Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலர் பொடிகள் எப்படி வந்தது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
நம்மில் பெரும்பாலோருக்கு ஹோலி என்பது நிறங்கள், நல்ல உணவு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று தெரியும், ஆனால் இந்த பண்டிகையின் கொண்டாடத்திற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும
வட இந்தியாவின் மிக முக்கியமான கோலகலமான பண்டிகை என்றால் அது ஹோலி பண்டிகைதான். கண்கவர் வண்ணங்கள், குஜியா, ஆடம்பரமான விருந்து மற்றும் சகோதரத்துவம் போன்ற வடிவங்களில் மகிழ்ச்சியின் அலை காணக்கூடிய ஆண்டின் அற்புதமான நேரம் இது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்றான ஹோலி, இந்த ஆண்டு மார்ச் 7-8 தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது.

நம்மில் பெரும்பாலோருக்கு ஹோலி என்பது நிறங்கள், நல்ல உணவு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று தெரியும், ஆனால் இந்த பண்டிகையின் கொண்டாடத்திற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஹோலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பௌர்ணமி விழா
இந்து நாட்காட்டியின்படி ஹோலி பங்குனி மாதத்தில் வருகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சந்திர சுழற்சியின்படி முழு நிலவில் ஹோலி கொண்டாடப்படுகிறது.

வசந்த கால விழா
தொடக்கம் முதலே வசந்த காலத்தின் தொடக்கத்தில் ஹோலி கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பலாஷ் மலர்களைக் கொண்டு கொண்டாடப்பட்டது.

புராணத் தொடர்பு
இந்து புராணங்களின்படி, ஹோலியின் கதை ஹோலிகா தகனம் மற்றும் அசுரன் இரண்யகசிபுவை விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தால் கொல்வதைச் சுற்றி வருகிறது, இது தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. அதனால்தான் ஹோலி தீபாவளி போல கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஹோலிகா தகனம்
ஹோலிகா தகனம் படிப்படியாக இந்த திருவிழாவின் முக்கிய அங்கமாக மாறியது. ஹோலிகா தகனம் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. மக்கள் தங்கள் அறுவடைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் ஆசீர்வாதத்தைத் தேடுவதற்கான காரணம் இதுதான்.

கலர் பொடிகள் எப்படி இருந்தது?
ஹோலிக்கு பயன்படுத்தப்படும் வண்ணங்கள் இயற்கையின் வண்ணங்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள், காய்கறிகள் ஆகியவற்றிலிருந்து தழுவி, இறுதியில் அவை கலர் பொடிகளாக திருவிழாவின் முக்கிய அங்கமாக மாறியது. இப்போது ஹோலி பண்டிகையை கலர் பொடிகள் இல்லாமல் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

தண்டாய் மற்றும் குஜியா
மகிழ்ச்சி என்று வரும்போது அதில் உணவுகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்க்கும், அதற்கும் ஹோலியும் விதிவிலக்கல்ல. இந்த திருவிழாவில் உணவு மற்றும் பானங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருவகாலம் மாறும் போது ஹோலி பண்டிகை வருகிறது, இதனால் தண்டாய் மற்றும் குஜியாவில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பொதுவாக மசாலா மற்றும் மூலிகைகள் கொண்டிருக்கின்றன, அவை பருவகால மாற்றங்களில் உங்களை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.



Click it and Unblock the Notifications