போர் புரிந்தது முதல் உலக்கையாலே 100 பேரை அடித்துக்கொன்ற இந்திய பெண் போராளிகள் பற்றி தெரியுமா?

எதிரி வீரர்களைத் தாக்க இவர் உலக்கையை பயன்படுத்தியதால் ஒபவ்வா எனும் இவரின் பெயர் ஒனகே ஒபவ்வா (ஒனகே - உலக்கை) என வழங்கலாயிற்று. ஓபவ்வா கிட்டத்தட்ட 100 பேரை உலக்கையால் அடித்து கொன்றதாகக் கூறப்படுகிறது.

பாஜிராவ், மகாராணா பிரதாப், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பெயர்கள் நாடு முழுவதும் பேசப்பட்டு, வரலாற்றின் பக்கங்களில் அழியாத பெயர்களாக உள்ளன. நம்மில் பெரும்பாலோர் துணிச்சலான ஆண்கள் போர்வீரர்களைப் பற்றிய நூல்களைப் படித்திருப்போம். அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சுதந்திரத்திற்காக தைரியமாகப் போராடிய பெண்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய பெண் போராளிகளை நினைக்கும் போது உங்கள் நினைவுக்கு வரும் ஐந்து பெயர்களை சொல்ல முடியுமா? ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஜான்சி ராணியை நாம் அறிவோம். ஆனால் ஆங்கிலேயர்களைத் தவிர வேறு எந்த ஆட்சியாளர்களிடமிருந்தும் நம்மை விடுவித்த பெண்களை நாம் நினைவுகூர முடியுமா? அநேகமாக இல்லை.

unsung female warriors of India in tamil

துணிச்சலாகவும் வீரத்துடனும் செயல்பட்ட பெண் போர்வீரர்களைப் பற்றி நாம் பேசுவதற்கும் அவர்களின் கதைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்குமான நேரம் இது. தங்கள் சொந்த சுதந்திரத்திற்காக வாளை எடுத்து போராடிய இந்திய பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அனைத்து முரண்பாடுகளையும் எதிர்கொண்டு சுதந்திரத்திற்காக துணிச்சலாக போராடிய சில பெண் வீரர்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதா பாக் கவுர்

மாதா பாக் கவுர்

இன்றைய அமிர்தசரஸில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவள் மாய் பாகோ. இவள் பிறப்பால் ஒரு சீக்கியர் ஆவார். 1705 இல் முக்த்சர் போரில் 10,000 வலிமையான முகலாய இராணுவத்திற்கு எதிராக 40 சீக்கிய வீரர்களைக் கொண்ட ஒரு குழுவை வழிநடத்திய சிறந்த வீர பெண்மணி இவர். இவர் போர்க்களத்தில் திறமையான போர்வீரராக இருந்தார். மேலும், சீக்கிய மதத்தில் ஒரு துறவியாகவும் போற்றப்படுகிறார். பின்னர், அவர் மகாராஷ்டிராவில் குரு கோவிந்த் சிங்கின் நாடுகடத்தலின் போது அவருக்கு மெய்க்காப்பாளராகவும் பணியாற்றினார். மாய் பாகோ (Mai Bhago) மாதா பாக் கவுர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஒனகே ஒபவ்வா

ஒனகே ஒபவ்வா

ஓபவ்வா ஒரு இளவரசி அல்ல, சித்ரதுர்கா கோட்டையின் காவலாளியின் மனைவி. ஒனகே ஒபவ்வா (Onake Obavva) என்பவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்ரதுர்கா பெண்மணி. இவர், தந்திரமாக கோட்டைக்குள் நுழைய முற்பட்ட ஐதர் அலியின் படைவீரர்களைத் தனி ஒரு பெண்மணியாக நின்று தடுத்துள்ளார். இதன் காரணமாக, கர்நாடகாவின் மிகவும் மதிக்கத்தக்க வீரப் பெண்மணிகளுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார். எதிரி வீரர்களைத் தாக்க இவர் உலக்கையை பயன்படுத்தியதால் ஒபவ்வா எனும் இவரின் பெயர் ஒனகே ஒபவ்வா (ஒனகே - உலக்கை) என வழங்கலாயிற்று. ஓபவ்வா கிட்டத்தட்ட 100 பேரை உலக்கையால் அடித்து கொன்றதாகக் கூறப்படுகிறது.

கெலாடி சென்னம்மா கேளடி

கெலாடி சென்னம்மா கேளடி

ராணி சென்னம்மா இந்திய நாட்டில் 1778 ஆம் வருடம் பிறந்தார். தனது சிறு வயதிலேயே சென்னம்மா குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார். மன்னர் சோமசேகர நாயக்கரை மணந்த பிறகு, சென்னம்மா கெலாடி (கர்நாடகா) ராணியானார். ஒருமுறை சிவாஜியின் இரண்டாவது மகன் ராஜாராம் முகலாயர்களிடமிருந்து தப்பி ஓடியபோது, ​​சென்னம்மா அவருக்கு அடைக்கலம் கொடுத்தார். அவள் ராஜாராமை தன் பிரிவின் கீழ் அழைத்துச் சென்றதை அறிந்த அவுரங்கசீப் அவளுடன் சண்டையிட தனது ஆட்களை அனுப்பினார். சென்னம்மா தைரியமாகப் போரிட்டு முகலாயப் பேரரசரின் படையைத் தோற்கடித்தாள். போரின் முடிவில், கெலாடி மற்றும் முகலாயர்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, அதன் மூலம் பேரரசர் கெலாடியை ஒரு தனி இராஜ்ஜியமாக அங்கீகரித்தார்.

சென்னம்மா மரணம்

சென்னம்மா மரணம்

ஆங்கிலேயர்களுடன் மிகவும் துணிச்சலுடனும், தைரியத்துடனும், பெரும் ஆற்றலுடனும் எதிர்த்துப் போரிட்டவர், சென்னம்மா. ஆனால், துரதிஷ்டவசமாக ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்டு பைல்ஹோங்கல் கோட்டையில் கைதியாக வைக்கப்பட்டாள். அங்கு 1829 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சென்னம்மாவின் மரணம் நேர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த கெலாடி சென்னம்மா கர்நாடக மாநிலத்தில் ஒரு பெரும் வீராங்கனையாக இன்றும் போற்றப் படுகிறார்.

பெலவாடி மல்லம்மா

பெலவாடி மல்லம்மா

பெலவாடி மல்லம்மா(Belawadi Mallamma) இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தின் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை ஆவார். பெலவாடி மல்லம்மா சோடே மன்னர் மதுலிங்க நாயக்கருக்கு மகளாக பிறந்தார் மற்றும் இளவரசர் இசபிரபுவின் மனைவி ஆவார். இவர், மராட்டியர்களுக்கு எதிராகப் போராட மகளிர் இராணுவத்தை உருவாக்கிய முதல் பெண்மணி. இவர், 17 ஆம் நூற்றாண்டில் பெண்கள் இராணுவத்தை கட்டமைத்து பயிற்சியளித்த இந்திய துணைக் கண்ட வரலாற்றில் முதல் ராணி என்ற பெருமையையும் பெற்றவர். இவரது ராஜ்ஜியத்திற்கும் மராட்டியப் பேரரசிற்கும் இடையே நடந்த போரின் போது, ​​அவரது கணவர் கொல்லப்பட்டார். மல்லம்மா தன் ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற தன் படையுடன் போரிட்டார். இருப்பினும், அவள் பிடிபட்டாள். பின்னர், சத்ரபதி சிவாஜி அவரது துணிச்சலைக் கண்டு விடுதலை செய்தார்.

அப்பாக்கா ராணி

அப்பாக்கா ராணி

அபக்கா சௌதா (Abbakka Chowta), என்பவர், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்த்துகீசியர்களுடன் போராடிய உல்லாலின் முதல் துளுவ ராணி ஆவார். சௌதா வம்சத்தைச் சேர்ந்த ராணி அப்பாக்கா மங்களூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள உல்லால் என்ற சிறிய கடற்கரை நகரத்தை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் போது, ​​போர்த்துகீசியர்கள் கடற்கரை நகரத்தை கைப்பற்றி அதை துறைமுகமாக பயன்படுத்த விரும்பினர். அவர்கள் 1525 இல் முதல் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் ராணி அபக்கா போர்த்துகீசியர்களுக்கு எதிராக கடுமையாகப் போரிட்டு, அந்த திட்டத்தை முறியடித்தார். அவரின் துணிச்சலுக்காக ராணி அபயா (அச்சமற்ற ராணி) என்று அழைக்கப்பட்டார். ராணியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் உல்லாலில் ஆண்டு விழா நடத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, September 19, 2022, 16:01 [IST]
Desktop Bottom Promotion