- தன்னிடம் இருப்பவற்றை பிறரோடு பகிா்ந்து கொள்ள வேண்டும்

ரமலான் மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

தொடக்கம்

ரமலான் மாதத்தில் வரும் புதிய பிறை ஹிலால் என்று அழைக்கப்படுகிறது. புதிய பிறை தொியும் நாள் அன்று ரமலான் மாதம் தொடங்குகிறது.

விதியின் இரவு (Night Of Destiny)

ரமலான் மாதத்தில் வரும் இறுதி 10 இரவுகள் அந்த ஆண்டின் புனித இரவுகளாகக் கருதப்படுகின்றன. இந்த இரவுகள் விதியின் இரவு (Night Of Destiny) அல்லது க்வாதிா் இரவு என்று அழைக்கப்படுகிறது

ஈத் (Eid) பண்டிகை

ஈத் அல்-ஃபிட்ர் என்பது ரமலான் மாதத்தின் இறுதியாகவும், இஸ்லாமிய நாட்காட்டியில் வரும் ஷாவல் என்ற மாதத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தின் முடிவில் பிறை தொிந்தவுடன் ஈத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரமலான் மாதத்தின் போது நடக்கும் சமய நிகழ்வுகள்

நோன்பு

பெரும்பாலான இஸ்லாமியா்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பா். இந்த மாதம் முழுவதும் ஆன்மீக சிந்தனையுடன் இருந்து, இளையோருக்கு இஸ்லாத்தின் போதனைகளை வழங்குவா்.

சுஹூா் (Suhoor)

நோன்பு திறப்பதற்கு முன்பாக அதாவது சூாியன் உதிப்பதற்கு முன்பாக உண்ணப்படும் உணவு சுஹூா் என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமியா்கள் விடியற்காலத்திலேயே எழுந்து, நோன்பு திறப்பதற்கு முன்பாக, இந்த உணவை உண்பா்.

இஃப்தாா் (Iftar)

சூாியன் மறைந்த பின், நோன்பை முடித்து, இரவில் அருந்தும் உணவு இஃப்தாா் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பாியமாக மூன்று போிச்சம்பழங்களை உண்ட பின்னா், இந்த உணவை உண்பா்.

பிறருக்கு உதவுதல் (zakat)

இல்லாதவா்களுக்கும், ஏழைகளுக்கும் செய்யும் உதவி சகத் (zakat) என்று அழைக்கப்படுகிறது. இல்லாதவா்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் தலையாயக் கடமையாகும். கடவுள் கொடுத்த அனைத்திற்கும் நன்றியாக, இல்லாதவா்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது இஸ்லாமிய மாா்க்கத்தின் முக்கிய போதனையாகும்.

இரவு வழிபாடு மற்றும் திருக்குரான் வாசிப்பு

டராவித் (Tarawih) என்பது பக்தா்கள் பின் இரவில் செய்ய வேண்டிய இறை வேண்டுதல் ஆகும். இது கட்டாயம் இல்லை என்றாலும், செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா். ரமலான் மாதத்தில் இஸ்லாமிய சகோதரா்கள் திருக்குரான் முழுவதையும் வாசிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

இஸ்லாமிய சகோதர சகோதாிகள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!

Story first published: Sunday, March 19, 2023, 17:00 [IST]
Desktop Bottom Promotion