Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
சாணக்கியரின் கொள்கைகள் உலகப் புகழ் பெற்றவை. சாணக்கியர் பண்டைய காலத்தில் வாழ்ந்த ஒரு அசாதாரண அறிஞர். சாணக்கியரின் தார்மீகக் கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுகிறார்கள்.
சாணக்கியரின் கொள்கைகள் உலகப் புகழ் பெற்றவை. சாணக்கியர் பண்டைய காலத்தில் வாழ்ந்த ஒரு அசாதாரண அறிஞர். சாணக்கியரின் தார்மீகக் கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுகிறார்கள். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் மதம், வேலை, குடும்பம், உறவுகள், கண்ணியம், சமூகம், நாடு, உலகம் மற்றும் பல விஷயங்களை பற்றி விவரித்துள்ளார். சாணக்கியரின் இந்த நெறிமுறைகள் எந்த காலத்திற்கும் மிகவும் பொருத்தமானவை.

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கணவன்-மனைவி இடையே உள்ள உறவுமுறை பற்றிய கொள்கைகளையும் கூறுகிறார். இதை அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி மற்றொரு நபரின் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது என்று கூறப்படுகிறது, அது தவறில்லை. ஆனால் இந்த ஈர்ப்பு வரம்பு மீறினால், அது தவறு. ஈர்ப்பு என்பது ஒரு உள்ளார்ந்த மனிதப் பண்பு என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை என்று வரும்போது, அது வெறும் ஈர்ப்பு மட்டுமல்ல. அத்தகைய சூழ்நிலையில், அவர்களில் பெரும்பாலோர் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு ஆண் தன் மனைவியை தவிர வேறு பெண் ஆர்வம் காட்டுவதற்கு சாணக்கியர் கூறும் காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

விரைவான திருமணம்
திருமணத்திற்கு புறம்பான உறவுகளுக்கு வழிவகுக்கும் காரணங்களில் ஒன்றாக இளவயது திருமணத்தை சாணக்கியர் குறிப்பிடுகிறார். முதலாவதாக, திருமணம் புரியாத வயதில் திருமணம் நடைபெறுகிறது. இரண்டாவதாக, உங்கள் வாழ்க்கை காலப்போக்கில் முன்னேறும்போது, உங்கள் மனைவி உங்களுக்குப் பொருத்தமாக இல்லை என்பதையும், சிறந்ததை விரும்புவதையும் நீங்கள் காணலாம். இந்த கட்டத்தில், பலர் திருமணத்திற்கு புறம்பான உறவுகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்கள்.

உடல் திருப்தியின்மை
உடல் திருப்தி இல்லாதது திருமணத்திற்கு புறம்பான உறவுகளுக்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் கூறும் மற்றொரு காரணம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கணவன்-மனைவி இடையே உள்ள ஈர்ப்பு குறைபாடு தெளிவாகத் தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை நோக்கி நகர்கின்றனர். உடல் திருப்தி என்பது படுக்கையில் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவது மட்டுமல்ல, மனரீதியாகவும் வாய்மொழியாகவும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது.

பரஸ்பர நம்பிக்கை இல்லாமை
துணையின் பரஸ்பர அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிகரமான பாலியல் வாழ்க்கை ஆகியவை திருமணத்தில் மிகவும் முக்கியம். இல்லையெனில், உங்கள் உறவு சிதைந்துவிடும். பரஸ்பர நம்பிக்கையின்மையே பெரும்பாலான திருமணங்கள் தோல்வியடைவதற்குக் காரணம். உங்கள் துணையுடனான உங்கள் உறவில் நீங்கள் திருப்தி அடைந்த பிறகும், மற்றொரு உறவுக்காக ஏங்குவது உங்கள் திருமண வாழ்க்கையை அழிக்கும் செயல் என்று சாணக்கியர் கூறுகிறார்.

ஏமாற்றம்
உங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் அழகாகக் கருதி அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை துணையின் அழகையும் அன்பையும் குறைத்து மதிப்பிட்டால், அது உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை விதைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலான ஆண்கள் விரக்தி மற்றும் ஏமாற்றம் காரணமாக வேறொருவரைத் தேடி செல்கிறார்கள்.



Click it and Unblock the Notifications











