Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்த 5 ராசிக்காரங்களால ஒருத்தரோட மட்டும் வாழ முடியாதாம்...இவங்களுக்கு நிறைய துணை தேவைப்படுமாம்!
தனுசு ராசிக்காரர்கள் யாருடனும் பிணைக்க முடியாத ஒரு சுதந்திரமான நபர்கள். அவர்கள் அர்ப்பணிப்புகளுக்கு பயப்படுகிறார்கள்
ஒரு உறவில் இருப்பது என்றால், ஆண்,பெண் இருவரும் இணைந்து வாழ்க்கையை வாழுவது. இதில், பல்வேறு பிரச்சனைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் இருக்கும். ஒருவருக்காக ஒருவர் அர்ப்பணிப்போடும், விட்டுக்கொடுத்தும் வாழ வேண்டும். ஆனால், சிலருக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு நபருடன் மட்டுமே வாழ்வது, அவர்களுக்காக அர்ப்பணிப்பது அச்சுறுத்தலாக இருக்கலாம். குறிப்பாக உங்கள் சொந்த உணர்வுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாதபோது, அது உங்களை வெகுவாக பாதிக்கலாம். உங்கள் வாழ்க்கையின் அன்பை நீங்கள் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று நீங்கள் உணரலாம். ஆனால் திருமணம் வாழ்க்கையில், பெரும்பாலான மக்கள் உடனடியாக வேறுமாதிரி மாறுகிறார்கள். இது ஒரு நபருக்கு என்றென்றும் உறுதியளிக்கும் அவர்களின் இயலாமையே காரணம்.
நீங்கள் இந்த வகைக்குள் வருகிறீர்களா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஜோதிடம் இதற்கு உங்களுக்கு உதவும். இது ராசி அறிகுறிகளின் உதவியுடன் உங்கள் ஆளுமையை பகுப்பாய்வு செய்யலாம். ஒரு நபருக்கு தங்களை அர்ப்பணிக்க முடியாத ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
மிதுனம்
விஷயங்களை இழக்க நேரிடும் என்று மிதுன ராசி நேயர்கள் பயப்படுவதால், அவர்கள் பெறக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் கைப்பற்ற விரும்புகிறார்கள். அவர்கள் புதிய விஷயங்களைப் பரிசோதிக்க விரும்புகிறார்கள். இது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. மிதுன ராசிக்காரர்கள் ஏதோவொன்றால் அல்லது யாரோ ஒருவரால் கட்டுப்படுத்தப்படுவதாக உணரும் தருணத்தில் உறவை விட்டு விலகி விடுகிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள் மற்றும் எப்போதும் பரிபூரணவாதத்தைத் தேடுவார்கள். எனவே, அவர்கள் விரும்புவதும் தேவைப்படுவதும் கிடைக்காதவரை அவர்களால் ஒரு உறவில் நிலையாக இருக்க முடியாது. கன்னி ராசிக்காரர்கள் தங்கள் நிறைவை அடையும் வரை ஓய்வெடுக்க மாட்டார்கள். மேலும் இந்த தீர்க்கமான தன்மை பொதுவாக அவர்களை தனிமையில் இருக்கும்போது வாட்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் உறுதியற்றவர்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் ஒட்டிக்கொள்ள அவர்களால் முடியாது. விஷயங்களைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு மற்றவர்களின் ஆதரவும் உதவியும் தேவை. எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு அவர்களது துணை மட்டுமே இருக்கும் ஒரு வாழ்க்கையை வாழ அவர்களுக்கு மிகவும் கடினமாகிறது. ஏனென்றால் பிந்தையவர் பொதுவாக விஷயங்களைத் தீர்மானிப்பவர்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் யாருடனும் பிணைக்க முடியாத ஒரு சுதந்திரமான நபர்கள். அவர்கள் அர்ப்பணிப்புகளுக்கு பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் பல முனைகளில் கட்டுப்படுத்தப்படுவார்கள். அவர்களைப் போன்ற சாகச மற்றும் சுதந்திரத்தை விரும்பும் நபர்களுடன் அவர்கள் நன்றாக வேலை செய்கிறார்கள்.
கும்பம்
சிறந்த துணையை கண்டுபிடிப்பதில் கும்ப ராசிக்காரர்கள் சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் துணை யாராக இருக்க வேண்டும் என்பதில் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் சிறிதளவு சிரமத்திற்கே மனம் புண்படுகிறார்கள். எனவே, அவர்கள் அப்போதே உறவை முடித்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் அந்த உறவை விட்டு விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். அடுத்த உறவை தேடிச்செல்வார்கள்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் ஒரு நபருக்காக மட்டுமே தங்களை அர்ப்பணிக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அன்பையும் உறவுகளையும் மிகவும் மதிக்கிறார்கள் மற்றும் தங்கள் கூட்டாளரிடமிருந்து விலகி இருப்பதைப் பற்றி அவர்களால் சிந்திக்கவே முடியாது.