Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
வீடு மற்றும் பூஜையில நாம ஏன் மா இலையை பயன்படுத்துறோம்... அதற்கான ஆன்மீக காரணம் என்ன தெரியுமா?
புராணங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற பல இந்து வேதங்களில் மாம்பழம் குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் அன்பு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.
மாம்பழம் 'பழங்களின் ராஜா' என்று கருதப்படுகிறது. இந்த ஜூசி மற்றும் சுவையான பழத்தை ருசிக்க மக்கள் ஆண்டு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மாம்பழம் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் சின்னம். இந்து மதத்தின் அனைத்து சடங்குகளிலும் மற்ற மதங்களிலும் மாம்பழம் சில அல்லது வேறு வடிவத்தில் பயன்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம். இந்தியாவின் வேதங்களில் மாம்பழத்தைக் கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும். இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.

உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். இந்து மதத்தில் மாம்பழம், அதன் மொட்டுகள், இலைகள் மற்றும் மரத்தின் பிற பகுதிகள் மிகவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக குறிப்பிடப்படுகிறது. மரம் மற்றும் இலைகள் பல சமூக மற்றும் மத விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. மாம்பழம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மீக ரீதியாக மாம்பழம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கருவுறுதல் சின்னம்
புராணங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற பல இந்து வேதங்களில் மாம்பழம் குறிப்பிடப்பட்டுள்ளது. பழம் அன்பு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.

மா இலைகள் அடையாளம்
பொதுவாக இந்த பண்டிகைகள் மற்றும் பூஜைகளில் மா இலைகளை பூஜைக்கும் நம் வீட்டின் வாசலிலும் கட்டுகிறோம். பூஜைகளில், மா இலைகள் மற்றும் மேல் தேங்காய் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பானை கடவுளுக்கு அருகில் வைக்கப்படுகிறது. இது பூர்ணகும்பம் என்று அழைக்கப்படுகிறது. இது லட்சுமி தேவியின் சின்னமாக கருதப்படுகிறது. தேங்காய் தெய்வீக உணர்வையும், பானை அன்னை பூமியையும், தண்ணீர் உயிர் கொடுப்பதையும், மா இலைகள் வாழ்க்கையையும் குறிக்கிறது.

செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம்
பல்வேறு சமயங்களில் மா இலைகளை தோரணம் போல் கதவின் முன் தொங்க விடுவார்கள். மா இலைகள் வீட்டிற்கு செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது. இது தீய கண் திருஷ்டிகளை விரட்டும். மேலும், பல ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் இது வீட்டில் கட்டப்படுகிறது.

சமண மதத்தில் முக்கியத்துவம்
சமண மதம் இந்தியாவிலுள்ள மதங்களில் ஒன்றாகும். பண்டைய இந்திய சமயமாக இருக்கும் சமண மதத்தில் நல்ல நெறிகள் பின்பற்றப்படுகிறன. சமணத்தில் ஜெயின் கடவுள் ஒரு மாமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, சமணர்களுக்கு மாம்பழம் முக்கியத்துவம் வாய்ந்தது.

பௌத்தத்தில் முக்கியத்துவம்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அமைத்திருக்கும் ஒரு நகரம்தான் ஷ்ரவஸ்தி என்று குறிப்பிடப்படுகிறது. புத்தர் ஷ்ரவஸ்தியில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியதால் மாம்பழம் பௌத்தர்களுக்கு புனிதமானது. புத்தர் மன்னரின் தோட்டத்திற்குச் சென்று, ஒரு மாம்பழத்தை உண்டு, விதைகளை நட்டார், அதில் இருந்து ஒரு மரம் முளைத்து மலர்ந்தது, இது ஆனந்தபோதி மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் கீழ் புத்த துறவிகள் தியானம் செய்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











