For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் தொல்லைகள் நீங்க... கொடுத்த கடன் வசூலாக இந்த பரிகாரங்களை பண்ணுங்க..

ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள் நீங்கும். 21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும். கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செ

|

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல இன்றைக்கு பிரச்சினைகள் இல்லாத வீடே இல்லை. கடன் பிரச்சினை, தீராத நோய்கள், கண் திருஷ்டியால் மன அமைதி பாதிப்பு, கொடுத்த பணம் திரும்ப வராமல் போவது என பல்வேறு பிரச்சினைகளால் அவதிக்கு ஆளாகின்றனர். நமது வீட்டிலேயே காலை அல்லது மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபட மன அமைதி ஏற்படும். விளக்கேற்றுவது அற்புதமான மருந்து. குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிசிகள் சொல்லிய பரிகாரம்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால் ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும். சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

Astrological Remedies For Success And Growth

சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி,அர்ச்சனை செய்து வழிபட,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட கடன் பிரச்சினை தீரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Astrological Remedies For Success And Growth

These simple remedies will give you success, growth and prosperity.Actually remedies passed from generation to generation and can actually help you.To remove chronic problems in life, light a diya in front of Lord Ganesha everyday this apart pray to the trunk of Lord Ganesha everyday and your problems will vanish.
Story first published: Monday, October 21, 2019, 11:22 [IST]
Desktop Bottom Promotion