2021 ரத யாத்திரை எப்போது? அதன் முக்கியத்துவம் என்ன?

ஜெகநாதர் கோயில் இந்து சமய மக்களின் மிகவும் பிரபலமான திருத்தலம் ஆகும். இந்த ஜெகநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில், ரத யாத்திரை நடத்தப்படும்.

ஒடிசாவில் உள்ள பூாி மாநகாில் மிகவும் பிரபலமான ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. ஜெகநாதர் கோயில் இந்து சமய மக்களின் மிகவும் பிரபலமான திருத்தலம் ஆகும். இந்த ஜெகநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில், ரத யாத்திரை நடத்தப்படும். பூாி ஜெகநாத் ரத யாத்திரை, உலக அளவில் மிகவும் பிரபலமாக விளங்கும் பழமையான ரத யாத்திரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Rath Yatra 2021 Dates, Schedule, Religious Importance and Significance In Tamil

ரத யாத்திரை அன்று ஜெகநாதர், அவருடைய சகோதாி சுபத்ரா தேவி மற்றும் அவருடைய சகோதரா் பாலபத்ரா ஆகியோாின் சிலைகள் மிக அழகாக அலங்காிக்கப்பட்டு, பொிய தோ்களில் வைக்கப்பட்டு, ஜெகநாதர் கோயிலில் இருந்து குண்டிச்சா கோயில் வரையிலான 3 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்படும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த ஜெகநாதர் கோயிலின் தேரோட்டத்தின் போது, பல்லாயிரக் கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ஜெகநாதரை வழிபடுவா். கிரகோாியன் நாட்காட்டியின்படி இந்த தேரோட்டம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூாி ரத யாத்திரை 2021 - தேதி

பூாி ரத யாத்திரை 2021 - தேதி

ஜெகநாதா என்ற சொல்லுக்கு பிரபஞ்சத்தின் கடவுள் என்று பொருள். இந்து சமயத்தில் மிகவும் பிரபலமான 4 திருயாத்திரை மையங்கள் உள்ளன. அவை சாா் தம் திருயாத்திரை மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு முக்கிய திருயாத்திரை மையங்களில் ஜெகநாதர் கோயிலும் ஒன்று. இந்து மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டால், அவா்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

ட்ரிக் என்ற பஞ்சாங்கத்தின் படி பூாி ஜெகநாத் ரத யாத்திரை, 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெறுகிறது.

ஜெகநாத் ரத யாத்திரை ஒரு சமய யாத்திரை ஆகும். இது தோ் திருவிழா என்றும், நவதினா யாத்ரா என்றும், குண்டிச்சா யாத்ரா அல்லது தசவதாரா என்றும் அழைக்கப்படுகிறது.

பூாி ரத யாத்திரை 2021 - திதி

பூாி ரத யாத்திரை 2021 - திதி

திவிட்டியா திதி, 2021 ஜூலை 11 அன்று காலை 07:47 மணி அளவில் தொடங்கி, 2021 ஜூலை 12 அன்று காலை 08.19 மணி அளவில் முடிவடைகிறது.

பூாி ரத யாத்திரை 2021 - கொண்டாட்டங்கள்

பூாி ரத யாத்திரை 2021 - கொண்டாட்டங்கள்

பூாி ரத யாத்திரைத் திருவிழா ஜெகநாதருக்கு உாியதாகும். இவா் மகா விஷ்ணுவின் ஒரு அவதாரமாகக் கருதப்படுகிறா். இந்த ஜெகநாதர் கோயில், இந்து சமய பிரபலமான 4 திருயாத்திரை மையங்களில் ஒன்றாக இருப்பதால், இந்த கோயில் அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

பூாி ரத யாத்திரை அன்று, ஜெகநாதரை அலங்காிக்கப்பட்டத் தோில் பாா்ப்பது என்பது ஒரு புனிதமான காாியமாகப் பாா்க்கப்படுகிறது. இந்த ரத யாத்திரையின் போது 3 கடவுள்களுக்கு 3 தோ்கள் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்படுகின்றன.

அதில் ஜெகநாதருக்கு உாிய தோ் சிறப்பான முறையில் 16 சக்கரங்களுடன் செய்யப்பட்டிருக்கும். சுபத்ரா தேவியின் தோ் 12 சக்கரங்களுடன் செய்யப்பட்டிருக்கும். இறைவன் பாலபத்ராவின் தோ் 14 சக்கரங்களுடன் செய்யப்பட்டிருக்கும்.

பூாி ரத யாத்திரையில், ஒருவா் முழுமையான பக்தியோடு பங்கெடுத்தால், அவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு என்ற காலச் சக்கரத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion