Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
நீங்க உண்மையிலேயே புத்திசாலியானு தெரிஞ்சிக்கனுமா? இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் புத்திசாலிதான்..
விதுர நீதியில் குறிப்பிட்டுள்ள படி யாரும் பிறக்கும்போதே புத்திசாலியாக பிறப்பதில்லை, அவரின் பழக்கவழக்கங்களும், அவர்கள் எடுக்கும் முடிவுகளும், வளர்ப்பு முறையும்தான் அவர்களை புத்திசாலிகளாக மாற்றுகிறது.
மகாபாரதத்தில் பல முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனர். அதில் போரில் ஈடுபடாத முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் விதுரர் ஆவார். திருதராஷ்டிரனின் இளைய சகோதரனாக இருந்த இவர் அறிவில் சிறந்து விளங்கியதால் அஸ்தினாபுரத்தின் மகா மந்திரியாக பதவி வகித்தார். மஹாபாரதத்தில் இருந்த மிகச்சிறந்த ஞானிகளில் ஒருவராக இவர் இருந்தார்.

விதுரர் தனது ஞானத்தைக் கொண்டு எதிர்கால தலைமுறையினரின் நன்மைக்காக உருவாக்கிய நூல்தான் விதுர நீதி ஆகும். விதுர நீதியில் குறிப்பிட்டுள்ள படி யாரும் பிறக்கும்போதே புத்திசாலியாக பிறப்பதில்லை, அவரின் பழக்கவழக்கங்களும், அவர்கள் எடுக்கும் முடிவுகளும், வளர்ப்பு முறையும்தான் அவர்களை புத்திசாலிகளாக மாற்றுகிறது. ஒரு புத்திசாலி மனிதனுக்கான அறிகுறிகள் என்னென்ன என்று விதுரர் தனது விதுர நீதியில் குறிப்பிட்டள்ளார். அது என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முதல் அறிகுறி
ஒரு புத்திசாலி நபர் தன்னை உள்ளே இருந்து அடையாளம் கண்டுகொள்கிறார்கள் அது அவர்களின் கடின உழைப்பாகும். அவர்கள் வலியை பொறுத்துக்கொள்ள கற்றுக்கொள்கிறாரார்கள்.மேலும் தர்மத்தின் பாதையில் எப்படி நேராக செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.

இரண்டாம் அறிகுறி
ஒருவரின் எதிர்கால திட்டங்கள் வெப்பம், குளிர், பாசம், மகிழ்ச்சி, பணம், பசி ஆடம்பரம் என எதுவாலும் பாதிக்கப்படவில்லை என்றால் அவர்கள் உண்மையில் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

மூன்றாம் அறிகுறி
விரைவான புரிந்து கொள்பவர்கள், மற்றவர்கள் கூறுவதை பொறுமையாக கவனிப்பவர்கள், மற்றவர்களின் வேலைகளில் தலையிடாமல் இருப்பவர்கள், எளிதில் மற்றவர்களை சரியாக எடை போடுபவர்கள் இவர்களெல்லாம் கண்டிப்பாக புத்திசாலிகளாக இருப்பார்கள்.

நான்காம் அறிகுறி
மற்றவர்கள் பாராட்டியவுடன் பெருமையை தலைக்கு எடுத்து செல்லாதவர்கள், மற்றவர்களால் அவமதிக்கப்பட்டால் வருத்தத்தை காட்டாதவர்கள், உள்ளத்தை பரந்த ஆழமாக ஒன்றாக வைத்திருப்பவர்கள் உண்மையில் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

ஐந்தாம் அறிகுறி
ஒருவருடைய கல்வியானது அவருடைய அறிவால் நிர்வகிக்கப்பட்டால் அல்லது வழிநடத்தப்பட்டால், பெரியவர்கள்/படித்தவர்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்கள் நல்ல புத்திசாலிகளாக இருப்பார்கள்.

ஆறாம் அறிகுறி
மகிழ்ச்சி மற்றும் சோகம், பெருமை மற்றும் அவமானம், ஆசைகள் இவைதான் ஒரு நபரின் வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து அவர்களை விலக்கிச் செல்லும் காரணிகளாகும். இந்த காரணங்களால் பாதிக்கப்படாதவர்களே உண்மையில் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

ஏழாம் அறிகுறி
புத்திசாலிகள் ஒருபோதும் அடைய முடியாத பொருளை துரத்திச் செல்ல மாட்டார்கள். நடந்து முடிந்த செயல்களுக்காக ஒருபோதும் வருந்த மாட்டார்கள், கடினமான காலத்தின் வருகையை ஒருபோதும் இவர்கள் பிரதிபலிக்கமாட்டார்கள்.

எட்டாம் அறிகுறி
புத்திசாலியான ஒரு நபர் தனது திறன்களுக்கேற்ற பணிகளையே செய்வார்கள். அவர்கள் ஒருபோதும் எந்த செயலையும் புறக்கணிக்க மாட்டார்கள். அதேசமயம் யாரையும் அவமதிக்கவும் மாட்டார்கள்.

ஒன்பதாம் அறிகுறி
கடமை மற்றும் வியாபாரம் என்று வரும்போது யாருடைய மனம் சலனங்களுக்கு உட்படாமல் நிலையாக இருக்கிறதோ, உலக ஆசைகளை காட்டிலும் கடவுள் தொடர்பான பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கண்டிப்பாக புத்திசாலிகளாக இருப்பார்கள்.

பத்தாம் அறிகுறி
அனைத்து சூழ்நிலைகளிலும் பேசக்கூடியவர்கள், மதம் மற்றும் மதநூல்கள் தொடர்பான புரிதலை கொண்டவர்கள், விவாதங்களில் சிறப்பாக பேசக்கூடியவர்கள், குறைந்த நேரத்தில் தனது கருத்தை மற்றவர்களுக்கு புரிய வைப்பவர்கள் உண்மையில் புத்திசாலிகளாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











