Just In
- 1 hr ago
இன்றைய ராசிப்பலன் (14.04.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…
- 19 hrs ago
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- 19 hrs ago
உங்கள் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய எளிய உணவுகள் என்ன தெரியுமா?
- 21 hrs ago
இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இத சொல்ல மறந்துடாதீங்க...!
Don't Miss
- News
ஒரே நாளில் 7.29லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. கட்டுக்குள் வர நீண்ட காலம் ஆகும்.. உலக நாடுகள் பீதி
- Movies
இவ்ளோ டைட்டான டிரெஸ்ல இப்படி உட்காந்திருக்கீங்களே.. ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் பதற வைக்கும் சாக்ஷி!
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முருகனுக்கு சேவல் கொடி, மயில் வாகனம் எப்படி வந்தது-ன்னு தெரியுமா?
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கடவுள் முருகப் பெருமான். முருகனின் மிகவும் முக்கியமான திருவிழா தான் சூரசம்ஹாரம். இந்துக்களால் கொண்டாடப்படும் இந்த திருவிழா ஸ்கந்த சஷ்டி அல்லது கந்த சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
முருகப் பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்தார். இந்த சூரபத்மனை அழித்த நிகழ்வு தான் சூரசம்ஹாரம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா சூரசம்ஹாரம். இப்போது கந்த சஷ்டி அல்லது சூரசம்ஹாரத்தின் பின்னணியில் உள்ள கதை, முக்கியத்துவம் மற்றும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது குறித்து விரிவாக காண்போம்.

2020 சூரசம்ஹாரம் எப்போது?
சூரம்சம்ஹாரம் அல்லது கந்த சஷ்டி 2020 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியானது தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் ஆறாம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

சூரசம்ஹாரம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
கந்த சஷ்டி திருவிழாவானது 6 நாட்கள் கொண்டாடப்படும். அதில் ஆறாம் நாளில் பக்தர்கள் கடுமையான விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதத்தின் 6 ஆம் நாளில் வருவது தான் சஷ்டி. இந்த நாளில் மேற்கொள்ளும் விரதத்தை கந்த சஷ்டி விரதம் என்றும் அழைப்பார்கள்.
தென்னிந்தியாவில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன. கந்த சஷ்டி தினத்தன்று முருகன் கோவில்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதிலும் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான திருசெந்தூர் கோவிலில் சூரசம்ஹார கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடக்கும். சூரசம்ஹார தினத்தன்று இக்கோவியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இந்த சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிப்பார்கள்.

சூரசம்ஹாரம் குறித்த புராண கதை
சூரசம்ஹாரம், சூரபத்மன் என்னும் அரக்கனை தனது வேல் கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றியைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் பற்றிய புராணக் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புராணங்களின் படி, சூரபத்மன் என்னும் அசுரன் தேவர்களை சித்திரவதை செய்து வந்தான். இதிலிருந்து விடுபட தேவர்கள் பிரம்மரிடம் சென்று உதவி கேட்டனர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும் என்று பிரம்மர் கூற, தேவர்கள் கயிலாயம் சென்று சிவனிடம் உதவி கேட்டனர். இதனால் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் முருகனை உருவாக்கினார். பின் திருச்செந்தூரில் முருகன் சூரபத்மனை போரிட்டு வென்று தேவர்களைக் காத்தார். மொத்தத்தில் இந்த அசுரனை அழிக்கவே முருகன் அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மயில், சேவல் கதை
சூரபத்மனுக்கு எதிரான போரின் போது அன்னை பார்வதி முருகனுக்கு சக்தி மிகுந்த வேலாயுதத்தைக் கொடுத்தார். போரின் போது, முருகன் முதலில் சூரபத்மனின் மகன் பானுகோபன், சிங்கமுகா சூரன், பின் தலைமை அமைச்சர் தருமகோபன் மற்றும் அவனது 3000 மக்களும் முருகனின் வேலால் வீழ்த்தப்பட்டனர். இறுதியில் நின்றது சூரபத்மன் தான். இவர் முருகனுடன் மாய போர் புரிந்தான். முருகனின் வேலில் இருந்து தப்பிப்பதற்கு பல மாயங்களைப் புரிந்து தப்பி வந்தான். அப்போது திருச்செந்தூரின் அருகில் உள்ள மரப்பாடு என்னும் மாந்தோப்பில் மாமரமாக இருந்த சூரபத்மனை முருகனின் வேல் இரண்டாக பிளந்து அழித்தது. பின் அந்த இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகனின் கொடியாகவும், வாகனமாகவும் மாறின.

நாழிக்கிணறு
போர் முடிந்த பின், முருகனின் வேல் கங்கையில் சென்று நீராடி தோஷம் நீக்கி, மீண்டும் முருகனிடம் வந்தது. அப்போது முருகன் அந்த வேல் கொண்டு கடற்கரையின் ஓரத்தில் குத்தும் போது, நீர் பீறிட்டு வந்தது. அது தான் நாழிக்கிணறு. அந்த கிணற்றின் நீரையும், மணலையும் கொண்டு முருகன் சிவலிங்கத்தை செய்து பூஜை செய்தார்.