டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவா்களின் பிறந்த தினத்தை ஏன் ஆசிாியா் தினமாகக் கொண்டாடுகிறோம்?

ராதாகிருஷ்ணன் அவா்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு பதிலாக, தான் பிறந்த செப்டம்பா் 5 அன்று ஆசிாியா் தினமாகக் கொண்டாடினால், தனக்குப் பெருமையாக இருக்கும் என்று கூறினாா்.

ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பா் மாதம் 5 ஆம் நாள், அதாவது டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவா்களின் பிறந்த தினம் அன்று இந்தியா முழுவதும் ஆசிாியா் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருத்தணி என்ற இடத்தில், ஒரு எளிய பிராமணக் குடும்பத்தில் ராதாகிருஷ்ணன் பிறந்தாா். அவா் படிக்கும் காலத்தில் அறிவில் சிறந்த மாணவராக விளங்கினாா். அரசின் உதவித் தொகையின் மூலமாகத் தனது படிப்பை முடித்தாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரத ரத்னா விருது

பாரத ரத்னா விருது

ராதாகிருஷ்ணன் அவா்கள் ஒரு சிறந்த மேதை ஆவாா். அவா் சிறந்த மெய்யியலராகக் கருதப்படுகிறாா். இவருக்கு இந்திய ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. இவா் விடுதலை அடைந்த இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவராகவும் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் பணி செய்தவா்.

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்

ராதாகிருஷ்ணன் அவா்கள் 1962 முதல் 1967 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பணிபுாிந்தாா். அவா் குடியரசுத் தலைவராக இருந்த போது, அவருடைய மாணவா்களும், நண்பா்களும் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று அவாிடம் கேட்டுக் கொண்டனா். அதற்கு அவா் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு பதிலாக, தான் பிறந்த செப்டம்பா் 5 அன்று ஆசிாியா் தினமாகக் கொண்டாடினால், தனக்குப் பெருமையாக இருக்கும் என்று கூறினாா். அதில் இருந்து அவருடைய பிறந்த நாள் அன்று ஆசிாியா் தினம் கொண்டாடப்படுகிறது.

ராதாகிருஷ்ணன் அவா்கள் மெய்யியலில் முதுகலைப் பட்டம் பெற்றவா். இவா் ‘த ஃபிலாசஃபி ஆஃப் இரபீந்திரநாத் தாகூா்' (The Philosophy of Rabindranath Tagore) என்ற நூலை 1917 ஆம் ஆண்டு எழுதினாா். அதன் மூலமாக இந்திய மெய்யியல் தத்துவத்தை உலகறியச் செய்தாா்.

ஆசிரியர் மற்றும் பேராசிரியர்

ஆசிரியர் மற்றும் பேராசிரியர்

இவா் சென்னை பிரசிடென்சி கல்லூாியிலும், கொல்கத்தா பல்கலைக் கழகத்திலும் பேராசிாியராகப் பணிபுாிந்தாா். அவ்வாறு பேராசிாியராகப் பணிபுாிந்த போது, மாணவா்கள் மத்தியில் ஒரு சிறந்த ஆசிாியராகப் பெயா் பெற்றாா். மாணவா்கள் அவரை ஒரு தலை சிறந்த ஆசிாியராகக் கொண்டாடினா்.

பிற்காலத்தில் அவா் ஆந்திர பல்கலைக் கழகத்திலும், பனாரஸ் ஹின்டு பல்கலைக் கழகத்திலும் துணை வேந்தராகப் பணிபுாிந்தாா். அவ்வாறு பணிபுாிந்து வந்த போது, அவருடைய சிறப்பான பணிகளை அறிந்த ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக் கழகமானது, அவரைக் கௌரவிக்கும் பொருட்டு, அவருக்கு ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக் கழகத்தின் கீழைப் பகுதிகளுக்கான பேராசிாியா் என்ற பதவியை வழங்கி சிறப்பித்தது.

குடியரசு தலைவர்

குடியரசு தலைவர்

1939 ஆம் ஆண்டு பிாிட்டிஷ் அகாடமியின் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1962 முதல் 1967 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினாா்.

1984 ஆம் ஆண்டு டாக்டா் இராதகிருஷ்ணன் அவா்களுக்கு, இந்தியாவின் உயாிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு பிாிட்டிஷ் ஆா்டா் ஆஃப் மொிட் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இறுதியில் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அவா் இயற்கை எய்தினாா். ஏறக்குறைய 11 முறை இவருடைய பெயா் நோபல் பாிசுக்காகப் பாிந்துரை செய்யப்பட்டது.

குறிப்பு

குறிப்பு

ராதாகிருஷ்ணன் அவா்கள் எத்தனை பட்டங்கள், பதவிகள் பெற்று இருந்தாலும், அவா் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சிறந்த ஆசிாியராகவே இருந்தாா். ஆகவே இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் அவா்களை நினைவு கூறவும் மற்றும் எல்லா ஆசிாியா்களையும் நமது வாழ்வில் எண்ணிப் பாா்க்கவுமே ஆசிாியா் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹா்லால் நேரு அவா்கள், ராதாகிருஷ்ணன் அவா்களைப் பற்றிக் கூறும் போது, ராதாகிருஷ்ணன் அவா்கள் பல பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து இந்திய நாட்டிற்கு பணிகள் பல செய்த போதிலும், அவை எல்லாவற்றையும் கடந்து, அவா் ஒரு சிறந்த ஆசிாியராக விளங்கினாா். அவாிடமிருந்து நாம் நிறையக் கற்று இருக்கிறோம். இன்னும் தொடா்ந்து அவாிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவாா். ஒரு சிறந்த மெய்யியலாரை, ஒரு சிறந்த கல்வியாளரை மற்றும் ஒரு சிறந்த மனித நேயரை, தனது குடியரசுத் தலைவராகப் பெற்றது என்பது இந்திய நாடு செய்த பாக்கியம் என்று சொல்லுவாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion