Latest Updates
-
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம்
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலர் பொடிகள் எப்படி வந்தது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
நம்மில் பெரும்பாலோருக்கு ஹோலி என்பது நிறங்கள், நல்ல உணவு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று தெரியும், ஆனால் இந்த பண்டிகையின் கொண்டாடத்திற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும
வட இந்தியாவின் மிக முக்கியமான கோலகலமான பண்டிகை என்றால் அது ஹோலி பண்டிகைதான். கண்கவர் வண்ணங்கள், குஜியா, ஆடம்பரமான விருந்து மற்றும் சகோதரத்துவம் போன்ற வடிவங்களில் மகிழ்ச்சியின் அலை காணக்கூடிய ஆண்டின் அற்புதமான நேரம் இது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்றான ஹோலி, இந்த ஆண்டு மார்ச் 7-8 தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது.

நம்மில் பெரும்பாலோருக்கு ஹோலி என்பது நிறங்கள், நல்ல உணவு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று தெரியும், ஆனால் இந்த பண்டிகையின் கொண்டாடத்திற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஹோலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பௌர்ணமி விழா
இந்து நாட்காட்டியின்படி ஹோலி பங்குனி மாதத்தில் வருகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சந்திர சுழற்சியின்படி முழு நிலவில் ஹோலி கொண்டாடப்படுகிறது.

வசந்த கால விழா
தொடக்கம் முதலே வசந்த காலத்தின் தொடக்கத்தில் ஹோலி கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பலாஷ் மலர்களைக் கொண்டு கொண்டாடப்பட்டது.

புராணத் தொடர்பு
இந்து புராணங்களின்படி, ஹோலியின் கதை ஹோலிகா தகனம் மற்றும் அசுரன் இரண்யகசிபுவை விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தால் கொல்வதைச் சுற்றி வருகிறது, இது தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. அதனால்தான் ஹோலி தீபாவளி போல கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஹோலிகா தகனம்
ஹோலிகா தகனம் படிப்படியாக இந்த திருவிழாவின் முக்கிய அங்கமாக மாறியது. ஹோலிகா தகனம் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. மக்கள் தங்கள் அறுவடைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் ஆசீர்வாதத்தைத் தேடுவதற்கான காரணம் இதுதான்.

கலர் பொடிகள் எப்படி இருந்தது?
ஹோலிக்கு பயன்படுத்தப்படும் வண்ணங்கள் இயற்கையின் வண்ணங்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள், காய்கறிகள் ஆகியவற்றிலிருந்து தழுவி, இறுதியில் அவை கலர் பொடிகளாக திருவிழாவின் முக்கிய அங்கமாக மாறியது. இப்போது ஹோலி பண்டிகையை கலர் பொடிகள் இல்லாமல் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

தண்டாய் மற்றும் குஜியா
மகிழ்ச்சி என்று வரும்போது அதில் உணவுகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்க்கும், அதற்கும் ஹோலியும் விதிவிலக்கல்ல. இந்த திருவிழாவில் உணவு மற்றும் பானங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருவகாலம் மாறும் போது ஹோலி பண்டிகை வருகிறது, இதனால் தண்டாய் மற்றும் குஜியாவில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பொதுவாக மசாலா மற்றும் மூலிகைகள் கொண்டிருக்கின்றன, அவை பருவகால மாற்றங்களில் உங்களை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.



Click it and Unblock the Notifications