Just In
- 57 min ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 1 hr ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 2 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 3 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கர்ப்பிணி மனைவிக்கு நாற்காலியாக மாறிய கணவர்… நெகிழ்ச்சியான சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா?
தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த அவரது கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்து மனித நாற்காலியாக மாறினார்.
மனிதர்களில் பலர் தங்களின் மனித தன்மையை இழந்து வருகின்றனர். ஐந்து அறிவு படைத்த விலங்குகளுக்குள் இருக்கும் ஒற்றுமையும், அன்புமும், உதவும் குணமும் மனிதர்களிடத்தில் மறுத்துபோய் இருக்கின்றன. அதற்கு சான்றாக சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தன் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவர், அவர் அமர யாரும் இடம் தராததால், தானே மனித நாற்காலியாக மாறி, தன் மனைவியை சுமந்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி காண்பர் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது. அதேசமயம் மனித தன்மையற்ற செயலற்ற அங்கிருந்த மனிதர்களையும் பலர் வசைபாடி வருகிறார்கள்.
மருத்துவமனை
சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கேஹாங் நகரை சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அனைத்து நாற்காலிகளும் நிரம்பியிருந்தன. இதனால் கணவன், மனைவி இருவரும் மருத்துவரின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
MOST READ: உங்க குழந்தைங்க குள்ளமா இருக்காங்களா? அப்ப உயரம் அதிகரிக்க இத கொடுங்க...!
யாரும் இடம் தரவில்லை
நீண்ட நேரமாக கர்ப்பிணிப்பெண் நின்று கொண்டிருந்ததால், அவருக்கு கால் வலிக்க தொடங்கியது. எனினும் கர்ப்பிணி பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன்வரவில்லை. அனைவரும் செல்போனை பார்த்துக்கொண்டு அவரவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.
மனித நாற்காலியாக மாறிய கணவர்
தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த அவரது கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்து மனித நாற்காலியாக மாறினார். அப்போதுகூட, நாற்காலியில் அமர்ந்திருந்தவர்கள் யாரும் எழுந்து இடம் தரவில்லை. அங்கு நடந்து சென்றவர்களும் இந்த காட்சியை பார்த்தவாறு செல்வதை அந்த் வீடியோ காட்சியில் காணலாம்.
வைரல் வீடியோ
கணவனின் இந்த பாசத்தையும், அங்கிருந்தவர்களின் மனித தன்மையற்ற செயலையும் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ குறுகிய நேரத்தில் 70 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்'குகளை குவித்தது. மேலும், கர்ப்பிணியின் கணவரை பலரும் பாராட்டி வரும் நிலையில், அந்த கர்ப்பிணி பெண்ணுக்காக எழுந்து இடம் தராதவர்களை சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.
MOST READ: கள்ள உறவில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்ப கண்டிப்ப இத தெரிஞ்சிக்கோங்க...!
உண்மையான அன்பு
காதல் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். அதில் ஒரு ஜோடி தங்கள் காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள். ஆனால், சில நேரங்களில், மனிதர்கள் தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதால், பொருள்சார்ந்த மகிழ்ச்சியை விரும்புவதால் உண்மையான காதல் போன்ற எதுவும் இல்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இன்னும், சிலர் தங்களின் துணைக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் உறுதிப்படுத்த எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பின் அத்தகைய ஒரு உதாரணம் இந்த ஜோடி.
வலுவான எடுத்துக்காட்டு
இந்த உலகத்திற்கு ஒரு புதிய உயிரை கொண்டுவருவதற்கு பெண்கள் ஏராளமான சிரமங்களையும் சவால்களையும் சந்திக்கிறார்கள். ஆனால் இந்த வீடியோ காட்டுகிறது, ஒரு தந்தையும் கூட தனது குழந்தையும் மனைவியும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க நிறைய செய்கிறார். ஒரு நபர் ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது என்ன நடக்கும் என்பதற்கு வீடியோ ஒரு வலுவான எடுத்துக்காட்டு. கர்ப்பிணி மனைவியிடம் அவரது கணவனின் இனிமையான மற்றும் அக்கறையுள்ள நடவடிக்கைகளை பார்த்தபின், அவரால் பலர் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள்.