எந்தெந்த முத்தங்கள் உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? முத்தத்தை பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்...!

பண்டைய கால வரலாற்றின் படி முத்தங்கள் பற்றிய தெளிவு இந்தியாவில் இருந்துதான் மேற்கு நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது.

காதலின் செல்லக்குழந்தையான முத்தம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக முத்தப் போராட்டம் என்பது பிரபலமாகி வருகிறது. அதனை நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் நமது நாட்டில் முத்தத்திற்கு என்று தனி பாரம்பரியமும், வரலாறும் உள்ளது. இந்த முத்தம் மேற்கத்திய கலாச்சாரம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

Unknown History of Kissing

பண்டைய கால வரலாற்றின் படி முத்தங்கள் பற்றிய தெளிவு இந்தியாவில் இருந்துதான் மேற்கு நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. வேத இலக்கியங்கள் மற்றும் பழங்கால நூல்களில் முத்தம் பற்றி நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் உதட்டின் ஈரப்பதத்தை குடிப்பது போன்ற கவிதைகள் உள்ளன. உலகப்புகழ் பெற்ற வத்ஸாயன காமசூத்ராவில் தங்கள் காதலரை எப்படி முத்தமிட வேண்டும் என்பதை விளக்குவதற்கு ஒரு அத்தியாயமே அர்பணிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாபாரதம்

மகாபாரதம்

வேதங்களுக்குப் பிறகு சுமார் 500-1000 ஆண்டுகளுக்குப் பிறகு, மகாபாரதம் உதடு முத்தத்தைப் பற்றி குறிப்பிட்டது. மகாபாரதத்தில் ஒரு காவியக் கவிதை கூறுகிறது, "அவள் வாயை என் வாய் மீது வைத்து சத்தம் போட்டாள், அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது."

முத்தத்தின் ஏற்றுமதி

முத்தத்தின் ஏற்றுமதி

கிமு 326 ஆம் ஆண்டில், முத்தங்கள் இந்தியாவுக்கு வெளியே ஏற்றுமதி செய்யப்பட்டன. அலெக்ஸாண்டரின் படைகள் மூலம் அது நடந்தது. கவிஞர் ஒருவரின் கூற்றுப்படி, " அவர்கள் இந்தியர்களிடமிருந்து முத்தமிடுவதைப் பற்றி கற்றுக்கொண்டார்கள். பின்னர், அலெக்சாண்டர் இறந்த பிறகு, அவருடைய தளபதிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றனர், அவர்களுடன் சேர்ந்து முத்தமிடும் கலையும் பரவியது ".

ஹோமர்

ஹோமர்

கி.மு 9 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய 'ஹோமர்' இல், மன்னர் பிரியாம் தனது மகனின் சடலத்தை திரும்பக் கோருவதற்காக அகிலெஸின் கையை முத்தமிடுகிறார்: "நான் மதிக்கும் கடவுளான அகிலெஸ், என்னிடம் கருணை காட்டுங்கள், உங்கள் சொந்த தந்தையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நான் அவரை விட பரிதாபப்படுகிறேன், பூமியில் வேறு எந்த மனிதனும் செய்யாததைச் செய்ய நான் என்னைக் கொண்டுவந்ததால், என் மகன்களைக் கொன்றவனின் கையை என் உதடுகளுக்கு உயர்த்தினேன். " என்று கூறினார்.

பண்டைய முத்த மரபுகள்

பண்டைய முத்த மரபுகள்

கிமு 5 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றில் ஹெரோடோடஸ் உலகம் முழுவதும் முத்த மரபுகளை விவரிக்கிறார். அவர் பெர்சியாவில் முத்தத்தைப் பற்றி பேசுகிறார், அங்கு தனக்கு சமமான அந்தஸ்து உடையவர்களை வாயில் முத்தம் கொடுத்து வரவேற்றனர், தனது நிலைக்கு கீழ் உள்ளவர்களை கன்னத்தில் முத்தம் கொடுத்து வரவேற்றனர்.

எகிப்தியர்கள்

எகிப்தியர்கள்

வரலாற்றில் கூறியுள்ள படி கிப்தியர்கள் கிரேக்கர்களை முத்தமிட மறுத்துவிட்டார்கள், ஏனெனில் அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள், இது பசுவை புனிதமாகக் கருதும் எகிப்திய நெறிமுறைகளுக்கு அந்நியமானது. கிளியோபாட்ரா ரோமானியராக இருந்ததால் மார்க் அந்தோனியை முத்தமிட்டாரா? என்பது வரலாற்றின் முக்கியமான கேள்வியாகும்.

ரோமானியர்கள்

ரோமானியர்கள்

ரோமானியர்களைப் பற்றி பேசுகையில், மிகப்பெரும் இனமான இவர்கள் கடைப்பிடித்த முத்த மரபுகள் இன்றுவரையும் நீடிக்கிறது. பண்டைய கால ரோமானியர்கள் நிச்சயதார்தத்தின் போது அனைவரின் முன்னிலையிலும் முத்தமிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இன்று வரை தேவாலயங்களில் நடைபெறும் திருமணங்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அமோர்

அமோர்

ரோமானியர்களின் கீழ் முத்தம் மிகவும் பரவலான ஒன்றாக மாறியது. இன்று கூட ரோமிற்கு வருவது காதலுக்காக மட்டும்தான், இத்தாலியர்கள் இதனை அமோர் என்று அழைக்கிறார்கள். ரோமானியர்கள் தங்கள் துணை அல்லது காதலர்களை மட்டுமின்றி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் ஆட்சியாளர்களை முத்தமிட்டனர். கை அல்லது கன்னத்தில் (ஆஸ்குலம்) ஒரு முத்தத்திலிருந்து உதடுகளில் (பேசியம்) ஒரு ஆழமான அல்லது உணர்ச்சிமிக்க முத்தத்தை (சவோலியம்) வேறுபடுத்தினர்.

ரோம் முதல் ரோமியோ வரை

ரோம் முதல் ரோமியோ வரை

ஷேக்ஸ்பியரின் "ரோமியோ அண்ட் ஜூலியட்"-ல், மோசமான விதியைக் கொண்ட காதலர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் முத்தங்கள் உண்மையில் ஆபத்தானவை என்பதை நிரூபிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. உண்மையில் அது மரணத்தைக் கூட ஏற்படுத்தக்கூடும்.

துரோகத்தின் முத்தம்

துரோகத்தின் முத்தம்

முத்தங்கள் காதலர்களை மட்டுமல்ல எதிரிகளை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, கிறிஸ்தவ நம்பிக்கையில், யூதாஸ் இயேசுவை கன்னத்தில் முத்தமிட்டு தனது எதிரிகளுக்கு அடையாளம் காட்டினார். இது வரலாற்றின் மிகப்பெரிய துரோகமாகும். புகழ்பெற்ற கடைசி சப்பரின் நாளில், யூதாஸ் கெத்செமனே தோட்டத்தில் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார்.

ஆன்மாக்களின் பரிமாற்றம்

ஆன்மாக்களின் பரிமாற்றம்

தற்செயலாக, ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயத்தில் முத்தம் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் புனித முத்தத்துடன் வரவேற்றனர், இது "ஆஸ்குலம் பேசிஸ்" என்று அழைக்கப்படுகிறது. இரண்டு பேர் முத்தமிடும்போது இயல்பாக நிகழும் ஆவியின் பரிமாற்றமே பாரம்பரியத்தின் பின்னால் இருந்த காரணம். இந்த ஆவி பரிமாற்றத்தின் மூலம், சர்ச் உறுப்பினர்களிடையே பரஸ்பர பிணைப்புகள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion