Latest Updates
-
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...!
இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் கட்டாயம் முட்டாளாகத்தான் இருப்பார்களாம் தெரியுமா?
விதுர நீதியில் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் முட்டாளா? இல்லையா? என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து விடலாம். முட்டாள்கள் எப்பொழுதும் தன்னுடைய முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஒரு மனிதன் புத்திசாலியா? இல்லையா? என்பதை அவர்களின் செயல்பாடுகளும், அவர்கள் எடுக்கும் முடிவுகளும்தான் உணர்த்தும். கடினமான சூழ்நிலையில் தவறான முடிவெடுப்பது உங்கள் வாழ்க்கையையே சிதைக்கக்கூடும். மகாபாரதத்தின் முக்கியநபரான மகாஞானி விதுரர் தனது ஞானத்தைக் கொண்டு விதுர நீதி என்னும் நூலை இந்த உலகிற்கு வழங்கியுள்ளார்.

விதுர நீதியில் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் முட்டாளா? இல்லையா? என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து விடலாம். முட்டாள்கள் எப்பொழுதும் தன்னுடைய முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த பதிவில் விதுரர் கூறும் முட்டாள்களின் அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

முதல் அறிகுறி
இவர்கள் வேதங்களை பற்றி அறியாதவர்களாக இருப்பார்கள், அதனை பெருமையாக நினைப்பார்கள். மேலும் காற்றில் கோட்டைக் கட்டுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். தன்னுடைய முயற்சியோ, உழைப்போ இன்றி தனக்கான செல்வத்தை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக நியாயமற்ற வழிகளைத் தேடுவார்கள்.

இரண்டாம் அறிகுறி
தன்னிடம் இருக்கும் பொருட்களைப் பற்றி நினைக்காமல் மற்றவர்களிடம் இருக்கும் பொருட்களை பார்த்து கவலையும், பொறாமையும் படுபவர்கள், மேலும் தனது நண்பர்களுடன் வஞ்சக உணர்வுடன் பழகுபவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

மூன்றாம் அறிகுறி
ஆசைப்படக் கூடாத விஷயங்களின் மீது ஆசைப்படுபவர்கள், அதனை நியாயமென கருதுபவர்கள், சக்திவாய்ந்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் கண்டிப்பாக முட்டாள்களாக இருப்பார்கள்.

நான்காம் அறிகுறி
தனது எதிரிகளை நண்பர்களை கருதுபவர்களும், தனது நண்பர்களை எதிரியாக கருதுபவர்களும், அவர்களுக்கு தீங்கு செய்பவர்களும் முட்டாள்களாக கருதப்படுகிறார்கள்.

ஐந்தாம் அறிகுறி
தனது எதிர்கால திட்டங்களை பற்றி அனைவரிடமும் கூறிக்கொண்டு, யாரையும் நம்பாமல் அனைவரின் மீதும் சந்தேகம் கொண்டு, குறுகிய நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை நீண்ட நேரம் செய்பவர்கள் நிச்சயமாக முட்டாளாக இருப்பார்கள்.

ஆறாம் அறிகுறி
மற்றொருவரின் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக செல்பவர்கள், மற்றவர்கள் கேட்காமலேயே அதிகம் பேசுபவர்கள், நம்பக்கூடாதவர்களை நம்புகிறவர்கள், நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருக்கிறவர்கள் முட்டாள்களிலேயே மோசமான முட்டாளாக இருப்பார்கள்.

ஏழாம் அறிகுறி
குற்றம் தன் மீது இருந்தாலும் அதனை ஒப்புக்கொள்ளமால் மற்றவர்கள் மீது பழி சுமத்துபவர்கள் மேலும் பலவீனமானவர்கள் மீது கோபத்தை காட்டுபவர்கள் கண்டிப்பாக முட்டாளாக இருப்பார்கள்.

எட்டாம் அறிகுறி
ஒரு மனிதன் தனது சொந்த பலத்தைப் பற்றி அறியாமல் பொருள்களின் மீது ஆசைப்படுபவர்கள், ஒழுக்கம் மற்றும் இலாபம் இரண்டுமே இல்லாமல் போதுமான வழிகளை பின்பற்றாமல் ஆசையை மட்டும் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள்தான்.

ஒன்பதாம் அறிகுறி
தகுதி அற்றவர்களுக்கு அறிவுரை கூறுபவர்கள், மோசமான ஆட்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள், கஞ்ச குணம் கொண்டவர்களிடம் அடைக்கலம் கொள்பவர்கள் புத்தியில்லாதவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











